Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » அம்பேத்கர் பார்வையில் இந்திய வேளாண் துறையும் தொழிலாளர்களும்
    சிறப்பு கட்டுரைகள்

    அம்பேத்கர் பார்வையில் இந்திய வேளாண் துறையும் தொழிலாளர்களும்

    Sridhar KannanBy Sridhar KannanJune 23, 2020No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அம்பேத்கர்  பார்வையில் இந்திய வேளாண் துறையும் தொழிலாளர்களும்

    இந்திய பொருளாதாரத்திலும் சமூக அரசியல் தளத்திலும் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு பரவலாக அறியப்பட்டதே. சுதந்திரம் அடைந்த போது மிகப் பெரும் சிக்கலாக இருந்த பல விஷயங்களைப் பற்றி அம்பேத்கர் தனது உரைகளிலும், எழுத்துக்களிலும் விளக்கியிருக்கிறார். அதில் சமூக அரசியல் பொருளாதாரத்தை முன்னிறுத்தும் விஷயங்களுக்கு கவனம் கிடைத்தது. ஆனால் இதுவரை அம்பேத்கரின் பார்வைகளும் கவனிக்கப்படாமலே இருக்கின்றன. அவற்றில் ஒன்று அவரது வேளாண்மையும், வேளாண் தொழிலாளர்களும்.

    Indian Journal of Economic Society என்ற ஆராய்ச்சி இதழில் 1917இல் அம்பேத்கர் ” இந்தியாவில் சிறு உடைமைகள் அதன் தீர்வும்”(Small holdings in India and its remedies) என்ற ஆய்வு கட்டுரை எழுதி இருக்கிறார். இதில் தற்கால அறிஞர்கள் இந்திய வேளாண் துறையின் மிகப்பெரும் சிக்கலாக குறிப்பிடும் சிறு மற்றும் குறு நிலங்களின் பிரச்சனைகளை பற்றி அம்பேத்கர் 1917‍லே விளக்கி எழுதியிருக்கிறார்.இக்கட்டுரை அவரது இந்திய வேளாண்மை மீதான அவரது தீர்க்க தரிசனத்திற்கு எடுத்துக்காட்டு.

    அம்பேத்கரின் பார்வையைப் பொருத்தவரை சிறு மற்றும் குறு நிலங்கள் தான் இந்திய வேளாண் துறையின் மிகப்பெரும் தடைக்கற்கள். சிறு மற்றும் குறு நிலங்களாக உடைபட்டு இருக்கும் ஒட்டுமொத்த இந்திய வேளாண் நிலங்களும் அதன் வளங்களைப் பங்கிட்டுக் கொள்வதில்லை. அவ்வாறு பெற்ற வளங்களை ஒழுங்காக உபயோகிப்பதும் இல்லை. அதுபோகப் பயிரிடுதலிலும் சிக்கலை எதிர்கொள்கின்றன.

    இதன் காரணமாகவே குறைந்த மகசூலும், விளைபொருட்களின் விலை உயர்வும் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு குறைந்த வருமானம் கிடைப்பதால் சிறு,குறு மக்களின் நிலை தொடர்ந்து மோசமாகிறது. எனவே எல்லா பிரச்சினைக்கும் காரணமான சிறு,குறு நிலங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார்.
    இந்த சிறு மற்றும் குறு நிலங்கள் மட்டுமே இந்திய வேளாண் துறையின் மகசூல் குறைவதற்குக் காரணம் என குறிப்பிடவில்லை. மாறாக அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    இந்தியாவில் முதலீடு செய்யும் திறன், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் கிடைப்பதில் மிகப் பெரும் சிக்கல் நிலவுகிறது. இந்தியாவின் வேளாண் நிலங்கள் துண்டுதுண்டாகச் சிதறடிக்கப்பட்டுள்ளதால் அந்நிலங்களில் முதலீடு செய்யும் முதலாளிகளின் மனநிலையும் தொய்வாக உள்ளவதாக அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இதனைக் கருத்தில் கொண்டே நில கையகப்படுத்தும் மசோதா இந்திய விடுதலைக்குப்பின் நிறைவேற்றப்பட்டது.

    இந்திய வேளாண் துறையில் நிலவுடைமையாளர்கள் விவசாயக் கூலிகளை கடுமையாக வாட்டுகின்றனர். நிலவுடையாளராக இருக்கும் ஆதிக்க சாதியினர் பட்டியல் வகுப்பினரையும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் பண்ணையடிமைகளாகவும்,கொத்தடிமைகளாகவும் வைத்திருக்கின்றனர்.

    பட்டியல் வகுப்பினரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் துண்டுதுண்டாக வைத்திருக்கும் வேளாண் நிலங்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டுப் பண்ணையம் செய்வது அவர்களுக்கு நல்ல பயனைத் தரும். அதிகமாக நிலம் வைத்திருக்கும் நில உடையாளர்களிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்தி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும். இந்த விவசாய நிலங்களில் இருந்து கிடைக்கும் அறுவடையைப் பெரும் தொழிற்சாலைகள் கொண்டுசென்று பதனிடுதல், மதிப்புக்கூட்டல் போன்ற செயல்களைச் செய்யும்போது கீழ்மட்ட நிலையிலிருந்து மேல்மட்ட நிலை வரை அனைவருக்கும் நல்ல லாபம் கிட்டும் அம்பேத்கர் தொலைநோக்கோடு குறிப்பிட்டுள்ளார்.

    காலம் காலமாக வேளாண் நிலங்கள் பெரும் நிலவுடைமையாளர்களிடம் இருக்கிறது. அதனால் ஒட்டுமொத்தமாக நீர், விதைகள், கடன் போன்றவை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும். இல்லையேல் அடிநிலையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் பட்டியல் சாதியினருக்கும் மேற்கூறிய வளங்கள் மற்றும் இடுபொருட்கள் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துவார்கள். அதனால் அரசாங்கமே இந்த வேலைகளை முன்னின்று நடத்த வேண்டும். அதேபோல் காலியாக உள்ள நிலங்களை அரசு நிலமில்லாத விவசாய கூலிகளுக்கும், குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

    நிலவுடைமையாளர்கள் காலங்காலமாகக் கடன் வழங்கி உதவி செய்து வருகிறோம் என்கிற பெயரில் ஏழை விவசாயிகளைச் சாதிரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் அடக்கி வைத்திருக்கின்றனர். இதனை சரிசெய்யும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். இதுபோலே கடன் வழங்குபவர்களையும் அரசு சீர் செய்ய வேண்டும். மொத்தத்தில் கடன், ஊக்கத்தொகை, இடுபொருள் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

    அம்பேத்கரின் எழுத்தும் உரைகளும் தொகுதி மூன்று பக்கம் 408ல், ”வேளாண்மையில் அரசின் தலையீடு மட்டும் இருந்தால் போதாது .அரசே வேளாண்மையை அரசுடைமையாக்கி ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வேளாண் முறைகளை வகுக்க வேண்டும். அது ஒருங்கிணைந்த பண்ணையமாகவும் அதே சமயத்தில் வேளாண்மையை அரசு பொதுவுடைமை தொழிலாகவும் ஆக்க வேண்டும்”என ஆணித்தரமாக சொல்கிறார்.

    மொத்தத்தில் இந்தியாவில் நிலங்கள் சிறிதாக இருப்பது மட்டும் பிரச்சனை அல்ல.அப்படி இருக்கும்பட்சத்தில் நிலங்களின் அளவை பெரிதாக்குவதன் மூலம் தீர்த்துவிடலாம். உண்மையான சிக்கலை தீர்க்கும் வழி என்பது அதிக முதலீட்டுடன் அதிக வேலை ஆட்களை நியமித்துப் பெருந்தொழிலாக வேளாண்மையை ஆக்க வேண்டும் என வழிக்காட்டுகிறார்.

    வேளாண் துறையின் பிரதான பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் நிலசீர்திருத்தமும் தொழில் வளர்ச்சியும் ஒன்றிணைவது இல்லை என்பதே. ஆக தொழில் வளர்ச்சியும் நிலசீர்திருத்தத்தையும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்க‌ வேண்டும் எனவும் அம்பேத்கர் சுட்டுகிறார்.

    – ஜீ.கே.தினேஷ்
    கட்டுரையாளர் வேளாண் துறையில் ஆராய்ச்சியாளர்.

    தொடர்புக்கு :writergkdinesh@gmail.com

    Source : Tamil Hindu , May 01, 2020

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleகவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?
    Next Article அம்பேத்கர்: எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவர்
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    கயர்லாஞ்சி

    November 14, 2006

    இவரே தமிழ்த் தாத்தா!

    May 5, 2021

    எல்லோரும் சமமென்கிறாய்

    July 10, 2020

    விஜயதசமியும், விநாயகர் சதுர்த்தியும்

    October 24, 2023
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d