Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»கலை இலக்கியம்»கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    கலை இலக்கியம்

    கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்

    Sridhar KannanBy Sridhar KannanFebruary 12, 2026No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    லேட்டி பொன்னுமக்கா

    முன்வாசல் வழியா போகக்கூடாதுட்டீ…
    அயித்தம் பாப்பாங்க
    நம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ.
    ஏமாத்திம்மா….. அடியேன் வந்திருக்கேன்
    கும்பிகாந்துகு ஏதெங்கிலும் தரக்கூடாதா
    கஞ்சி வெள்ளமும் ஒரு துண்டு கருப்பட்டியும்
    கிட்டியாலே போதும்
    மனசுவெச்சு ஏமாத்தியம்மா எச்சிச் சோத்துல வெள்ளம் ஊத்தி
    கொண்டு தட்டுவா
    விரிச்ச முந்தியில தண்டிணியெல்லாம் ஒழுகிவிழ
    கிட்டிய சோத்த அரிச்சுத் தின்போம்.
    சட்டிப்பான கழுவணுமெங்கிலும்
    எல்லாத்துக்கும் வாற வழியதுதான்
    ஏமான் வீட்டிலயிருந்தாரெங்கி
    ஏமாத்தியோ பெண்டுபிள்ளையோ
    சத்தமிட்டு சிரிக்கப்பிடாது.
    ஏமான தொடப்பிடாது
    தண்ணிகொண்டு கொடுக்கணுமெங்கிகூட
    கொடுத்துட்டு ஓடிப்போய் சொவரு பக்கம் மறஞ்சி நிக்கணும்
    அன்யோன்யமா நெருங்கி நின்னு பேசக்கூட வரப்பிடாது
    எப்படி இந்த ஏமாத்திமாரெல்லாம் ஏமாம்மார
    கெட்டி ஆளுதோன்னு தோணும்.
    செலச் சமயம் காட்டுக்கு ஆனமேய்க்க போறயேமான்
    வெளுப்பிலபோய் அந்தியில வரும்
    இத அறிஞ்சி வச்சிகிட்டுதான்
    ஏமாத்திக ஆசைய தீத்துவைக்க
    ஆரங்கிலும் வருவானுக.
    நம்ம பௌப்பு
    பிச்சயெடுத்திட்டு கண்டும் காணாம போறது
    நமக்கு அறியாதுண்ணு ஏமாத்தி நெனப்பா.
    நம்மளும் உரியாடாத போய்கிட்டு
    நாலஞ்சி தெவசம் கழிச்சி பிச்சயெடுக்க வாறப்ப
    ஏமாத்திய பாத்து மொகக்குறி சொல்லுறது
    அம்மையிட மொகத்துல ஒரு கலக்கம் தெரியுதல்லோ
    மனசின்ற அகத்து ஒரு வல்லாத்த சலனம் ஒண்டல்லோ
    ஏமான் அறியாத அம்மைக்கும் வேறொருத்தனுக்கும் ஒரு
    தொடர்பு ஒண்டல்லோ
    பாவமல்லா எந்நாலுமிதொரு பாவமாணு
    தோஸமில்லா எந்நாலுமிதொரு தோஸமாணு
    அம்மைக்கு பகவதி தொணையொண்டு
    கொளவி குறி சொல்லி முடிக்க
    ஆருட்டையும் இதப்பத்தி மிண்டப்பிடாது
    என்று சொல்லிவிட்டு
    சூடுசோறும் கறியும் கொடுத்து
    புதுத்துணியும் கொடுத்தனுப்புவா ஏமாத்தி
    இப்படியே ஆறும் இருவர் பசியும்.

    தம்பிய பெத்தெடுத்த பச்ச ஒடம்போடு கெடக்க
    வயிறு நெறய கள்ளும் மோந்திக்கிட்டு
    வாய் நெறய விளித்துக்கொண்டே
    நல்லமொளகு, கொடமஞ்ச, நால்பா மரப்பட்ட.
    ராமச்சம்வேரு,
    ஒணங்கிபோன காட்டு நெல்லிக்காயிட்டு
    கொதிக்க வைத்த வென்னீரில் துணியை முக்கி
    அடிவயிற்றில் ஒத்தடமிட்டுக் கொடுத்துவிட்டு
    ஒடக்கு எடுக்கும் அப்பா
    அம்மாவின் கூந்தலுக்கு

    *****

    1. வெள்ளைச்சுவரில்
    கரிக்கட்டையால் வரைந்த மரங்களை அழித்தபோது
    கலைந்த பறவைகள்
    எனது சொப்பனத்தில் வந்து உட்கார்ந்து கொண்டன
    கனவில் பெய்த மழையில்
    நனையாமல் வந்த நான்
    தூங்காமல் தூங்கிக் கொண்டிருந்தபோது
    இசக்கியம்மையின் கதைப்பாடலை
    பாடிக் கொண்டாடிக் கொண்டிருந்தன
    மண் ரேடியோ குத்தவைத்திருக்கும் புளியமரம்
    சிரட்டைகளையும் நுங்குவண்டிகளையும்
    தொலைத்த நான்
    கதைகளையும் விளையாட்டுகளையும்
    போட்டு வைத்திருந்த ஓலைப்பெட்டியைத் தேடியபோது
    அம்மா சொன்னாள்
    “காக்கா” கொண்டு போச்சு

    2. நாகலிங்க பூவிற்குள் பூலிங்கமும்
    பூலிங்கத்திற்குள் நாகலிங்கமும்
    வரைந்து கொண்டிருந்த பரமனை
    பூப்பந்து முலையது செருக்கு முலையாகி
    எழுந்து தாக்கியது
    மேலும்
    சந்ராயோகத்தில்
    சரமழை உதிர்த்து பூங்கிணர் திறக்க
    காதளவு கண்ணுடையாளும்
    உளிமுனைக் கூத்தாடியும்
    கோலங்கள் பல செய்து
    புணர்ந்து தீர்த்தனர்

    ********

    கல் விளக்குகள் – காலச்சுவடு பதிப்பக வெளியீடு

    எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் தொகுத்த ராஜ்குமார் அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்
    Next Article இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து அறிஞர் அண்ணாவின் மூன்று எழுத்தோவியங்கள்.

    February 3, 2026

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025

    தலித் வரலாற்றியலில் உள்ளூர் ஆவணங்கள்

    August 9, 2025

    Comments are closed.

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.