தாழ்த்தப்பட்ட சாதியினர் சம்மேளனம் (Scheduled Castes Federation) கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியிடைந்தது.* அதன் தோல்வியைத் தொடர்ந்து சிலர் அதைவிட்டு வெளியேறினர். சிலர் அதில் நம்பிக்கையிழந்தனர். எனக்கு இந்தத் தோல்வி மனப்பான்மை இல்லை. தேர்தலில் இடங்களை வெல்வது சம்மேளனத்தின் இலட்சியமல்ல. சம்மேளனத்திற்கு இடங்களை வெல்வது ஒரு லட்சியத்தை அடைவதற்கான ஒரு சாதனமேயாகும். லட்சிய மானது, யாருக்காக இந்த அமைப்பு நிறுவப்பட்டதோ, அந்த மக்களுக்கு சேவை செய்வதற்கேயாகும். பிரச்சினை இருக்கின்ற வரையில் சம்மேளனம் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து இருந்து வரும்.
சம்மேளனத்தின் தோல்வி வரவேற்புக்குரியதே. ஏனெனில் சம்மேளனத்தில் புகுந்த மிகவும் விரும்பத்தகாத கூறை வெளியேற்று வதற்கு அது உதவியுள்ளது. சம்மேளனத்தில் நீடிப்பவர்கள் மீது கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. தோல்விக்குப் பின்னர் சம்மே ளனம் காலநிலையால் பட்டுப்போன மரமாகத் தோன்றக்கூடும்.. ஆனால் அதன் வேர்கள் நிச்சயமாகக் காய்ந்துவிடவில்லை.
(ஒப்பம்)
பி.ஆர். அம்பேத்கர்’

