Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » “இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல… நமது உரிமை!” – எழுத்தாளர் பாமா
    நூல்கள் - வெளியீடுகள்

    “இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல… நமது உரிமை!” – எழுத்தாளர் பாமா

    Sridhar KannanBy Sridhar KannanFebruary 7, 2018No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    “நான் முதன்முதலா புக் எழுதினப்ப, என்னோட மக்களே என்னைப் புரிஞ்சுக்காம, சண்டைக்கு வந்தாங்க. ஆனா, இன்னைக்கு அவங்களே எனக்கு பாராட்டு விழா நடத்தி ஆடி, பாடிக் கொண்டாடுறாங்க” என, கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் பேசினார் எழுத்தாளர் பாமா.

    இவரது முதல் நாவலான `கருக்கு’ வெளிவந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழா, மிக உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது. இந்த விழா, மாற்று ஊடக மற்றும் பத்திரிகையாளர் மையம் சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் மற்றும் நாடகவியலாளர் அ.மங்கை, இயக்குநர் பா.இரஞ்சித், ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மாலினி சேஷாத்திரி, பதிப்பாளர் மினி கிருஷ்ணன், லயோலா கல்லூரியின் அதிபர் தந்தை ஜெயபதி, எழுத்தாளர் மாற்கு, யாக்கன் ஆகியோர் கலந்துகொண்டனர். இங்கு, பாமாவின் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான `Just One Word’ நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

    பாமா

    உலகில் அடக்குமுறைக்கு எதிராக புரட்சி ஏற்பட்ட அனைத்து நாடுகளிலும், புரட்சியின் ஒரு வடிவமாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து வெளியாகும் கலைப் படைப்புகள் இருந்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்ச் சூழலில் மூடநம்பிக்கைக்கு எதிராக, முதலாளித்துவத்துக்கு எதிராக, பெண் விடுதலைக்காக என ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கிய வகைமைகள் வௌிவந்துள்ளன. 1991-ல் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழில் தலித் இலக்கியங்கள் வர ஆரம்பித்தன. அதற்கு முன்பும் `பிறகு’ போன்ற சில நாவல்கள் வெளிவந்துள்ளன என்றாலும் காத்திரமாக முழுவிச்சில் படைப்புகள் வெளிவரத் தொடங்கியது 90-களில்தான். அந்த வகையில் ஒரு பெண்ணின் தன் வரலாற்று நூலாக வெளிவந்த `பாமா’ மிகப்பெரிய அதிர்வலைகளை தமிழ் இலக்கியச் சூழலில் ஏற்படுத்தின. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை அவர்களின் குரலிலேயே பதிவுசெய்த படைப்புகள் மிக வீரியத்துடன் தனது தரப்பு அவசியத்தைப் பேசின. சாதியப் பாகுபாடுளை ஒழித்திட, பெரும்விவாதங்களை சமூகத்தில் உண்டாக்கின. அந்தக் காலகட்டத்தில் சுஜாதா, பிரபஞ்சன், கோமல் சுவாமிநாதன் போன்றோர் `கருக்கு’ நாவலின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருந்தனர். தன் முதல் நாவலிலேயே கவனிக்கப்பெற்ற பாமா, தொடர்ந்து சங்கவி, தவுட்டுக் குருவி உள்ளிட்ட படைப்புகளை எழுதினார்.

     

    ஏற்கெனவே அவரது நாவல்களான கருக்கு, சங்கதி உள்ளிட்டவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரது சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. அந்த விழாவில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சன், “பல வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் மாற்கு என்னிடம், `நீங்கள் எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு எப்படி எழுதுவது எனச் சொல்லித்தர வேண்டும்’ என்றார். நானும் அவர்களிடம் சென்று `முதல் வரியைச் சொல்வேன். அதை முழுக்கதையாக நீங்கள் எழுதி முடிக்க வேண்டும்’ என்றேன். அதில் ஒருவர்தான் பாமா. இன்று இலக்கியங்கள் குறித்து என்னென்னவோ கோட்பாடுகள் சொல்லப்படுகின்றன. ஆனால், எல்லோராலும் எழுத முடியும். எல்லோருக்குள்ளும் கதை உண்டு. எழுத்துக்கு உண்மையாக இருக்கும்போது நல்ல கதை  உருவாகும். எழுத்து, மிக முக்கியமான கலை. எழுத்துதான் அனைத்தையுமே உருவாக்குகிறது. எனவே இளைஞர்கள் நிறைய எழுதுங்கள்” என்றார்.

    எழுத்தாளர் பிரபஞ்சன்

    “ `கருக்கு’ நாவலை நான் கல்லூரிக் காலங்களில் படித்துச் சிலாகித்துள்ளேன். அதைப் பாராட்டிப் பேசுவேன் என எதிர்பார்க்கவில்லை” எனப் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “இன்று ஒவ்வொரு தனி மனிதனுமே சாதியாக பிளவுபட்டுக் கிடக்கின்றான். ஐந்து நண்பர்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சாதியின் அங்கமாகவே உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு நாவல் இன்றும் படிக்கப்படுகிறது என்றால், அதன் தேவை இன்றும் இருக்கிறது என்றே அர்த்தம். என்ன காரணத்துக்காக நாவல் எழுதப்பட்டதோ, அந்தக் காரணம் முழுமைபெறவில்லை என்பதையே இது காட்டுகிறது. சமத்துவமான நிலை உருவாக, ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் அத்தனை பேரும் இணைந்து போராட வேண்டும். ஒருவன் தனது வாழ்வையும் கொண்டாட்டத்தையும் அவன் மொழியில்தான் பதிவுசெய்ய முடியும். அதுதான் இலக்கியம் .  உண்மையான கலைஞனாக இருப்பவன், படைப்பின் உண்மைத்தன்மை குறித்தும், அதன் கொண்டாட்டம் குறித்தும் புரிந்துகொள்வான்” என்றார்.

    பா.ரஞ்சித்

    நிறைவாகப் பேசிய எழுத்தாளர் பாமா, “சின்ன வயசுல எல்லார் மாதிரியும் நானும் ரொம்ப பயந்து, எழுதத் தயங்கினேன். கல்லூரிகளில், பள்ளிகளில் ஸ்காலெர்ஷிப்புக்காக பெயர் வாசிக்கப்படும்போது தாழ்த்தபட்ட மாணவர்கள் எழுந்து நிப்பாங்க. அப்போ அவங்களை எல்லாரும் கிண்டலா பார்க்க, எந்திரிச்சு நிக்கிற பசங்க குற்றவுணர்குள்ளாவாங்க. அது ரொம்ப மோசமான விஷயம். `இடஒதுக்கீடுல படிச்சவன்’னு யாராவது கிண்டல் பண்ணினா, `அது சலுகையில்ல… உரிமை’னு சொல்லுங்க. நம்ம வாழ்க்கை என்பது, கொண்டாட்டங்களால் ஆனது. நாம சோர்ந்துபோகாம சந்தோஷமா இருக்கணும். அதான் முக்கியம். என்னோட ஊர் மக்கள்தான் என்னோட பலமே. அவங்ககிட்ட இருந்துதான் நான் தைரியத்தைக் கத்துக்கிட்டேன். எந்தச் சூழல் வந்தாலும் பயப்படாம நம்ம வாழ்க்கையைத் துணிச்சலா  எதிர்கொள்ளணும். என்னோட நாவல், சிறுகதைகளை தொடர்ந்து மொழிபெயர்த்து வெளியிட்டு வருபவர்களுக்கு நன்றி” என்றார்.

     

     சக்தி தமிழ்ச்செல்வன்,  க.பாலாஜி

    Courtesy : Vikatan

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleRSS behind Maharashtra violence, PM is a mauni baba: Congress
    Next Article மோடியின் சொந்த ஊரில் தலித் வன்கொடுமை
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    கழுவப்படும் பெயரழுக்கு

    June 27, 2020

    வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். – ஸ்டாலின் ராஜாங்கம்

    June 2, 2018

    “நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா?” – ஆதவன் தீட்சண்யா

    December 11, 2017
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    Random Posts

    அம்பேத்கர் – காந்தி இடையிலான சாதி குறித்த விவாதத்தைக் காண விருப்பம்!’ – ஜான்வி கபூர்

    June 2, 2024

    பௌத்தர் இயற்றிய தமிழ்நூல்கள்

    February 12, 2017

    தமிழர் என்ற பொது அடையாளமும் ‘தலித்’என்ற தனித்த அடையாளமும் – சுகுணா திவாகர்

    October 6, 2017

    அண்ணல் அம்பேத்கர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை

    May 14, 2016
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d