Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»கலை இலக்கியம்»கதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல சகலமும் வரும்
    கலை இலக்கியம்

    கதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல சகலமும் வரும்

    Sridhar KannanBy Sridhar KannanMarch 11, 2010No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    எதுவுமே தேவையில்லை
    அது அத்தனை சுலபமானது
    கல்லுடைத்துக் கை நசுங்கி குருதி கொட்ட வேண்டாம்
    சுள்ளிகள் சேர்த்து சுமையாக்கி

    வெப்பமிக்க ஒற்றையடிப் பாதைகளில்
    வெற்றுக்கால்கள் கொப்பளிக்க
    நடக்கவொன்றும் தேவையில்லை
    தலைமீது கல்சுமந்து கழுத்து நரம்புகள்
    புடைக்க வேண்டாம்

    சுடும் வெயிலில்
    நடைபாதைகளில் தலைகாயக் குந்தி
    காலணிகளைப் பளபளப்பாக்கி
    காசுக்கு கையேந்த வேண்டியதில்லை

    மேனிகருக்க நிறுத்தங்களில் கூடைபழங்களை
    கூவிவிற்க குரல் வற்ற அவசியமில்லை
    வியர்வை உடல்நனைக்க கட்டாந்தரையை
    பண்படுத்த வாழ்வை பலி கொடுக்க வேண்டியிராது

    மகள் படிக்க காசில்லாமல் மாற்றுத் துணியில்லாமல்
    ஆண்டையிடம் அவமானப்படத் தேவையில்லை

    ஆம் அது அத்தனை சுலபமானது

    காவிகட்டிக் கொண்டு
    கண்ணைமூடி சாமியாராகிவிடுவது
    கதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல
    சகலமும் வரும்

    அறிவாய் நீ மனமே.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleபெண்களுக்கான விடுதலையில் அம்பேத்கரின் பங்களிப்பு
    Next Article “அதெல்லாம் கிராமத்துல மட்டும் இல்லை சார்!”
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்

    February 12, 2026

    பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து அறிஞர் அண்ணாவின் மூன்று எழுத்தோவியங்கள்.

    February 3, 2026

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.