Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » அதிகாரத்தின் ‘கருணை’
    சிறப்பு கட்டுரைகள்

    அதிகாரத்தின் ‘கருணை’

    ஸ்டாலின் ராஜாங்கம்By ஸ்டாலின் ராஜாங்கம்August 15, 2025No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    10 நாட்களுக்கும் மேலாக நடந்த தூய்மை பணியாளர் போராட்டத்தை வழமையான அரசுகள் எவ்வாறு ‘முடிவு’க்கு கொண்டுவருமோ அத்தகைய தந்திரத்தோடு முடிவு கொண்டு வந்திருக்கிறது திமுக அரசு.போராட்டத்தால் வந்த அவப்பெயரை சரி செய்வதற்காக இன்னுமின்னும் தந்திரங்களோடு பிரதான கோரிக்கை எதுவோ அவற்றை விடுத்து திராவிட கட்சிகளுக்கேயுரிய சலுகை அரசியலை முன்னெடுத்து அதனை விளம்பரப்படுத்தி வருகிறது.(இந்த அளவிலான சலுகைகள் கூட அப்பணியாளர்கள் இத்தனை நாள் போராடியதால் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது)

    அப்பணியாளர்களுடன் முன்பு முதல்வர் டீ குடித்தார் என்று மேயர் சொன்னதில் தொடங்கி இன்றைக்கு சோறு போடுவது,நன்றி சொல்ல வைப்பது, ஊர்வலம் போல நடத்தி வருவது போன்ற படங்கள் வெளியிடப்படுகின்றன.
    அம்மக்கள் காட்சிபடுத்தப்படும் விதம்,குறிப்பாக அவர்கள் பெறுபவர்களாக – நிற்பவர்களாக – வியப்பவர்களாக – கை கூப்புபவர்களாக காட்டப்படும் படங்கள்,அதன் மூலம் அரசு தரப்பு சொல்லவரும் செய்தி
    ஆகியவை அருவருப்பாக இருக்கின்றன.இவற்றிலிருக்கும் பிழை இவர்களுக்கு புரியவில்லை.இன்னும் எத்தனை காலத்திற்கு இதையே செய்வார்கள் என்றும் தெரியவில்லை.
    இப்போக்கு இவர்கள் செய்வதாக காட்டிக்கொள்ளும் நன்மைகளை விட அவர்களை இழிவுபடுத்துகிறது. அம்மக்களை பெறுபவர்களாக பிம்பப்படுத்திக் கொண்டேயிருப்பதில் மேல் -கீழ் என்னும் சட்டகமே இயங்குகிறது.இதற்குள்ளிருப்பது நுட்பமான அதிகாரம்.இது கருணை அல்ல.மாறாக தங்களை மேலே இருந்திக்கொள்ளும் அதிகாரத்தின் கருணை.இம்மக்களை பெறுபவர்களாக காட்சிப்படுத்துவது மூலம் தங்களை ரட்சகர்களாக தக்க வைத்துக் கொள்ளும் தந்திரம்.
    பொதுவாக திராவிட இயக்கத்தின் சாதி மறுப்பு என்பது ‘புறமெய்’ அளவிலானது. சாதியானது சமூக அடுக்கில் உள்ளார்ந்து இயங்குவது என்ற புரிதலை அந்த இயக்கம் பெறவில்லை.சாதி வெளிப்படையானது மட்டுமல்ல பண்பாட்டு வடிவங்கள் சார்ந்தும் நுட்பமாக இயங்கக் கூடியது.அந்த புரிதல் இல்லாததால் தான் அது சாதி மறுப்பை பிராமணர் எதிர்ப்பை தாண்டி பார்க்கவில்லை.
    இந்த வகையில் சாதி தொடர்பான அதன் செயற்பாடுகளையும் சொல்லாடல்களையும் கட்டுடைத்தால் அதன் வரையறைகளை மட்டுமல்ல போதாமைகளையும் புரிந்து கொள்ள முடியும்.அவ்வாறு பார்க்கும் போது தான் அது எவற்றை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்கிறதோ,அதையே வேறு பெயரில் காப்பாற்றுவதாக இருப்பதையும் பார்க்கிறோம்.அவர்கள் விளிம்பு நிலை மக்கள் பிரச்சினைகளை இன்றுவரை அணுகி வரும் போக்கே இதற்கான உதாரணம்.
    சிக்கல்களை விரிவாக அணுகாமல் அரசியல் சரித்தன்மை என்கிற அளவில் சரி செய்து கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். பாகுபாட்டை சுட்டும் அடையாளங்களின் பெயர்களை திராவிட அரசாங்கங்கள் மாற்றி வந்திருக்கிறார்கள்.இது பாராட்டிற்குரியது.ஆனால் பாகுபாடு பெயரில் மட்டும் இருப்பதில்லை. உள்ளார்ந்து மாண்பு கெட்டிருப்பதன் விளைவு தான் அது என்பதை அவர்கள் யோசிப்பதில்லை.இது பிரச்சினையை மேலோட்டமாக அணுகுவதாக நிறுத்திவிடுவதோடு,அதையே தொடர்ந்து சாதனையாக சொல்லிக் கொண்டிருப்பதற்கு தவிர வேறெதற்கும் பயன்படுவதில்லை.எனவே மாற்றத்தை விரும்புகிறவர்கள் பெயர் மாற்றங்களை மட்டுமே பாராட்டிக் கொண்டிருக்க முடியாது.
    அதிகாரத்தின் கருணையிலிருக்கும் இத்தகைய சிக்கல்கள் குறித்த புரிதலை பல்வேறு விமர்சன கோட்பாடுகளின் துணையோடு 1990 களின் தலித் வாசிப்பு தான் முன்வைத்தது. ‘மேலிருந்து வழங்கப்படும் மீட்சி’யின் அரசியலை ராஜ்கெளதமனும் பிறரும் விரிவாக விவாதித்திருக்கின்றனர். தலித் விமர்சனங்களிலிருந்து மட்டுமல்ல வரலாறு குறித்து தலித் எழுதியல் ஏற்படுத்தியிருக்கும் விழிப்புணர்விலிருந்தும் இவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை.

    பல்வேறு கேள்விகளோடு 1990 களில் வீறுகொண்டெழுந்த தலித் கட்சிகளும், ‘கருணையின் அதிகாரம்’ பற்றி கட்டுடைப்பு செய்து கவனம் ஈர்த்தவர்களும் கூட விரிந்த அளவில் அணுக வேண்டிய விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளை உடனடி தேர்தல் கணக்கு என்கிற எல்லைக்குள் இருந்திவிட்டு விமர்சன அரசியலை முற்றிலுமாக கைவிட்டிருக்கிறார்கள்.

    நிலவும் கேடான சூழலின் அங்கமாகவும் மாறி வருகிறார்கள் என்பது தான் இதிலிருக்கும் பெரிய துயரம்.

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleதலித் வரலாற்றியலில் உள்ளூர் ஆவணங்கள்
    Next Article Dr.Ambedkar watching a football match
    ஸ்டாலின் ராஜாங்கம்

      ஆய்வாளர், எழுத்தாளர்.கள ஆய்வுகள், தலித் வரலாறு, தமிழ் பௌத்தம், உள்ளிட்ட வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டுவருபவர். அயோத்திதாசர் வாழும் பௌத்தம், ஆணவக் கொலைகளின் காலம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

      Related Posts

      Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

      April 17, 2026

      கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

      March 15, 2026

      ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

      February 7, 2026

      Comments are closed.

      Newsletter

      Recent Posts
      • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
      • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
      • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
      • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
      • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
      Random Posts

      கார்ல் மார்க்ஸின் மூலக்கோட்பாடுகள்

      September 10, 2022

      இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்

      May 1, 2018

      மோடியின் சொந்த ஊரில் தலித் வன்கொடுமை

      February 8, 2018

      பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு

      May 5, 2017
      Archives
      About Us
      About Us

      ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

      இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

      இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

      www.ambedkar.in
      Email Us: ambedkar.in@gmail.com
      Contact: +91 9841544115

      Facebook X (Twitter) YouTube WhatsApp
      அண்மைய பதிவுகள்

      அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

      May 4, 2026

      Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

      April 17, 2026

      பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

      April 15, 2026

      கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

      March 15, 2026
      நன்கொடையளிக்க விரும்பினால்
      Demo
      Facebook X (Twitter) Instagram Pinterest
      © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

      Type above and press Enter to search. Press Esc to cancel.

       

      Loading Comments...
       

        %d