Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.
மாற்றுப் பாதை’யைத் தொடங்கும்போது, சில வரையறைகளை நாம் வைத்திருந்தோம். அதில் ஒன்று, இப்பகுதி யில் இடம்பெறும் தலித் எழுத்தாளர்கள் தங்களுடைய ஆக்கங்களை நூலாக வெளியிட்டிருக்க வேண்டும் என்பது. ஆனால் சுதாகர் கத்தக் அவர்களுக்கு இது பொருந்தாது. எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர், இன்று வரை தன் எழுத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இதுவரை பதினாறு சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அந்த எழுத்துகளின் தீவிரமும் உண்மை யும் அவருக்கு இந்த விதிவிலக்கை வழங்கி இருக்கின்றன. ஓர் எழுத்தாளர் தான் வாழ்கின்ற காலத்திற்கும் சமூகத்திற்கும் உண்மையாக இருப்பதும், அவர் அதற்கான புகழ் வெளிச்சங்களைத் தேடி அலையாமல் இருப்பதும் இன்று அரிதான செய்திதான். ஆனால் தன்னுடைய ஆழ்ந்த வாசிப்பின் ஊடே தன்னை சூழ்ந்திருக்கின்ற சமூகத்தின் மீதான தேடலிலும், அதிதீவிரமான எழுத்தின் மீதான நம்பிக்கை வெளியிலும் தகவமைத்துக் கொள்கின்ற போது, புகழ் மயக்கத்திற்கு ஆட்படாமல் அப்பட்டமாக இருப்பது என்பதுதான் சுதாகர் கத்தக்கின் இருப்பு! வணிக இதழ்களில் உறுதியற்ற எழுத்துகளை…
தமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெடுத்தார் அறிவு ஆசான் பண்டிதர் அயோத்திதாசர். வர்ணத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை தமிழகத்தில் மீட்டெடுக்க தத்துவ பிரம்பெடுத்தவர் பண்டிதர் ஆவார். லூதரால் தொடங்கப்பட்ட மதச் சீர்த்திருத்தம், ஐரோப்பிய மக்களின் விடுதலைக்கு துணை இருந்தது. முகமது நபியின் மதப்புரட்சி அரேபியர்களின் அரசியல் எழுக்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தியாவில் சந்திரகுப்த மௌரியரால் நடத்தப்பட்ட அரசியல் புரட்சிக்குப் புத்தரின் மதப்புரட்சியும் சமுதாயப் புரட்சியும் முன்னோடியாக இருந்தது என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுவார். அதைப்போலவே அம்பேத்கரின் பௌத்தமதப் புரட்சி தலித் மக்களின் விடுதலைக்கு வழி வகுத்தது என்றால் அதற்கு அயோத்தி தாசரின் பௌத்தமே முன்னோடியாக இருந்தது. தமிழகத்தில் தலித் மக்களின் அரசியல் மறுமலர்ச்சிக்கும், மதமறுமலர்ச்சிக்கும் தோற்றுவாயாக இருந்தவர், தமிழ் மண்ணில் தத்துவத்தையும், தன்மானத்தையும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் அயோத்தி தாசர் ஆவார். பார்ப்பனர்,…
அரிதினும் அரிதாகக் கருதப்பட்ட கயர்லாஞ்சிப் படுகொலை வழக்கில், பந்தாரா மாவட்ட நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு, உண்மையில் வரலாற்றுச் சிறப்புடையதுதானா? நாடு முழுவதிலும் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் பிற தலித் வன்கொடுமை வழக்குகளில் அளித்துவரும் தீர்ப்புகளிலிருந்து கயர்லாஞ்சிப் படுகொலை வழக்குத் தீர்ப்பு மாறு பட்டதுதானா? இந்தியா முழுவதிலும் நீக்கமற நிறைந்த கிடக்கும் சாதிவெறியர்களுக்கு அதிர்ச்சி யளிக்கக் கூடியதுதானா? நீண்ட நெடுங்காலமாக தாங்கள் சந்தித்து வரும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான நீதியைப் பெற்றுத்தரும் வலிமை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உண்டு என்ற நம்பிக் கையை தாழ்த்தப்பட்ட மக்களிடையே உருவாக்கும் திறன் கொண்டதுதானா அந்தத் தீர்ப்பு? கயர்லாஞ்சி யில் நடந்த படுகொலை சாதியக் கண்ணோட்டத்து டன் நடத்தப்பட்ட பெருங்குற்றம் என்பதால்தான் பந்தாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மரண தண்டனை அளித்தாரா? இனிமேல் சாதிப் பின்புலத்துடன் நடைபெறும் படுகொலைகளுக்கு இத்தகையத் தீர்ப்பை நாம் பிற நீதிபதிகளிடமும் எதிர்பார்க்கும் வாதத்துடன்தான் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதா? போன்ற கேள்விகள்…
தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய மதுரை சென்னகரம்பட்டியில், சாதிவெறியுணர்வும், தீண்டாமைக் கருத்துணர்வும் கொண்ட கள்ளர் சாதியைச் சார்ந்த பெரும் கும்பல், திரண்டு சென்று, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் இருவரை நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்தது. குரூரமான சாதிய மண்டபங்களாக இன்று வரை செயல்பட்டுக் கொண் டிருக்கும் இந்திய கிராமங்களில், தாழ்த்தப்பட்ட மக்களைச் சாதி இந்துக்கள் மிகப் பயங்கர ஆயுதங் களுடன் ஊரோடு திரண்டு சென்றுதான் தாக்கு கிறார்கள். படுகொலையும் செய்கிறார்கள். அப்படிப் பட்ட கொடூரச் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையானது சாதிவெறியுணர்வும், தீண்டா மைக் கொள்கையும்தான். இந்த அடிப்படையான சமூக அறிவில்லாமல்தான் விசாரணை நீதிபதிகளும் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தீர்ப்பெழுதி வருகிறார்கள். 1987ஆம் ஆண்டிலிருந்தே சென்னகரம்பட்டி சாதி இந்து கள்ளர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கோயில் நிலத்தை குத்தகை எடுப்பது தொடர்பான சிக்கல்கள் இருந்து வந்தன. சென்ன கரம்பட்டியில் உள்ள அம்மச்சியம்மன் கோயில் நிலத்தை நீண்டகாலமாகவே கள்ளர் சாதியினர்தான் குத்த¬க்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.…
தமிழ்நாட்டையே அவமானப்படச் செய்த திண்ணியம் வன்கொடுமை வழக்கும் மிக மோசமான முறையில் முடிவுக்கு வந்தது. திருச்சி அருகேயுள்ள திண்ணியம் என்ற கிராமத்தில், தொகுப்பு வீடு ஒதுக்கித் தர கள்ளர் சாதியைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமியின் கணவர் சுப்பிரமணியனிடம் ரூபாய் இரண்டாயிரத்தைத் தலித் சமூகத்தைச் சார்ந்த கருப்பையா என்பவர் லஞ்சமாகக் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும், வீடு ஒதுக்கித் தரவில்லை என்பதால், கருப்பையா தான் கொடுத்தத் தொகையை திருப்பித் தருமாறு பலமுறை சுப்ரமணியனிடம் கேட்டு கெஞ்சியுள்ளார். தொகை யைத் திருப்பித் தர ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் மறுத்ததினால், பணத்தை திருப்பித் தரச் செய்யும்படி கிராம மக்களுக்கு அறிவிப்புச் செய்யும் நோக்கத் தோடு தண்டோரா அடித்துத் தெரியப்படுத்தினார் கருப்பையா. அப்போது அவருடன் ராமசாமி, முருகேசன் என்ற இரு தலித் சமூகத்தவரும் சென்றுள்ளனர். அதை அறிந்த ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் தங்களைக் கேவலப்படுத்தி விட்டதாக ஆத்திரம் கொண்டு, கருப்பையாவை வீட்டுக்கு அழைத்து வரச் செய்து கடுமையாகத்…