Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » இந்த நாட்டில் வாழ்வதற்காக நாம் பெருமை கொள்வோம்!
    அலசல்

    இந்த நாட்டில் வாழ்வதற்காக நாம் பெருமை கொள்வோம்!

    Sridhar KannanBy Sridhar KannanJanuary 26, 2016No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது திருநாள்கொண்டச்சேரி கிராமம்.

    பெயரிலேயே சேரியை கொண்டுள்ள இந்த கிராமத்தில், சேரி மக்கள் விலங்கினும் கீழாக நடத்தப்படுகின்றனர்.

    இந்த ஊரில், 20 ஆண்டுகளாக ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் வி.ஜே.கே செந்தில்நாதன் என்பவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்துகொடுக்கவில்லை.

    சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் செத்த பிணத்தை புதைப்பதற்குகூட அவர்களுக்கு அனுமதி இல்லை.

    40 தலித் குடும்பங்களை சேர்ந்த திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் பிணத்தை புதைக்கவேண்டும் என்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக 3 கிலோமீட்டர் நடந்து, கடலாழி ஆற்றங்கரைக்கு செல்லவேண்டும்.

    இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழை, தலித்துகள் பயன்படுத்தி வந்த பாதையை நாசப்படுத்திவிட்டது. இதனால், கடந்த நவம்பர் மாதம் மரணம் எய்திய குஞ்சம்மாள் என்பவரை, பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம்.

    ஆனால், ஊர்தெரு சாதி இந்துக்கள் பொதுப்பாதையில் பிணம் வந்தால், நீங்களும் பிணமாவீர்கள் என எச்சரித்ததால், பின்னர் காவல்துறையினர் தலையிட்டு பிணத்தை புதைக்க ஏற்பாடு செய்தனர்.

    இந்நிலையில், ஜனவரி 3-ம் தேதி குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்துவும் காலமானார்.

    இந்தமுறை, சாதி இந்துக்கள் உறுதியாக நின்றனர்.

    விளைவு, கடந்த மூன்று நாட்களாக வீட்டுக்கு வெளியிலேயே கிடக்கிறது பிணம்.

    இதனிடையே, சேரி மக்கள் நேற்று உயர்நீதிமன்றத்தை அனுகியபோது, பொதுப் பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

    அப்படியும் சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அங்கு முகாமிட்டுள்ள நூற்றுக்கணக்கான காவல்துறையினர், பொதுப்பாதையில் சென்றால் பிரச்னை பெரிதாகும் எனக்கூறி, கொல்லைப்புறமாக எடுத்துச் செல்ல போதனை செய்து வருகின்றனர்.

    ஒரு மனிதன், பிணத்தை எடுத்துச் செல்வதற்குகூட உரிமை இல்லாத நாட்டில் இருந்து, கோள் ஒன்று செவ்வாய் கிரகம் நோக்கி பறந்திருக்கிறது.

    எப்போதாவது அரிதாக கிடைக்கும் நீதி, சாதி இந்துக்களால் செயல்படுத்த முடியமல் தடுக்கப்படுகிறது.

    இவர்களெல்லாம் தமிழர்களாம். ஜல்லிக்கட்டு காளையிடம் வீரத்தை காட்டுவார்களாம்.

    த்தூ..

    Perazhagan Bala

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleரோஹித் வெமுலா இறுதிக் கடிதம்
    Next Article செத்துப் போனது இருக்கட்டும்… ரோகித் என்ன சாதி?
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    மாற்றுப்பாதை – பாரதி நிவேதன்

    May 15, 2010

    ஆத்தூர் சிறுமி கழுத்தறுத்து படுகொலை – எவிடன்ஸ் அறிக்கை.

    October 26, 2018

    பண்டிதமணி க. அப்பாதுரையார்

    February 10, 2014
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d