Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு
    Atrocities

    கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு

    Sridhar KannanBy Sridhar KannanJune 4, 2022No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு: அமெரிக்காவில் தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் உரை ரத்து – நடந்தது என்ன?

    அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதிப் பாகுபாடு குறித்த ஓர் உரையை, சாதி ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது.

    அமெரிக்காவில் தலித் உரிமைகளுக்காகப் பாடுபடும் சமத்துவத்துக்கான ஆய்வகம் (ஈக்வாலிடி லேப்ஸ்) என்ற குடிமை உரிமை அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் இந்த உரையை நிகழ்த்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கடந்த மாதம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஆனால், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவரும், கூகுள் நியூஸ் பிரிவில் திட்ட மேலாளராகப் பணியாற்றியவருமான தனுஜா குப்தா மீது அந்த நிறுவனத்தில் பணி செய்யும் பலரும் அவதூறுகளைப் பரப்பி, இந்த நிகழ்வை ரத்து செய்ய வைத்ததோடு மட்டுமல்லாமல், இறுதியில் தனுஜா நிறுவனத்தில் இருந்து பதவி விலகும் சூழ்நிலையும் ஏற்பட்டதாக ஈக்வாலிடி லேப்ஸ் தாம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    தனுஜாவின் விலகலை அடுத்து தனது நிறுவனத்துக்குள் நிலவும் சாதிப்பாகுபாடு குறித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை கூகுள் ஏற்கவேண்டும் என்று ஈக்வாலிடி லேப்ஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

    ஆனால், தங்கள் நிறுவனத்தில் சாதிப்பாகுபாடு இல்லை என்று மறுத்துள்ளது கூகுள்.

    ஈக்வாலிடி லேப்ஸ் அறிக்கை

    ஈக்வாலிடி லேப்ஸ் விடுத்துள்ள அறிக்கையில், நிகழ்வில் பேசவிருந்த சமத்துவ ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநரும் தலித் சமூக ஆர்வலருமான தேன்மொழி செளந்தரராஜன், “அன்பு, இரக்கம் மற்றும் நீதியே சாதி சமத்துவத்திற்கான இயக்கத்தின் அடிப்படை. நானும், கூகுள் ஊழியர்களும் கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மூலம் சந்தித்துள்ள பாகுபாடு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை சொற்களால் விவரிக்க முடியாது. அந்த நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பாக இந்த உரையை ரத்து செய்தது. இத்தகைய சாதி ரீதியான தாக்குதல்கள் தன் பணியிடத்தில் தொடர்ந்து நடப்பதற்கு எதிராக கூகுள் ஒரு தீர்வு காண வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமத்துவ ஆய்வகம் வெளியிட்ட அறிக்கை

    யார் இந்த தனுஜா?

    தனுஜா குப்தா

    சாதி சமத்துவத்தை எதிர்க்கும் கூகுள் ஊழியர்களுக்கு எதிராக, தங்கள் மீது காட்டப்பட்ட சாதிப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராட 400 கூகுள் ஊழியர்களுக்கு தனது ஆதரவை வழங்கிய தனுஜா, கூக்ளர்ஸ் ஃபார் என்டிங் ஃபோர்சுடு ஆர்பிட்ரேஷன் என்ற அமைப்பின் நிறுவனரும், கூகுள் வாக்கவுட் இயக்கத்தின் முதல் ஒருங்கிணைப்பாளரும் ஆவார் என்கிறது ‘ஈக்வாலிடி லேப்ஸ்’ அறிக்கை.

    தேன்மொழி சௌந்தரராஜன் உரையை ஏற்பாடு செய்ததற்குப் பதிலடியாக தனுஜாவின் குழுவினருக்கு எதிராக நிறுவனத்துக்குள் வெறுப்புப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. அவர்களது பாதுகாப்பு ஆபத்துக்குள்ளானது. தனுஜா மீது கூகுள் மனிதவளத் துறை விசாரணையைத் தொடக்கி, தண்டனை நடவடிக்கையையும் எடுத்தது. இதையடுத்து அவர் பதவி விலகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு அவர் நிறுவனத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.

    “11 ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில், இங்கிருந்து வெளியேற பல காரணங்கள் இருந்தன. ஆனால், இந்த காரணம்தான் எனக்கு தேவையாக இருந்தது. என் பணியை செய்துக்கொண்டிருக்கும்போதும், நிறுவனத்தில் சாதி சமத்துவத்தை நிலைநாட்டுவதில் நான் ஈடுபட்டிருந்தபோதும், நான்கு பெண்கள் துன்புறுத்தப்பட்டு, அவர்கள் மெளனமாக்கப்பட்டதை நான் பார்த்தேன். இத்தகைய சம்பவங்கள் ஒன்று இரண்டல்ல என்பதே உண்மை. இது தொடர்ச்சியாக நடக்கும் ஒன்று,” என்று ஜூன் 1ஆம் தேதியன்று அவர் அனுப்பிய விலகல் கடிதத்தில் தெரிவித்திருந்தார் என்றும் அந்த அறிக்கை கூறியது. இந்தக் கடிதம் கிட்டத்தட்ட 15,000 கூகுள் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது.

    இவர்களுக்கு ஆதரவாக, #metoo இயக்கத்திற்கான சர்வதேச அமைப்பு, “தேன்மொழி செளந்தரராஜன், தனுஜா குப்தா ஆகிய இருவரையும் மதிப்புடன் நடத்துமாறு கூகுள் நிறுவனத்துக்கு வலியுறுத்துகிறோம்,” என்று தெரிவித்துள்ளது.

    என்ன சொல்கிறது கூகுள்?

    இது தொடர்பான செய்தி, ‘வாஷிங்கடன் போஸ்ட்’ செய்தித் தாளின் வலைதளப் பக்கத்தில் முதலில் வெளியானது.

    வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேசிய கூகுள் செய்தி தொடர்பாளர் ஷான்னான் நியூபெர்ரி, “எங்கள் பணியிடத்தில் சாதிப் பாகுபாட்டுக்கு இடமில்லை. எங்கள் பணியிடத்தில் பழிவாங்கும் நடவடிக்கைகள், பாகுபாடு பற்றிய கொள்கைகள் குறித்து பொதுவெளியில் தெளிவாகப் பகிர்ந்திருக்கிறோம்,” என்றார்.

    Courtesy :  BBC Tamil

    Note: This news piece was originally published in www.bbc.com and used purely for non-profit/non-commercial purposes exclusively for Human Rights.

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleGoogle cancelled Dalit activist’s talk on caste after pressure from employees
    Next Article ஆசை
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கர் – காந்தி இடையிலான சாதி குறித்த விவாதத்தைக் காண விருப்பம்!’ – ஜான்வி கபூர்

    June 2, 2024

    சாதி வெறியர் யார்? கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி எப்படி வேரூன்றியுள்ளது?

    April 27, 2024

    In a first, UN celebrates Ambedkar’s birth anniversary for two days

    April 25, 2024

    Comments are closed.

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    கொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி ஆர். வீரையன்

    September 27, 2017

    பௌத்த அலை இந்தியாவில் ஒரு போதும் ஓயாது

    May 30, 2020

    மாற்றுப்பாதை – ரகசியன்

    June 20, 2009

    அம்பேத்கர் வாழ்க்கையில் மரணத்துக்கு முந்தைய கடைசி 24 மணி நேரம் என்ன நடந்தது?

    December 9, 2022
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d