Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்
    வன்கொடுமைப் பதிவுகள்

    கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்

    SasikumarBy SasikumarMay 29, 2018No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்

    சாதிய கொலைகளின் முதன்மை மாவட்டமாக சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், பழையனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் கச்சநத்தம். இக்கிராமத்தில் வசித்து வருகிற இந்து பட்டியல் சாதி பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் (31) த.பெ.அறிவழகன் மற்றும் ஆறுமுகம் (65) த.பெ.கோனான் ஆகியோரை சுமார் 20 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் நேற்று 28.05.2018 அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனசேகரன், மலைச்சாமி, சுகுமார், சந்திரசேகர், தெய்வேந்திரன், மகேஸ்வரன் ஆகிய 6 பேருக்கு கடுமையான அரிவாள் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து பழையனூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.32/2018 பிரிவுகள் 147, 148, 294(b), 324, 307, 302 இ.த.ச. மற்றும் பசடடஈக அஸ்ரீற் மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r), (s), 3(2)(va) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.

    கடந்த 26.05.2018 அன்று பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் பட்டியல் சாதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் கருப்பணசாமி கோவில் வளாகத்திற்கு வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த சாதி இந்துவான சந்திரகுமாரின் மகன்கள் சுமன், அருண் ஆகிய இருவரும், ஏண்டா பள்ளப் பயலுகளா உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் எங்கள் முன்னாடியே கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து இருப்பீர்கள்? என்று சாதி ரீதியாக இழிவாகப் பேசியிருக்கின்றனர். அதற்கு தெய்வேந்திரனும் பிரபாகரனும் தேவையில்லாமல் சாதி குறித்து பேசினால் காவல்நிலையத்தில் புகார் தெரிவிப்பேன் என்று கூற, சுமனும் அருணும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பள்ளப் பயல்களுக்கு இவ்வளவு திமிரா, உங்களை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூற பாதிக்கப்பட்ட தெய்வேந்திரனும் பிரபாகரனும் திருப்பாச்சேத்தி காவல்நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளனர்.

    திருப்பாச்சேத்தி காவல்நிலைய ஆய்வாளர் சுமனையும் அருணையும் தேடி வீட்டிற்கு செல்ல அங்கு வீட்டிலிருந்த அவர்களது தந்தை சந்திரகுமாரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து உங்கள் மகன்கள் இந்த பகுதியில் தேவையில்லாமல் சாதிய ரீதியான வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர், இது சரியில்லை. இப்படியே நடந்தால் வழக்கு பதிவு செய்து கைது செய்வோம் என்று எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சுமன், அருண், சந்திரகுமார், இளையராஜா உள்ளிட்ட சுமார் 20 பேர் கொண்ட வன்கொடுமை கும்பல் 28.05.2018 அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தலித் குடியிருப்பிற்குள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பத்து பள்ளப் பயல்கள் தலை உருண்டால் தான் இவன்கள் எல்லாம் அடங்குவார்கள் என்று கூறிக்கொண்டே அந்த கும்பல் கையில் சிக்கிய ஆட்களை எல்லாம் பிடித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த கடுமையான அரிவாள் வெட்டு தாக்குதலில் ஆறுமுகம் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்து போனார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சண்முகநாதனை அழைத்து வருகிற வழியில் அவரும் இறந்து போனார். ஆறு பேருக்கு பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

    கச்சநத்தம் கிராமத்தில் பட்டியல் சாதி மக்கள் சுமார் 30 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் முக்கிய குற்றவாளியான சுமன் குடும்பத்தைச் சேர்ந்து 5 குடும்பங்கள் மட்டுமே ஆதிக்கசாதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஆவாரங்காடு, மாரநாடு ஆகிய கிராமங்களில் வசித்து வருகிற ஆதிக்கசாதியினர் செயல்படுகின்றனர். குறிப்பாக ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சில சாதிய சக்திகள் கட்டப்பஞ்சாயத்து செய்வது, பெண்களை வழிமறித்து பாலியல் வன்முறையில் ஈடுபடுவது, சாதி ரீதியாக தாக்குதல் நடத்துவது என்று தொடர்ந்து பல வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்தெல்லாம் கடந்த 5 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட தலித் மக்கள் காவல்நிலையத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்திலும் புகார் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இரண்டு தலித் இளைஞர்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார்கள் என்பதற்காக இத்தகைய கொடூரமான படுகொலைகளும் தாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    பரிந்துரைகள்

    • ஆறுமுகம் மற்றும் சண்முகநாதன் ஆகிய இருவரையும் கொலை செய்தது மட்டுமல்லாமல் தலித்துகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய வன்கொடுமை கும்பல் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

    • இறந்து போன ஆறுமுகம் மற்றும் சண்முகநாதன் ஆகிய இருவரின் குடுபத்தினருக்கு அரசு தலா ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையும் ரூ.5 இலட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும்.

    • இறந்து போன குடும்பத்தைச் சேர்ந்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    • இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் சிலர் கடந்த 2017ம் வருடம் ஏப்ரல் மாதம் தலித் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகனை கொலை செய்தவர்கள். ஆகவே இத்தகைய கடுமையான குற்றத்தில் ஈடுபடுகிற குற்றவாளிகளை நீதிமன்ற விசாரணை முடிந்து தீர்ப்பு வருகின்றவரை அவர்களுக்கு பிணை கொடுக்காமல் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

    • தமிழகத்தில் அதிகமான சாதிய கொலைகள் நடைபெறக்கூடிய மாவட்டமாக சிவகங்கை இருக்கிறது. ஆகவே இந்த மாவட்டத்தில் சாதி வன்கொடுமை தடுப்பு சிறப்பு போலீஸ் பிரிவினை தலைமைச் செயலரும், மாநில காவல்துறை இயக்குனரும் இணைந்து உருவாக்க வேண்டும்.

    • கச்சநத்தம் பகுதியில் ஆயுதம் தாங்கிய போலீசாரை பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட வேண்டும்.

    (A.கதிர்)
    செயல் இயக்குனர்,எவிடன்ஸ்

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    கச்சநத்தம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleதலித்துகளுக்கு மறுக்கப்படும் தமிழ் நிலம்
    Next Article கச்சநத்தம் மேலும் ஒருவர் பலி
    Sasikumar
    • Facebook

    அம்பேத்கரியர், கற்பி அறக்கட்டளையின் நிறுவனர். அம்பேத்கர்.இன் இணையதளத்தின் உறுவாக்கத்திற்கு காரணமானவர்களின் ஒருவர்.

    Related Posts

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?

    March 5, 2023

    Economics Of Oppression: The Growing Precarity Of Dalit Lives In India

    September 12, 2022

    Dalit boy beaten up by teacher for touching drinking water pot in Rajasthan school, dies

    August 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    Redmi Air Dots S Go Official – With No Visual Changes

    January 12, 2021

    தீவிரமடையும் தலித் மக்களின் போராட்டத்தால் வட மாநிலங்களில் பதற்றம்

    April 2, 2018

    Vows of Dr. Ambedkar

    May 25, 2022

    புத்தர் – கருடன் – விஷ்ணு

    June 7, 2024
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d