Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » அன்னை ஓரு ஆலமரம்
    சிறப்பு கட்டுரைகள்

    அன்னை ஓரு ஆலமரம்

    SasikumarBy SasikumarJune 30, 2018No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    எனது அன்னை திருமதி,த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மறைந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எனது நினைவலைகளில் அம்மாவின் முகம் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, என் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கே ஒரு தாயைப் போல் சேவை செய்ததால் தான் அவர்களை எல்லாருமே “அன்னை மீனாம்பாள்” என்று அன்போடு அழைக்கிறார்கள். என்னைப்பெற்ற அன்னை இந்த சமுதாயத்தாயாக உயர்ந்ததில் என் உள்ளமெல்லாம் மகிழ்கிறது.

    ஏனெனில் எனக்கு நினைவு தெரிந்த சின்ன வயசிலிருந்தே என் அம்மா சமூகப் பிச்சனை சம்பந்தமாகவே பேசிக் கொண்டிருப்பார்கள். அதற்கான விடிவு தேடியே பணியாற்றிக் கொண்டிருப்பார்கள்.
    ஒரு சின்னச் சம்பவம் என் நினைவில் சுழல்கிறது. அதாவது வெள்ளையர் ஆட்சி காலத்தில், ஒரு ஷெட்யூல்டு சமூகத் தொழிலாளி கைகடிகாரம் கட்டியிருந்ததாலேயே, பெரியமேடு போலீஸ்காரர்க ளால் கைது செய்யப்பட்டுவிட்டார். ஏனெனில் அந்த காலத்தில் கடிகாரம் கட்டுபவர்கள் கனவான்களாகவும், பெரிய பணக்காரர் களாகவும், அரசாங்க அதிகாரிகளாகவும் தான் இருப்பார்கள். அதனால் ஒரு தாழ்த்தப்பட் தொழிலாளிக்கு எப்படி கை கடிகாரம் கிடைத்தது என்று சந்தேகப்பட்டு, கைது செய்துவிட்டீர்கள். அப்போது கவுரவ நீதிபதியாக இருந்த என் அம்மா இந்தப் பிரச்சனையை கேள்விப்பட்ட உடனேயே போலீஸ்துறை உயர் அதிகாரிக்கு போன் செய்து, விளக்கம் கொடுத்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வைத்தார்கள். இப்படி சின்னசின்ன விஷயங்களிலெல்லாம் கூட அக்கரை எடுத்து என் தாய் செய்து முடிப்பார்கள்.
    அந்த காலத்தில் சென்னையில் நமது மக்கள் வாழும் சேரிப் பகுதிகளை சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைத்துக் கொளுத்தி விடு வார்கள். அந்த நேரத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் சென்று, பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு, அவர்க்ளுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி அதிகாரிகலை போய் சந்தித்து பேசுவார்கள். இப்படி மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதில் என் அன்னைக்கு சோர்வே வந்ததில்லை.

    செங்கல்பட்டு மாவட்டம், னிணாம்பேடு என்ற கிராமத்தில் மக்கள் வேட்டியை முழுங்காலுக்கு கீழே கட்டக் கூடாது. செருப்பு போடக்கூடாது . என்று கட்டுப்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட என் தாய் அந்த கிராமத்திற்கே துணிச்ச லாகச் சென்று அக்கிராம மக்களைத் திரட்டி, அவர்கள் மத்தியில் வீர உரையாற்றி அவர்களை முழங்காலுக்கு கீழே வேட்டி கட்டவும், செருப்பு போடவும் வைத்து, ஒரு ஊர்வலத்தையும் அந்தப் பகுதியில் நடத்தினார்கள். இது மட்டுமல்ல அதிகாரிகளைச் சந்தித்துப்பேசி இந்தக் கொடுமைகளைச் செய்வதில் மிகத் தீவீரமாக இருந்த சாதி வெறியர் சிலரை கைது செய்து, கை விலங் கிட்டு வீதியில் அழைத்து வந்து காவலில் வைக்கவும், பிறகு தண்டனை கிடைக்கவும் தகுந்த ஏற்பாடு செய்தார்கள்.
    அந்த நாட்களில் தலைவர்களால் “நாய்க்கர்” என்று குறிப்பிட்டு அழைக்கப்பட்ட நீதிக்கட்சித் தலைவர் ஈ.வெ.ரா. அவர் களுக்கு “ பெரியார்” என்றுபட்டம் அம்மா முன்னிலை வகித்த பெண்கள் மாநாட்டில்தான் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

    அம்மாவிற்கு தமிழ், தெலுங்கு, இந்தி , ஆங்கிலம், மொழிகள் நன்றாகத் தெரியும். இதனால் அவர்கள் அகில இந்திய அளவிலும் அரசியலில் ஈடுபட்டு புகழ் பெற்றார்கள். அண்ணல் அம்பேட்கரின் பாசத்திற்குரிய சகோதரியாகவும் திகழ்ந்தார்கள் பல பதவிகளை வகித்தார்கள். எனது தந்தையார் சிவராஜ் அவர்கள் எவ்வளவு புகழோடு இருந்தார்களோ அந்த அளவிற்கு அம்மாவும் செல்வாக் கோடு திகழ்ந்தார்கள். இப்படி, அந்தக் காலத்தில் “கணவன் மனைவியும்” சமூகப் பணிகளில் ஒரு சேர ஈடுபட்டு பேர் பெற்ற வர்கள் என்றால் என் அம்மாவும் – அப்பாவும் தான் என்று பலபேர் இன்று என்னிடம் தெரிவிக்கும் போது அவர்ஸீ÷து பிள்ளை நான் என்பதில் மிகுந்த மனநிறைவு ஏற்படுகிறது.

    அம்மா ஆற்றிய சமூகப் பணிகளால் அவரைத் தேடி வந்த பதவிகள் ஏராளம். சென்னை மாகான கவரவ நீதிபதியாக -18 ஆம் ஆண்டுகள், சென்னை பல்கலைக்கழக உறுப்பினராக- 6 ஆண்டுகள், சென்னை பல்கலைகக்கழக உறுப்பினராக-6 ஆண்டுகள், சினிமா தணிக்கை குரு உறுப்பினராக- 9 ஆண்டுகள், சென்னை கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குனராக- 6 ஆண்டுகள், சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குனராக-12 ஆண்டுகள், பெண்கள் கூட்டுறவு தொழில் வாரியத்தின் தலைவராக-6 ஆண்டுகள், மற்றும் பாரி கம்பெனி தொழிற்சங்கத் தலைவராக, லேடி வெலிங்கடன் கல்லூரி தேர்வுகுழு உறுப்பினராக, டி.யூ.சி.எஸ் அடையாறு கிளை இயக்குனராக, அடையாறு பஞ்சாயத்து தலைவராக, காந்திநகர் பெண்கள் சங்க தலைவியாக, உயிர்வதைத் தடுப்புச் சங்க உறுப்பின ராக, முன்னாள் கைதிகள் மறுவாழ்வு சங்க அங்கத்தினராக, மருத்துவமனை அரசாங்க பார்வையாளராக….. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல்வேறு பதவிகளில் வீற்றிருந்து அம்மா, மக்கள் பணி செய்துள்ளார்கள்.

    இப்படியெல்லாம் சமுகப் பணி செய்ததால் தான் சென்னை நகரின் பல இடங்களில் என் அன்னையின் பெயரில் பல தெருக் களும், நகர்களும் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

    தாழ்த்தப்பட்ட மக்களின் துயர் துடைக்க அல்லும் பகலும் அயராது உழைத்த என் அன்னை, முதிய வயதின் மூப்பினால் தனது 90 வது வயதில் 30.11.92ல் காலமான போது இன்றுள்ள சமுதாயத் தலைவர்களெல்லாம் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது என்னால் மறக்க முடியாத நெகிழ்ச்சியான சம்பவமாகும்.
    என் அன்னை தான் வாழ்ந்த காலத்தில் இந்த சமுதாய மக்கள் தங்கள் துயரங்களை இறக்கி வைத்து இளைப்பாறும் ஒரு ஆலமரமாய் விளங்கனார்கள். அதிலிருந்து பல விழுதுகள் தோன்றி இன்று நம் சமுதாயத்தை தாங்கிப் பிடித்து கொண்டிருப்பது கண் கூட மிகவும் மகிழ்கிறேன்.

    குறிப்பு: இக்கட்டுரையாசிரியர் எஸ்.போதிசந்தர் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் இளைய மகனாவார்.

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleமேலவளவு – கொடூர சாதி வெறி
    Next Article ஒரேயொரு ஒருசொல்
    Sasikumar
    • Facebook

    அம்பேத்கரியர், கற்பி அறக்கட்டளையின் நிறுவனர். அம்பேத்கர்.இன் இணையதளத்தின் உறுவாக்கத்திற்கு காரணமானவர்களின் ஒருவர்.

    Related Posts

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    ‘Pranay Amar Rahe!’: Thousands attend Pranay Perumalla’s funeral in Miryalaguda

    September 16, 2018

    முத்துக்கிருஷ்ணன்கள் தற்கொலைசெய்துகொள்வதின் பின்னணி என்ன?

    March 25, 2017

    சாதிகளால் பிளவுண்ட மக்கள் ஒரு தேசமாக முடியுமா?

    September 2, 2017

    சாதி என்னும் பெருநோய்!

    October 5, 2015
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d