Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » திண்ணியம்
    சமூக வன்கொடுமைகள்

    திண்ணியம்

    Sridhar KannanBy Sridhar KannanMarch 14, 2003No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழ்நாட்டையே அவமானப்படச் செய்த திண்ணியம் வன்கொடுமை வழக்கும் மிக மோசமான முறையில் முடிவுக்கு வந்தது. திருச்சி அருகேயுள்ள திண்ணியம் என்ற கிராமத்தில், தொகுப்பு வீடு ஒதுக்கித் தர கள்ளர் சாதியைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமியின் கணவர் சுப்பிரமணியனிடம் ரூபாய் இரண்டாயிரத்தைத் தலித் சமூகத்தைச் சார்ந்த கருப்பையா என்பவர் லஞ்சமாகக் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும், வீடு ஒதுக்கித் தரவில்லை என்பதால், கருப்பையா தான் கொடுத்தத் தொகையை திருப்பித் தருமாறு பலமுறை சுப்ரமணியனிடம் கேட்டு கெஞ்சியுள்ளார். தொகை யைத் திருப்பித் தர ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் மறுத்ததினால், பணத்தை திருப்பித் தரச் செய்யும்படி கிராம மக்களுக்கு அறிவிப்புச் செய்யும் நோக்கத் தோடு தண்டோரா அடித்துத் தெரியப்படுத்தினார் கருப்பையா. அப்போது அவருடன் ராமசாமி, முருகேசன் என்ற இரு தலித் சமூகத்தவரும் சென்றுள்ளனர். அதை அறிந்த ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் தங்களைக் கேவலப்படுத்தி விட்டதாக ஆத்திரம் கொண்டு, கருப்பையாவை வீட்டுக்கு அழைத்து வரச் செய்து கடுமையாகத் தாக்கினார். கருப்பையாவோடு தண்டோரா அடித்துச் சென்ற ராமசாமியையும் முருகேசனையும் கடந்த 2002 மே மாதம் 15ஆம் நாள் வீட்டிற்கு அழைத்து வந்து அடித்துக் கொடுமைப்படுத்தி மனித மலத்தை உண்ணச் சொல்லி, செருப்பால் அடித்துச் சித்ரவதை செய்தனர். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு போட்டு, தங்களின் அடங்காத சாதிவெறியை வெளிப்படுத்தினர்.

    கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காக அத்தனை கொடுமைளையும் அனுபவித்த தலித்துகள், காவல் நிலையத்தில் புகார் அளிக்கக்கூட துணிவில்லாத பிள்ளைப் பூச்சிகளைப் போல் இருந்துள்ளனர். செய்தியை அறிந்த சமூகநீதி வழக்கறி ஞர்கள், பாதிக்கப்பட்ட கருப்பையா, ராமசாமி, முருகேசன் ஆகியோரை அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மனித மலத்தை மனிதனை உண்ணச் செய்த அந்த படுகேவலமான சாதிவெறிச் செயலை அறிந்து தமிழகமே உறைந்து போனது. அநேகமாக அனைத்து ஊடகங்களும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு, குற்றவாளியான சுப்பிரமணியனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்தது. ஆனாலும் அதற்குரிய ஒப்புதலைத் தர மறுத்து விடுதலை செய்தது.

    வழக்கை லால்குடி காவல்துறை துணைக் கண்காணிப் பாளர் புலன் விசாரணை செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். சுப்ரமணியன், அவரது துணைவியர் ராஜலட்சுமி உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, கடந்த 10.9.2007 அன்று தீர்ப்பளித்தார்.

    திண்ணியம் வன்கொடுமை வழக்கில், தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும், திண்ணியம் கிராமத்தில் சாதி இந்து கள்ளர்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சாதி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவதால், தீண்டாமைக் கருத்துடன் குற்றவாளிகள் குற்ற மிழைக்கவில்லை என்றும் தீர்ப்பெழுதினார் கள்ளர் சமூகத்தைச் சார்ந்த நீதிபதி ராமமூர்த்தி. அதற்கு அவர் தரும் எடுத்துக்காட்டு எதுவென்றால், திண்ணியம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் கள்ளர் களும் தலித் சமூகத்தவரும் இணையான மரியாதை யுடன் நடத்தப்படுகிறார்கள். இரு சமூகத்தவரும் இணைந்து திருவிழா கொண்டாடுகிறார்கள். எனவே, திண்ணியம் கிராமத்தில் சாதிப் பாகுபாடு இல்லை என்று காரணம் வெட்கமில்லாமல் தீர்ப்புக்கூறினார்  ராமமூர்த்தி.

    குறைந்தபட்ச சமூக அறிவின்றி தீர்ப்பு எழுதி இருக்கும் ராமமூர்த்தி, ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத் தவரிடம் பணம் பெற்று, வீடு ஒதுக்கித்தர மறுத்து, பணத்தையும் திருப்பித் தராமல், மனித மலத்தை உண்ணச் செய்து, செருப்பால் அடித்து, பழுக்கக் காய்ச்சிய கம்பியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரைச் சூடு போட்டு சித்ரவதை செய்த குற்றவாளிக்கு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? ரூபாய் 2000 ஆயிரம் அபராதம், ஒரு மாத சிறைத்தண்டனை மட்டும்தான். குற்றம் சாட்டப்பட்ட மீதி ஏழு பேரை விடுதலை செய்து தீர்ப்பெழுதினார் ராமமூர்த்தி.

    கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் அற்பமான முறையில் விசாரித்து, நெஞ்சறிய கள்ளத் தீர்ப்புகளை எழுதி வருகிறார்கள் என்பதற்கு திண்ணியம் வன்கொடுமை வழக்கும் அதக் தீர்ப்பும் துல்லியமான சாட்சிகளாகும். வழக்கை புலன் விசாரணை செய்ய அரசால் நியமிக்கப்படும் காவல் அதிகாரிகள் வழக்கை நாசப்படுத்தும் சதித்திட்டத்தோடு, குற்ற அறிக்கை யிலும் சாட்சியங்களிலும், சாட்சிப் பொருட்களிலும் ஏராளமான குளறுபடிகளைச் செய்து வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். கீழமை நீதிமன்றங் களிலோ, உயர்நீதிமன்றத்திலோ அப்படிப்பட்ட வழக்குகள் தோல்வியுறச் செய்யப்படும்போது, அரசு மேல்முறையீடுகளைச் செய்வதில்லை. மிக நீண்ட காலமாகக் கிடப்பில் போட்டுவிடுவது அல்லது கள்ள மௌனம் காத்து வருவது என்ற போக்கை அநேகமாக அனைத்து மாநில அரசுகளும் கடைபிடித்து வருகின் றன. அவற்றில் தமிழக அரசு முதலாவது மாநிலமாக விளங்குகிறது.

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Next Article மனிதநேயர் எம்.சி. மதுரைப் பிள்ளை
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?

    March 5, 2023

    Economics Of Oppression: The Growing Precarity Of Dalit Lives In India

    September 12, 2022

    Dalit boy beaten up by teacher for touching drinking water pot in Rajasthan school, dies

    August 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    மாற்றுப்பாதை – தய்.கந்தசாமி

    July 23, 2011

    அம்பேத்கரின் தேர்தல் அறிக்கையும் இன்றைய அரசியல் நிலையும்

    April 12, 2024

    ஆசிய ஜோதி

    May 14, 2016

    ரோஹித் வெமுலா இறுதிக் கடிதம்

    January 17, 2016
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d