Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » நாளை நடப்பது தைப்பூசம் திருவிழா அல்ல!
    கட்டுரைகள்

    நாளை நடப்பது தைப்பூசம் திருவிழா அல்ல!

    VendhanBy VendhanJanuary 25, 2022No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நாளை தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய குடியரசு நாள் அணிவகுப்பில் பாபாசாகேப் அம்பேட்கர் அவர்களின் உருவச்சிலை இல்லை என சிலர் சொல்கிறார்கள். இது உறுதியான தகவலா என தெரியவில்லை.

    நாளை நடப்பது தமிழ்நாட்டை சார்ந்த தைப்பூசம் சிறப்பு நாள் அணிவகுப்பு நிகழ்ச்சியாக இருந்திருந்தால், அதில் பாபாசாகேப் சிலை ஏன் இல்லை என கேட்பது முட்டாள்தனமானது. ஆனால் நடக்க இருப்பதோ இந்திய குடியரசு நாள் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி.
    அதாவது இந்தியா குடியரசு என பிரகடனப்படுத்திக்கொள்வதற்கு ஆதாரமான இந்திய அரசமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள். அந்த இந்திய அரசமைப்புச் சட்டக்குழுவிற்கு தலைவராக இருந்த பாபாசாகேப்பை புறக்கணித்துவிட்டு இந்தியாவில் ஒருவர் குடியரசு நாளை கொண்டாடுகிறார் என்றால், அவருக்கு ஒன்று வரலாறு தெரியவில்லை என்று பொருள் அல்லது தெரிந்து புறக்கணிக்கப்பட்டால் அது அவரின் மீதான வன்மம் என்று பொருள். இந்திய குடியரசு நாள் என்பதே அம்பேட்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கொண்டாடுவதை பார்த்து வருகிறோம்.
    இந்த எளிய உண்மையெல்லாம், இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, இந்திய அரசமைப்புச்சட்டத்தின் படி தமிழ் நாட்டின் முதலமைச்சருக்கு (Protocol) தெரியாமல் இருக்காது. அதனால், இந்திய குடியரசு நாளில் அதற்கு ஆதாரமாக விளங்கிய பாபாசாகேப்பை தமிழ்நாட்டின் குடியரசு நாள் அணிவகுப்பில் புறக்கணிக்க மாட்டார் என்றே நம்புவோம். ஒருவேளை, பாஜக தமிழ்நாட்டை புறக்கணித்ததால், நாங்கள் வட இந்திய தலைவர்களை புறக்கணிக்கிறோம் என பாபாசாகேப்பை புறக்கணிக்கும் எதிர்வினையாக இருந்தால், இது பள்ளிக்கூட சிறுவர்களின் முட்டாள்தனமான எதிர்வினைக்கு ஒப்பானது என்பது என் கருத்து. இந்த அணுகுமுறை முதிர்ச்சி வாய்ந்த தகுதிவாய்ந்த இடத்தில் இருப்பவர்களுக்கு அழகில்லை. ஏனெனில் பாஜக வேறு; திமுக வேறு. பாஜக வேண்டுமானால் முட்டாள்தனமாக செயல்படலாம். நாங்கள் அப்படியல்ல என்ற பகுத்தறிவோடு திமுக பகுத்தறிவற்ற பாஜக போன்று செயல்படாது என்று நம்புகிறேன்.
    எந்த ஒரு முன்முடிவும் இன்றி நாளை பார்ப்போம்.

    – வேந்தன். இல

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஆசை தான் துன்பத்துக்கு காரணமா?
    Next Article குடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்
    Vendhan

      Related Posts

      கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்

      February 12, 2026

      பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து அறிஞர் அண்ணாவின் மூன்று எழுத்தோவியங்கள்.

      February 3, 2026

      எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

      December 6, 2025

      Comments are closed.

      Newsletter

      Recent Posts
      • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
      • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
      • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
      • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
      • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
      Random Posts

      Dr.அம்பேத்கர் சிலையைச் சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்ட தலித் ஜோடி

      July 4, 2017

      டி.லிட் டாக்டர் பட்டம்

      January 12, 2022

      Flogged for skinning dead cow: Una dalits demand land, jobs; threaten to go on hunger strike

      October 4, 2017

      பச்சை தையல்கள்

      October 6, 2016
      Archives
      About Us
      About Us

      ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

      இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

      இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

      www.ambedkar.in
      Email Us: ambedkar.in@gmail.com
      Contact: +91 9841544115

      Facebook X (Twitter) YouTube WhatsApp
      அண்மைய பதிவுகள்

      1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

      June 2, 2026

      அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

      May 4, 2026

      Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

      April 17, 2026

      பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

      April 15, 2026
      நன்கொடையளிக்க விரும்பினால்
      Demo
      Facebook X (Twitter) Instagram Pinterest
      © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

      Type above and press Enter to search. Press Esc to cancel.

      %d