Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    Dr.Ambedkar

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    Sridhar KannanBy Sridhar KannanMay 4, 2026No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மதுரை: அம்​பேத்​கரை சாதித் தலை​வ​ராகப் பார்க்​கும் நிலையை மாற்ற, தமிழகத்​தில் 2027-28 கல்வி ஆண்​டிலிருந்து 3 முதல் 10-ம் வகுப்பு வரை அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்​களுக்கு கற்​பிக்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    காரைக்​குடியைச் சேர்ந்​தவர்​கள் ராஜேஷ் என்ற ராஜேஷ்குமார், விஜய் என்ற விஜயகுமார். இவர்​கள் புலிக்​குத்தி பேருந்து நிறுத்​தம் பகு​தி​யில் ஒட்​டப்​பட்​டிருந்த அம்​பேத்​கரின் சுவரொட்​டியைச் சேதப்​படுத்தி அதை வீடியா பதிவு செய்து சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​ட​தாக விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி நிர்​வாகி போலீ​ஸில் புகார் அளித்​தார்.

    அதன்​பேரில் இரு​வர் மீதும் சோம​நாத​புரம் போலீ​ஸார் எஸ்​.சி. எஸ்​.டி.வன்​கொடுமைச் சட்​டத்​தில் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்​நிலை​யில் இரு தரப்​பினர் இடையே சமரசம் ஏற்​பட்​டுள்​ள​தால் கீழமை நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை ரத்து செய்​யக்​கோரி இரு​வரும் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுவை நீதிபதி எல்​.விக்​டோரியா கெளரி விசா​ரித்​தார்.

    ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, ‘மனு​தா​ரர்​களிடம் அம்​பேத்​கர் குறித்து சரி​யான புரிதல் இல்​லை. இரு​வரும் தலா 101 அம்​பேத்​கர் வாழ்க்கை வரலாற்று நூலை வாங்​கி, அதில் ஒன்றை படிக்க வைத்​துக்​கொண்​டு, மற்ற புத்​தகங்​களை டி.கல்​லுப்​பட்​டி​யில் உள்ள முரு​கப்பா அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் படிக்​கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்​களுக்​கும், மற்ற வகுப்பு மாணவர்​களுக்​கும் வழங்க வேண்​டும்.

    இரு​வரும் புத்​தகத்தை முழு​மை​யாகப் படித்து வாய்​மொழித் தேர்​வுக்கு தயா​ராக இருக்க வேண்​டும். மேலும், அடை​யாறு புற்​று​நோய் நிறு​வனத்​துக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்​டும்’ என உத்​தர​விட்​டார்.

    அடுத்த விசா​ரணை​யின்​போது, மனு​தா​ரர்​கள் இரு​வரிட​மும் அம்பேத்கரின் வாழ்க்கை மற்​றும் பணி​கள் தொடர்​பாக 30 கேள்வி​கள் கேட்​கப்​பட்​டன. இரு​வரும் திருப்​தி​கர​மாக பதிலளித்​தனர். இதையடுத்து, புகார்​தா​ரரும் வழக்கை முடிக்க சம்​மதம் தெரி​வித்​தார்.

    இதையடுத்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: அம்​பேத்​கரின் வாழ்க்கை மற்​றும் பங்​களிப்​பு​கள் பற்றி இளைஞர்​களுக்கு ஆழமாகக் கற்​பிக்​கப்​பட​வில்​லை. அவரை சாதிக் கண்​ணோட்​டத்​தில் பார்க்​கக் கூடாது.

    அவர் முழுதேசத்​துக்​கும் சொந்​த​மானவர். அவரைப் பற்றி மாணவர்​களுக்​குக் கற்​பிக்க வேண்​டும். இந்த வழக்​கில் தலை​மைச் செயலர், பள்ளி கல்​வித்​துறைச் செயலர் ஆகியோர் எதிர்​மனு​தா​ரர்​களாகச் சேர்க்​கப்​படு​கின்​றனர்.

    இவர்​கள் மாநிலப் பாடத்​திட்​டத்​தில் மூன்​றாம் வகுப்பு முதல் பத்​தாம் வகுப்பு வரையி​லான சமூக அறி​வியல் பாடத்​தில் இந்​திய அரசி​யலமைப்பு சட்ட வரைவுக் குழு​வின் தலை​வ​ராக அம்​பேத்​கர் ஆற்​றிய பங்​கு, நீதி, சுதந்​திரம், சமத்​து​வம் மற்​றும் சகோ​தரத்​து​வம் ஆகிய அரசி​யலமைப்பு தொலைநோக்​குப் பார்​வைக்கு அவர் ஆற்​றிய பங்​களிப்​பு, சுதந்​திரப் போராட்ட இயக்​கத்​தி​லும் ஜனநாயக தேசத்​தைக் கட்​டமைப்​ப​தி​லும் அவர் ஆற்​றிய பங்​கு, பொருளா​தா​ரம், சட்​டம் மற்​றும் சமூக சிந்​தனை ஆகிய துறை​களில் அவர் ஆற்​றிய கல்​வி​சார் சாதனை​கள் ஆகிய தலைப்​பு​களில் பாடங்​களை கற்​பிக்க வேண்​டும்.

    இந்​தப் பாடத் திட்​டத்தை 2027- 2028 கல்​வி​யாண்டு முதல் அமல்​படுத்த அரசு முன்வர வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக தலை​மைச் செயலர், பள்ளி கல்​வித்​துறை செயலர் ஆகியோர் 2027 ஜன.21-ம் தேதி விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். மனு​தா​ரர்​கள் மீதான வழக்கு ரத்து செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறி​யுள்​ளார்.

    Source : Hindu Tamil

    The Hindu – Published – May 03, 2026

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleWhy India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கரின் கனவு கிராமம்!வியந்து பார்த்த மத்திய அரசு!தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமமா?

    January 23, 2026

    ஆணவ கொலைக்கு எதிராக கர்நாடகாவில் தனிச் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம்!

    January 23, 2026

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – தொடர்பு எண்கள்

    January 18, 2026

    Comments are closed.

    Newsletter

    Recent Posts
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    Random Posts

    செத்துப் போனது இருக்கட்டும்… ரோகித் என்ன சாதி?

    February 16, 2016

    பண்டிதமணி க. அப்பாதுரையார்

    February 10, 2014

    பௌத்தத்தை இந்திய மண்ணில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டியதும் நமது தலையாயக் கடமை

    June 16, 2021

    புத்தர் புதிரல்லர்

    June 28, 2020
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d