Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»கலை இலக்கியம்»அறிவின் ஊற்று
    கலை இலக்கியம்

    அறிவின் ஊற்று

    Sridhar KannanBy Sridhar KannanMay 8, 2021No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    உமது உருவப்படம் பார்க்கையிலும்
    ஊற்றெடுக்கும்
    எமது அறிவின் தாகம்.

    வானம் வழுக்கி விழுந்ததென
    வகையாய் பொய்யுரைத்த
    புராணப்புரட்டுகளால்
    காலமெல்லாம்
    குனிந்தே சுமந்தவரின்
    முதுகை நிமிர்த்தியது
    உனது அறிவு

    தம் சாதி
    உயர்வென்று காட்ட
    வரலாற்றை திரிக்கும்
    பேதைகள் மத்தியில்
    எல்லோரும் சமமென்று
    வரலாற்றை சான்றுடன்
    மீட்டதால் நீ மேதை.

    ஆயிரம் ஆண்டுகளாய்
    பெண்களுக்கு
    மதம் சொத்துரிமை மறுத்ததை
    எதிர்த்து சட்டம் கண்டாய்
    அதை ஏற்க மறுத்தவர் நாண
    பதவியை தூக்கி எறிந்தாய்.

    சமத்துவத்தை சகோதரத்துவத்தை
    அரசியல் சாசன
    முகப்புரையிலேயே பதித்தாய்.

    ஆனாலும் என்ன
    ஒற்றை செல்பெருகி
    உயிர் வளர்ந்த
    உண்மை சொல்லும்
    அறிவியலை

    தொல்ப்பொருளாளர்கள்
    தோண்டியெடுத்து
    கண்ணில் காட்டும்
    ஆதாரத்தை கண்டப்பின்னும்
    பேதமையால் சிலபேர்
    இன்னும் திரிகின்றார்
    சாதிப்பெருமை பேசி.

    மனநோயால் பிறழ்ந்தவன்
    அம்மணமாய் நின்றுக்கொண்டு
    வீதியில் தம்மை
    வீரனென்று
    பிதற்றுவதைப் போல
    சாதித்திமிர் பேசி
    திரிகின்ற கிறுக்கர்கள்
    மத்தியில்
    உனதுருவம்
    சிலையாய்தான்
    நிற்கின்றது இன்றும்.

    -திலகேஸ்வரன்

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஅரக்கோணம் இரட்டை படுகொலை வழக்கில் 7 பேருக்கு குண்டர் சட்டம்
    Next Article Discrimination: An unspoken chapter on most campuses
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்

    February 12, 2026

    பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து அறிஞர் அண்ணாவின் மூன்று எழுத்தோவியங்கள்.

    February 3, 2026

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.