Author: Sasikumar

அம்பேத்கரியர், கற்பி அறக்கட்டளையின் நிறுவனர். அம்பேத்கர்.இன் இணையதளத்தின் உறுவாக்கத்திற்கு காரணமானவர்களின் ஒருவர்.

‘இல்லறத்தோரே‚ ஈண்டு, ஒரு கணவனும் மனைவியுமாகிய இருவரும் கொலைப் புரிவதினின்றும், திருடுதலினின்றும், மாசுகளினின்றும், பொய்ப்புகல்வதினின்றும், போதை தரும் மதுவருந்தலினின்றும், தவிர்ந்து தற்காத்தவராய், நல்லொழுக்கமும் நன்னடத்தையும் உடையவராய், பேராசையின் கறைகளினின்று விடுபட்ட மனத்தினராய், ஒழுக்க முடையோரை ஏசிப்பேசாதவராய் இவ்வாழ்வு வாழ்வர். உண்மையில், இல்லறத்தோரே‚ இவ்வாறாகவே நனிச்சிறந்த நல்மனிதர் ஒருவர் நனிச்சிறந்த நல்மங்கையுடன் வாழ்கிறார்.” ‘சகோதரர்களே‚ எவர்; தன் சொந்த நலத்திற்காகவும். பிறர் நலத்திற்காகவும் ஆன இரண்டிற்காகவும் உழைக் கிறாரோ அவரைப் பொறுத்தவரை — இந்நான்கு பேர்களிலும் அவரே சிறந்தவர்—- தலையானவர் — உயர்வெய்தியவர் — மேலானவர்; மிக்குயர்ந்தவர்;”. “பிறர் உண்மை பற்றியும், விடுதலை பற்றியும் தவறானக் கருத்துடையோ ராயிருப்பினும், நீ உண்மையை பற்றியும், விடுதலையை பற்றியும் சரியான கருத்துடனிருக்க வேண்டும்” ‘எழு‚ அசட்டையாயிராதே‚ போதனையின் நல்வழியில் நட‚ போதனை வழி நடப்பவன் உலகெங்கிலும் இன்புறுகிறான்.”

Read More

என்னுடைய 55வது பிறந்த நாளை முன்னிட்டு உங்களுடைய சிறப்பு மலருக்கு ஒரு செய்தி அனுப்புமாறு என்னை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவில் அரசியல் தலைவர் தீர்க்கதரிசியின் அந்தஸ்தில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமான உண்மை யாகும். இந்தியாவுக்கு வெளியில் தமது தீர்க்கதரிசிகளின் பிறந்த நாளை மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் மட்டுமே தீர்க்கதரிசிகளின் பிறந்த நாட்கள் போன்றே அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களும் கொண்டாடப் படுகின்றன. அது இவ்வாறு இருப்பது பரிதாபத்திற்குரியதே. தனிப்பட்ட முறையில், என்னுடைய பிறந்த நாள் கொண்டாடப் படுவதை நான் விரும்பவில்லை. நான் ஓர் அதீத ஜனநாயகவாதியாக இருப்பதால், மனித வழிபாட்டை நான் விரும்புவதில்லை. இதை ஜனநாயகத்தின் ஒரு வக்கிரம் என்று கருதுகிறேன். ஒரு தலைவரைப் பாராட்டுவது, நேசிப்பது, மரியாதை செய்வது, மதிப்பது ஆகியவை அவற்றிற்கு அவர் தகுதியுடையவராயிருந்தால் அனுமதிக்கப் படக்கூடியவையே. தலைவருக்கும் அவரைப் பின்பற்று பவர் களுக்கும் இது ஏற்புடையதாகும். ஆனால் தலைவரை வழிபடுவது நிச்சயமாக அனுமதிக்கப்பட முடியாதது.…

Read More

கச்சநத்தம் கிராமத்தில் சாதி வெறியர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பட்டியல் சாதி பள்ளர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.ஆறு பேர் கடும் காயத்துடன் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் சிகிச்சை எடுத்துவந்த சந்திரசேகர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். லாரி ஓட்டுனராக பணியாற்றும் சந்திரசேகர் அவர்களுக்கு தவமணி என்கிற மனைவியும் 6 வயதில் மகளும் 5 வயதில் மகனும் இருக்கின்றனர்.

Read More

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள் சாதிய கொலைகளின் முதன்மை மாவட்டமாக சிவகங்கை சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், பழையனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் கச்சநத்தம். இக்கிராமத்தில் வசித்து வருகிற இந்து பட்டியல் சாதி பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் (31) த.பெ.அறிவழகன் மற்றும் ஆறுமுகம் (65) த.பெ.கோனான் ஆகியோரை சுமார் 20 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் நேற்று 28.05.2018 அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனசேகரன், மலைச்சாமி, சுகுமார், சந்திரசேகர், தெய்வேந்திரன், மகேஸ்வரன் ஆகிய 6 பேருக்கு கடுமையான அரிவாள் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து பழையனூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.32/2018 பிரிவுகள் 147, 148, 294(b), 324, 307, 302 இ.த.ச. மற்றும் பசடடஈக அஸ்ரீற் மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r),…

Read More

சில காரணங்களை மனதில் வைத்தே அம்பேத்கர் அவர்கள் fools rushing in where the angels fear to tread என்ற முதுமொழியை ஏன் பயன்படுத்தினார் என்று முகநூல் தோழர்களிடத்தில் கேள்வி எழுப்பினேன். வழக்கமாக அறிவுத் தளத்தில் விவாதிக்கத் தெம்பற்று வெறும் படங்களைப் போட்டு தன்னை முன்னிருத்திக் கொள்ளத் துடிக்கும் போக்கிலிருந்து நமது தோழர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான்.. சரி மூதுரையினை அம்பேத்கர் ஏன் பயன்படுத்தினார் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பு அதன் மூலத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் அம்பேத்கரின் மேதமையைப் புரிந்துக்கொள்ளத் தொடங்குவோம். fools rushing in where the angels fear to tread சொற்றொடரை முதலில் பயன்படுத்தியவர் Alexonder Pope என்று தோழர் ரூபா நேட் அவர்கள் சொன்னது உண்மை. அலெக்சாண்டர் போப் தான் எழுதிய An Essay on Criticism என்ற நூலில்தான் முதன்முதலில் எழுதினார், அந்த நூல் 1711 மே மாதம் 15ம் நாள்…

Read More

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கேரளாவில்  30 தலித் அமைப்புகள் இன்று நடத்தி வரும் வேலைநிறுத்தத்தால்  இயல்பு வாழ்க்கை முடங்கியது.. ஏப்ரல் 2 ம் தேதி நாடுமுழுவதும் சில குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்துக்கு அழைப்பு விடுத்திருந்த போது கேரளாவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மாநிலஅரசின் போக்குவரத்துக் கழகம், தனியார் பேருந்து இயக்குநர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் வழக்கம்போல இயங்கும் என்று முன்னதாகவே அறிவித்திருந்தன. ஆனால் மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை ஓடுவதை தடுத்து நிறுத்தும் வகையில் வழிமறித்தனர். கொச்சியில், போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்த தலைவர்களில் முக்கியமானவரான கீதானந்தன் இன்று கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்., கைது செய்யப்படுவதற்கு முன் கீதானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கேரளா முழுவதும் பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வகையில் எங்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியடைந்துள்ளது. நாங்கள் கைது செய்யப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.. ” என்றார். கண்ணூர்…

Read More

தலித் அமைப்புகள் நடத்திய பொதுவேலை நிறுத்தத்துக்கு தலைமை வகித்த இளைஞரை வன்முறையாளர் என முத்திரை குத்தி கொலைப்பட்டியல் வெளி யிட்ட சங்பரிவார் அமைப்பினர், அதன்படியே கொலை செய்து விட்டனர். உத்தரப்பிரதேசம் மீரட்டுக்கு அருகில் உள்ள சோபாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் தலித் தலைவர் கோபி பரூயான் (28). அண்மையில் தலித் அமைப்புகள் நடத்திய பாரத் பந்தில் முன்னணியில் நின்று செயல்பட்டுள்ளார். சங்பரிவார் அமைப்பினர் அவரை வன்முறையாளர் என குறிப்பிட்டு முதல் நபராக கொலைப்பட்டியல் (ஹிட் லிஸ்ட்) வெளியிட்டிருந்தனர். அதன்படி அவரை சுட்டுக் கொன்றனர். ஏப்ரல் 14 அன்று தலித் அமைப்புகள் நடத்த திட்ட மிட்டுள்ள அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த கொலைபாதகம் நிகழ்த்தப்பட்டி ருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. என்ன நடந்தாலும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெறும் எனவும், அச்சுறுத்தல்களுக்கு தலித்துகள் அடிபணிய மாட்டார்கள் எனவும் மீரட்டில் நடந்த தலித் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர். ஏற்கெனவே கோபி பரூயாவை வன்முறையாளர்…

Read More

போபால், ஏப். 2 – தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு தலித் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்; தலித்துக்கள் மற்றும் பழங்குடியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆவேசமிக்க போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.அதனொரு பகுதியாக, திங்கட் கிழமையன்று நாடு தழுவிய ‘பந்த்’ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த தலித் அமைப்பினர், சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களையும் நடத்தினர். இப்போராட்டங்களால் உத்தரப்பிர தேசம், பீகார், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்கள் ஸ்தம்பித்த நிலையில், தலித் மக்களின் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத, மத்தியப் பிரதேச மாநில பாஜக அரசு, தனதுகாவல்துறை மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி தலித்துக்கள் 7 பேரை படுகொலை செய்துள்ளது. மேலும், பல இடங்களில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களில் ஒன்றான பஜ்ரங்-தள்…

Read More

சிதம்பரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமாறன். இவரது மகள் வைத்தீஸ்வரி (வயது 16). இவர் புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வேலைக்கு சென்ற வைத்தீஸ்வரி மாலையில் வீடு வந்து சேரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் வைத்தீஸ்வரியை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒரத்தூர் காவல்நிலையத்தில் வைத்தீஸ்வரியின் பெற்றோர் மகளை காணவில்லை எனக் கூறி புகார் செய்தனர். இதனிடையே இன்று அதிகாலை வைத்தீஸ்வரி ஊருக்கு வெளியே வயலில் சடமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய ஒரத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வைத்தீஸ்வரியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தீஸ்வரி வேலை முடிந்து வீடு திரும்பிய நேரத்தில் கும்பல் ஒன்று அவரை…

Read More

சூத்திரர்கள் ஆரியரல்லாத பூர்வகுடி இனத்தவராக இல்லையெனில் அவர்கள் யார்? இக்கேள்வியை இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டும். நான் முன்வைக்கப் போகும் கொள்கை நிலையை பின்வரும் மூன்று கருத்துக்கள் தெளிவுபடுத்தக்கூடும்: 1) சூத்திரர்களும் ஆரியர்களே. 2) சூத்திரர்கள் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 3) பழங்கால ஆரிய சமுதாயத்தினரின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த மன்னர்களில் சிலர் சூத்திரர்களாக இருந்தனர் என்பதால் சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு முக்கிய வர்க்கத்தினராக இருந்தனர். சூத்திரர்களின் தோற்றுவாய் சம்பந்தப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை ஒரு புரட்சிகரமான ஆய்வுக்கட்டுரையாக இல்லாவிடினும் திகைப்படையச் செய்யும் ஆய்வுக் கட்டுரையாக இருக்கும். இக்கருத்துக்கு ஆதரவாகப் போதுமான சான்றுகள் இருந்தபோதிலும்கூட பலர் இதை ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு இது திகைப்பூட்டக் கூடியதாகும். எனது கடமை சான்றுகளை எடுத்துவைப்பதேயாகும். அதன்மதிப்பை சீர்தூக்கிப் பார்க்கும் பொறுப்பை மக்களிடம் விட்டுவிடுகிறேன். இந்த ஆய்வுக்கட்டுரை ஆதாரமாகக் கொண்டுள்ள முக்கியச் சான்று மகாபாரதத்தின் இயல் 60இல் செய்யுள்வரிகள் 38-40 இல் வருகிறது. அது…

Read More