Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » கண்முன்பே கொல்லப்பட்ட காதல் கணவன்… நிலைகுலைந்த கர்ப்பிணி மனைவி.. அதிரவைத்த ஆணவக்கொலை!
    வன்கொடுமைப் பதிவுகள்

    கண்முன்பே கொல்லப்பட்ட காதல் கணவன்… நிலைகுலைந்த கர்ப்பிணி மனைவி.. அதிரவைத்த ஆணவக்கொலை!

    Sridhar KannanBy Sridhar KannanSeptember 15, 2018No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தெலங்கானாவில் பட்டப்பகலில் மருத்துவமனை வளாகத்தில் காதல் மனைவி முன்பு கணவன் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்னும் பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளி நட்பு காதலாக மாறியது. அம்ருதாவின் தந்தை மாருதிராவ் ஒரு தொழிலதிபர். பிரனய் -அம்ருதா காதல் விவகாரம் இருவர் வீட்டிலும் தெரியவர பிரச்னை வெடித்தது. பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அம்ருதாவிடம் பிரனய் உடனான காதலை முறித்துக்கொள்ளும்படி மிரட்டினார்.

    அம்ருதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து பிரனய் – அம்ருதா கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் அம்ருதா உறவினர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அம்ருதா திருமணம் செய்துகொண்டதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரனய்யின் பெற்றோருடன் தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டு வந்தனர்.

    அம்ருதாவின் தந்தை

    அம்ருதாவின் தந்தை..
    இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைந்தார். பிரனய் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று மதியம் அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அவர்களுடன் பிரனய் தாய் பிரேமலதாவும் சென்றார். பரிசோதனை முடிந்து 3 பேரும் மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றபோது, அவர்களின் பின்னால் நடந்து வந்த மர்ம நபர் பிரனய்யை அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியோடிவிட்டார். இந்தக் காட்சி மருத்துவமனையின் சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

    சிசிடிவி காட்சியில்.. பிரனய் தன் மனைவியுடன் பேசிக் கொண்டே மருத்துவமனை வாசலை நோக்கி நடந்து செல்கிறார். அவர்களின் பின்னால் பிரனய்யின் தாய் நடந்து வருகிறார். பிரனய்யைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரனய்யின் கழுத்தில் வெட்டுகிறார். பிரனய் துடிதுடித்து கீழே விழுகிறார். அம்ருதா அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். பிரனய்யின் தாய் அந்த மர்ம நபரைத் தள்ளிவிட, அரிவாளோடு தப்பியோடுகிறார். அம்ருதா வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் கணவரைக் காப்பாற்றும்படி மருத்துவமனைக்குள் அழுது கொண்டே ஓடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது.

     

     

    பிரனய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அம்ருதாவின் தந்தை மாருதிராவ் கூலிப்படையை ஏவி பிரனய்யைக் கொலை செய்து இருப்பதாக பிரனய் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மாருதிராவை கைது செய்யக்கோரி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். மாருதிராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    அம்ருதாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தான் தாய் ஆகப் போவதை குறித்து மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் பிரனய்யின் மரணம் அவரை நிலைகுலையச் செய்துள்ளது.

    இந்தச் சம்பவம் 2016-ம் ஆண்டு தமிழ்நாட்டை உலுக்கிய சங்கர் ஆணவக்கொலையை நினைவுப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆணவக் கொலைக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    Paul Oommen@Paul_Oommen
    Was left shell-shocked. In a min, the couple’s life changed. The last 6 months they were married- they were leading a happy, satisfied life until he was hacked to death with a machete, in front of his pregnant wife. Honour killing being probed. When will India rise beyond caste?
    9:34 AM – Sep 15, 2018
    • 95
    • 95 people are talking about this

     

     

    – அஸ்வினி மகாலிங்கம்

    நன்றி : விகடன்

     

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleகோகுல்ராஜ் வழக்கில் உண்மைகளை மறைத்தாரா ஸ்வாதி?
    Next Article ‘Pranay Amar Rahe!’: Thousands attend Pranay Perumalla’s funeral in Miryalaguda
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?

    March 5, 2023

    Economics Of Oppression: The Growing Precarity Of Dalit Lives In India

    September 12, 2022

    Dalit boy beaten up by teacher for touching drinking water pot in Rajasthan school, dies

    August 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது: கெளசல்யா பேட்டி!

    December 12, 2017

    அசோகர் விஜயதசமி

    October 13, 2013

    Rohith Vemula’s mother to launch event to take on ‘new Peshwas’

    December 27, 2017

    Vows of Dr. Ambedkar

    May 25, 2022
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d