Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » `கணவரின் ஆணவக்கொலைக்கு நீதி வேண்டும்’ – பிரனய் மனைவி அம்ருதா உருக்கம் #JusticeForPranay
    வன்கொடுமைப் பதிவுகள்

    `கணவரின் ஆணவக்கொலைக்கு நீதி வேண்டும்’ – பிரனய் மனைவி அம்ருதா உருக்கம் #JusticeForPranay

    Sridhar KannanBy Sridhar KannanSeptember 17, 2018No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தெலங்கானாவில் 2 நாள்களுக்கு முன்னால், கர்ப்பிணி மனைவி (அம்ருதா)யின் கண்ணெதிரே கணவனை ஆணவக்கொலை செய்த சம்பவம் நாடு முழுக்க ஒரு பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது.  பிரனய்  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்துக்காக, அம்ருதாவின் அப்பா இந்த கொடுஞ்செயலை செய்தார். தற்போது, அம்ருதா, தன் கணவர் பிரணயின் கொடூரமான மரணத்துக்கு நீதி வேண்டி, ‘ஜஸ்டிஸ் ஃபார் பிரனய்’  முகநூல் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே, ஆயிரக்கணக்கானோர் அவருடைய பக்கத்தை லைக் செய்ததோடு, அவருடைய போராட்டத்துக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

     

    அம்ருதா தொழிலதிபரின் மகள். அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரனய் குமார் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.  பணத்தையும், சாதியையும் காரணம் காட்டி தன் மகளின் காதலை எதிர்த்திருக்கிறார் அம்ருதாவின் தந்தை. சாதியைவிட நேசித்தவனின் அன்புதான் பெரியது என்று, கடந்த ஜனவரி மாதம் பிரனயைத் திருமணம் செய்துகொண்டார் அம்ருதா. தற்போது காதலின் பரிசாக அம்ருதா கருவுற்றிருக்கும் தருணத்தில்தான், கணவர் பிரனயை கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கிறார் அம்ருதாவின் அப்பா.

     

    வயிற்றில் குழந்தையுடன், மாதாந்திர செக்கப் முடித்துவிட்டு மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த அம்ருதாவின் கண் எதிரிலேயே பிரனயை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இன்னமும் உலகத்தைப் பார்க்காத அந்தச் சிசுவை, பிறப்பதற்கு முன்னாடியே தகப்பனில்லாத குழந்தையாக்கிவிட்டது சாதியம்.

     

    அம்ருதாவின் முகநூல் பக்கம் முழுக்க, அம்மாவாகப் போகிற பெண்களுக்கான அறிவுரைகள், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம், பிறந்த குழந்தைக்கு டயப்பர் போடுதல் என்று தாய்மை பொங்கும் கட்டுரைகள் நிறைந்து கிடக்கின்றன. பச்சிளம் குழந்தை தொடர்பான பத்திரிகைகளை எல்லாம் லைக்  செய்திருக்கிறார் அம்ருதா. இவையெல்லாம், அம்ருதாவும் பிரனயும் தங்கள் குழந்தையின் வரவை எவ்வளவு ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் என்பதற்கான சந்தோஷ சாட்சிகளாக இருக்கின்றன. அந்த சந்தோஷத்தை தொடர்ந்து அனுபவிக்க தற்போது பிரனய் தான் இல்லை.

    அம்ருதாவின் முகநூல் பக்கத்தில் இருந்த, நம் கண்களை குளமாக்கிய ஒரு ஓவியத்தையும், அதில் இருந்த வாசகத்தைப் பற்றியும் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். அந்த ஓவியத்தில் அம்மா ஒருவர்  தன் குழந்தையை மடியில் வைத்தபடி ஒரு கூடையில் அமர்ந்திருக்கிறார். அந்தக் கூடையை ஓர் அப்பா தலைக்குமேல் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார். அந்த ஓவியத்தின் மேலே, `இந்த உலகம் தாயன்பை மட்டுமே பேசுகிறது. தந்தைகளின் தியாகத்தைப் பற்றி பேசுவதே இல்லை’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. செப்டம்பர் 9-ம் தேதி இந்த ஓவியத்தை தன் முகநூல் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் அம்ருதா. அப்பாக்கள் தினத்தில், அப்பாவுடன் இருக்கும் தன் புகைப்படத்தைப் போட்டு, `உங்களை எப்போதும் நேசிக்கும் மகள்’ என்று கமென்ட் செய்திருக்கிறார் அம்ருதா. அப்பாக்களின் தியாகத்தைக் கொண்டாடிய, அப்பாவைக் கொண்டாடிய ஓர் இளம் பெண்ணின் வாழ்வு அவளுடைய அப்பாவாலேயே வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது மனதைக் கனக்கச் செய்கிறது!

     

    நன்றி : விகடன்

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    அம்ருதா ஆவணக்கொலை சாதி சாதி வெறி பிரனய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Article‘Casteism killed Pranay, we must uproot caste’: 21-year-old Amrutha vows to fight
    Next Article Telangana honour killing: Hitmen got Rs 1 cr to murder Dalit, one was linked to Pandya case
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?

    March 5, 2023

    Economics Of Oppression: The Growing Precarity Of Dalit Lives In India

    September 12, 2022

    Dalit boy beaten up by teacher for touching drinking water pot in Rajasthan school, dies

    August 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    மாற்றுப்பாதை – தய்.கந்தசாமி

    July 23, 2011

    `கணவரின் ஆணவக்கொலைக்கு நீதி வேண்டும்’ – பிரனய் மனைவி அம்ருதா உருக்கம் #JusticeForPranay

    September 17, 2018

    “நான் சமரசமற்ற படைப்பாளி கிடையாது” – பா.இரஞ்சித் பேட்டி

    June 7, 2018

    Crime against Dalits: UP and Bihar worst states, Lucknow and Patna worst cities

    December 1, 2017
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d