Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    January 9, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!
    கட்டுரைகள்

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    SasikumarBy SasikumarDecember 6, 2025No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘நான் பாபாசாகேபை (அம்பேத்கரை) கடைசிமுறையாக அவருடைய மரண ஊர்வலத்தில் பார்த்தேன். அன்று காலை சாவகாசமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். செய்தித்தாளின் முதல் பக்கத்தில், அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தியைப் படித்தேன். ஏதோ நிலம் கிடுகிடுப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. என்னுடைய குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டதைப் போல உணர்ச்சிவசப்பட்டேன். வாசல் கதவின் தூணைப் பற்றிக்கொண்டு அழ ஆரம்பித்தேன். செய்தித் தாளை வாசித்துக் கொண்டிருந்தவன் ஏன் திடீரென்று அழுகிறானென என்னுடைய அம்மாவுக்கோ மனைவிக்கோ பிடிபட வில்லை. அம்பேத்கர் மரணமடைந்த செய்தியை அவர்களிடம் சொன்னதும், ஒட்டுமொத்தக் குடும்பமே கண்ணீர் வடித்தது.

    வீட்டை விட்டு வெளியே வந்ததும் சாரை சாரையாக மக்கள் கூடி, அம்பேத்கர் மரணச்செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. பாபாசாகேப் டெல்லியில் காலமானார். அவரின் உடலைத் தாங்கிய விமானம் அன்று மாலையே பம்பாய் வந்து சேர்வதாக இருந்தது. நான் வேலையில் சேர்ந்து வெறும் மூன்று மாதங்களே ஆகியிருந்தன. நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று விடுப்பு கேட்டேன். நான் என்ன காரணத்துக்காக விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளேன் என்பதைப் பார்த்துவிட்டு என்னுடைய மேல் அதிகாரி கடுப்பானார். ”’இதை ஏன் காரணமாகக் கூறியுள்ளாய்? அம்பேத்கர் ஓர் அரசியல் தலைவர். நீ ஓர் அரசுப் பணியாளன். வேறு எதாவது தனிப்பட்ட காரணத்துக்காக விடுப்பு எடுப்பதாக எழுதிக்கொடு” என்று என்னிடம் கேட்டார்.

    நான் எப்போதும் அனுசரித்துப்போகும் மனப்பான்மை கொண்டவன். ஆனால், என் குணத்துக்கு மாறாக, ”சார், அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவர் எங்களை எப்படிப்பட்ட படுகுழியிலிருந்து மீட்டிருக்கிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டேன்.

    என் வேலையைப் பற்றிக் கவலைப்படாமல், என் விண்ணப்பம் ஏற்கப்படுமா எனக் காத்திருக்காமல், நான் ஆளுநர் மாளிகையை (ராஜ் பவனை) நோக்கி விரைந்தேன். அம்பேத்கரின் பூத உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜ்பவனை நோக்கி மானுட வெள்ளம் பெருங்கூட்டமாகப் பாய்ந்து கொண்டிருந்தது.’

    -மஹாராஷ்டிராவைச் சார்ந்த தலித் எழுத்தாளர் தயா பாவார் அவர்களின் வாக்குமூலம்.

    ‘அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்’ புத்தகத்திலிருந்து.

    Share this:

    • Click to share on Twitter (Opens in new window)
    • Click to share on Facebook (Opens in new window)
    • Click to share on WhatsApp (Opens in new window)

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஅன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1
    Next Article அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2
    Sasikumar
    • Facebook

    Related Posts

    தலித் வரலாற்றியலில் உள்ளூர் ஆவணங்கள்

    August 9, 2025

    அம்பேத்கர் வாழ்க்கையில் மரணத்துக்கு முந்தைய கடைசி 24 மணி நேரம் என்ன நடந்தது?

    December 9, 2022

    அயோத்திதாச பண்டிதரின் பண்பாட்டுப் புரட்சி

    May 20, 2022

    Comments are closed.

    Newsletter

    Recent Posts
    • ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2
    • எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!
    • அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1
    • யுனெஸ்கோ தலைமையகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மார்பளவு சிலை திறப்பு
    Random Posts

    திணிக்கப்பட்ட வேலைகள் இனி வேண்டாம்…

    May 25, 2016

    மாற்றுப்பாதை – சி. முத்துக்கந்தன்

    November 10, 2014

    கௌதமப் புத்தர் காப்பியம்

    May 11, 2021

    டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவின் மாபெரும் அறிவுஜீவி

    April 1, 2024
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    January 9, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1

    December 2, 2025
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d