Author: Sasikumar

லக்னோவில் 25.4.1948 அன்று, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு மாநாட்டில் நான் நிகழ்த்திய உரையைத் திரித்தும் சிதைத்தும் வெளியிட்டிருப்பதைக் கண்டேன். எனது தோழர்களுக்கு எதிராக நான் பண்பற்ற வார்த்தைகளைக் கூறியதாக, உள்ளூர் பத்திரிகை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது கேட்டு மனம் புண்பட்டுள்ளேன் என்பதைச் சுருக்கமாகக் கூறுவது அவசியமாகிறது. எனது உரையில் கண்ட அம்சங்களை கீழே தருகிறேன். எனக்கெதிராகத் தொடுக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கு பதில் சொல்லுவதே இதன் நோக்கம் : 1. அமைச்சரவைக் குழு வந்து சென்ற பிறகு நான் ஏன் அமைதி காத்தேன்? 2. காங்கிரஸ் அரசில் நான் ஏன் இணைந்து கொண்டேன்? 3. எதிர்காலத்தில் நான் செய்யப் போவது என்ன? முதல் கேள்விக்கு எனது பதில் : பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, அரசியல் பாதுகாப்பை கோரியது. இதில் முக்கியமானது தனி வாக்காளர் தொகுதி. ஆரம்ப கட்டத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், பட்டியல் சாதியினர் முழுமையும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது புரியும். இப்படி…

Read More

‘நான் பாபாசாகேபை (அம்பேத்கரை) கடைசிமுறையாக அவருடைய மரண ஊர்வலத்தில் பார்த்தேன். அன்று காலை சாவகாசமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். செய்தித்தாளின் முதல் பக்கத்தில், அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தியைப் படித்தேன். ஏதோ நிலம் கிடுகிடுப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. என்னுடைய குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டதைப் போல உணர்ச்சிவசப்பட்டேன். வாசல் கதவின் தூணைப் பற்றிக்கொண்டு அழ ஆரம்பித்தேன். செய்தித் தாளை வாசித்துக் கொண்டிருந்தவன் ஏன் திடீரென்று அழுகிறானென என்னுடைய அம்மாவுக்கோ மனைவிக்கோ பிடிபட வில்லை. அம்பேத்கர் மரணமடைந்த செய்தியை அவர்களிடம் சொன்னதும், ஒட்டுமொத்தக் குடும்பமே கண்ணீர் வடித்தது.வீட்டை விட்டு வெளியே வந்ததும் சாரை சாரையாக மக்கள் கூடி, அம்பேத்கர் மரணச்செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. பாபாசாகேப் டெல்லியில் காலமானார். அவரின் உடலைத் தாங்கிய விமானம் அன்று மாலையே பம்பாய் வந்து சேர்வதாக இருந்தது. நான் வேலையில் சேர்ந்து வெறும் மூன்று மாதங்களே ஆகியிருந்தன. நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச்…

Read More

நவம்பர் 26, 2025 அன்று, பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு தினத்தை குறிக்கும் வகையில், நீதி, ஜனநாயகம் மற்றும் கல்வித் துறைகளில் டாக்டர் அம்பேத்கரின் உலகளாவியப் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக, யுனெஸ்கோ பாரிஸில் அவரது மார்பளவு சிலையை திறந்து வைத்த்துள்ளது. திறப்பு தேதி: நவம்பர் 26, 2025 (அரசியலமைப்புச் சட்டம் தினம்) இடம்: யுனெஸ்கோ தலைமையகம், பாரிஸ், பிரான்ஸ் நோக்கம்: டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் உலகளாவியப் பங்களிப்புக்கு அஞ்சலி செலுத்துதல் மற்றும் யுனெஸ்கோவின் இலட்சியங்களுடன் அதை இணைத்தல்

Read More

டிஆர் பிஆர் அம்பேத்கர் பிறந்த மற்றும் இறந்த தேதி:டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அல்லது பாபாசாகேப் என்று அன்புடன் அழைக்கப்படுபவர், ஏப்ரல் 14, 1891 இல் பிறந்தார் . அவர் நம்மை விட்டுப் பிரிந்த நாளைக் குறிக்கும் வகையில் 1956 டிசம்பர் 6 வரை இந்தப் பூவுலகில் அவரது பயணம் தொடர்ந்தது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஆம் தேதி, அவர் நம் தேசத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் அவரது நினைவு நாளைக் கடைப்பிடிக்கிறோம்.எல்லாம் தொடங்கிய இடம்:பாபாசாகேப்பின் பயணம் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ் என்ற சிறிய நகரத்தில் தொடங்கியது. சமூகப் பாகுபாடுகளை எதிர்கொண்ட குடும்பத்தில் பிறந்த இந்தச் சிறுவன், லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையின் அடையாளமாகவும் மாற்றத்தின் அடையாளமாகவும் வளர்வான் என்பது யாருக்கும் தெரியாது.அவர் வெளியேறியதற்கான காரணம்:பி.ஆர்.அம்பேத்கரின் மரணத்திற்கான காரணம்: இந்த நாளில் அவரை நினைவுகூரும்போது, ​​பாபாசாகேப் அம்பேத்கர் ஏன் அந்த துரதிஷ்டமான நாளில் நம்மை விட்டுப் பிரிந்தார் என்பதைப்…

Read More

75 ஆண்டுகளுக்கு மேலாகிறது: உச்சநீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை19 டிசம்பர் 202214 ஏப்ரல் 2020 அன்று அமிர்தசரஸில் இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதி பி.ஆர்.அம்பேத்கரின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு துப்புரவுத் தொழிலாளி மாலை அணிவித்தார். உச்ச நீதிமன்ற புல்வெளியில் பி.ஆர்.அம்பேத்கரின் சிலையை நிறுவ வேண்டும் என்று அம்பேத்கரைட் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர்.  டிசம்பர் 6 அன்று, சமூக நீதிக்கான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள், இந்தியாவின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம், பாபாசாகேப் என்று அழைக்கப்படும் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான பி.ஆர். உச்ச நீதிமன்ற புல்வெளிகள். சமீபத்திய ஆண்டுகளில், BALSJ உறுப்பினர்கள் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்குத் தலைமை தாங்கிய அம்பேத்கரின் உத்தியோகபூர்வ நினைவேந்தலுக்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். பொது நினைவிடத்தில் யாரை நினைவு கூர்ந்து கவுரவிக்கிறார்கள் என்ற முக்கியமான கேள்விகளை அந்தக் கடிதம் எழுப்பியுள்ளது.BALSJ இன் உறுப்பினரான பிரதிக் பாம்பார்டே…

Read More

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 1இல் இரண்டாவது பகுதியாக உள்ள மொழிவாரி மாநிலங்கள் குறித்த அவரது கட்டுரைகளை நாம் இங்கு பரிசீலிக்கலாம். இப்பகுதி மூன்று கட்டுரைகளைக் கொண்டுள்ளது. முதல் கட்டுரை 1948இல் மொழிவாரி மாநில ஆணையத்திற்கு அம்பேத்கர் அளித்த அறிக்கை. இரண்டாவது கட்டுரை, மொழிவாரி மாநிலங்கள் குறித்து “டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில் 23.4.1953 அன்று அவர் எழுதிய கட்டுரை. மூன்றாவது கட்டுரை 1955 டிசம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் அவர் எழுதியது சிறுநூலாக வெளிவந்தது. இவற்றுள் முதல் கட்டுரை இரண்டு விஷயங்களைப் பரிசீலிக்கிறது. அவை, 1. மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதில் உள்ள சாதக, பாதகங்கள் 2. பம்பாயை மொழிவாரி மாநிலமாக அமைப்பது தொடர்பான சிக்கலும் அதற்கு அம்பேத்கர் அளிக்கும் தீர்வும். மொழிவாரி மாநிலம் அமைப்பதால் விளையும் நன்மையாக, அது ஜனநாயகத்திற்கு தேவையான சமூக ஒருமிப்பு உருவாக்குவதை அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். இதற்கு மாறாக, சமூக ஒருமிப்பு இல்லாத பன்மைத் தன்மை…

Read More

சனாதனம் நல்லது என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து கொண்டு வருகிறது. இன்றைய கால கட்டத்தில் தோழர் திருமாவளவன் மூலமாகத் தான் அந்தச் சொல்லின் ஆபத்து என்ன என்ற விளக்கம் மக்களுக்குத் தெரிகிறது, அவரைப் பாராட்டுகிறேன். இதை என்னவாக சொல்வது என்று நிறைய பேருக்கு குழப்பம் உள்ளது. இந்துத்துவப் பயங்கரவாதம் என்று சொல்லலாம்? சாதாரணமாக திருநீர் பூசிக்கொண்டு யாருடனும் சண்டைக்கு போகாத ஒரு சகோதரருக்கு நம்மை பயங்கரவாதி என்று சொல்கிறார்களோ என்று தோன்றுகிறது. நான்பாட்டிற்கு கோவிலுக்கு போகிறேன், திருநீர்பூசுகிறேன், படையல்போடுகிறேன், கடாவெட்டுகிறேன், என்னைப் போய் ஏன் பயங்கரவாதி என்று சொல்கிறீர்கள், என்று அவர் கேட்டால் உன்னைச் சொல்லவில்லை என்று சொல்ல வேண்டி இருக்கிறது. காவி பயங்கரவாதம் என்றாலும் காவி என்பது எல்லாமே பயங்கரவாதம் கிடையாது. வள்ளலாரும் காவியும் வெள்ளுடையும் தான் அணிந்தார். “செங்கல்பொடிக் கூரை வெண் பல் தவத்தவர்” என்று ஆண்டாள் பாடினார், (கூரை என்றால் ஆடையைக் குறிக்கும்) காவி என்பது செங்கல்…

Read More

இந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் நான் பயன்படுத்தும் அளவுகோல் மிகவும் கடுமையானது. இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால், இன்றுள்ள நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் தோற்றே போகும் என்கிறார் ‘மகாத்மா’. என் அளவுகோலின் தரம் உயர்வானது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அவை உயர்வானவையுõ தாழ்வானவையுõ என்பதல்ல பிரச்சனை. அவை சரியானவையுõ என்பதே.சமூக நீதியின் அடிப்படையிலான சமூக அளவுகோலைக் கொண்டே மக்களையும் அவர்களின் மதத்தையும் மதிப்பிட முடியும். மக்களின் நன்மைக்கு அவசியமானதே மதம் என்று கொள்ளப்பட்டால், வேறு அளவுகோலைப் பயன்படுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் நான் பயன்படுத்தும் அளவுகோலே மிகச் சரியானது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். அதைவிட சரியான வேறு எந்த அளவுகோலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் என் அளவுகோலின் முன் தோற்றுப் போகலாம் என்ற கருத்து உண்மையாயிருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து, ‘மகாத்மாவை’ இந்துக்களின் தானைத் தலைவன் என்பதாகவும்…

Read More

 “டைம்ஸ் ஆப் இந்தியா” அம்பேட்கர் ஆற்றல் மிககக, அருந்திறன் வாய்க்கப்பெற்ற பல்துறை வல்லுனராக விளங்கினார். இந்நாட்டிற்கும் அவருடைய வகுப்பு மக்களுக்கும் சிறந்த முறையில் அவர் தொண்டாற்றினார். `இந்துஸ்தான் னடைம்ஸ்” அம்பேட்கர் இந்நாட்டிற்கு ஆற்றிய அருந்தொண்டுகள் அழியாத நினைவுச் சின்னங்களாக என்றும் வாழும். அவர் காலத்தில் வாழ்ந்தவர்களின் நெங்சங்களில் அவரிடம் இருந்த பல்துறை சான்ற பண்புகள் நிலைத்து நிற்கும். “ ஸ்டேட்ஸ் மேன்” அம்பேட்கர் கொண்டிருந்த ஆழ்ந்த கல்வியறிவும், சட்டம், பொருளியல், சமூகவியல், தொழிலாளர் நலன், அரசியல் போன்ற பல்வேறுபட்ட குறைகளில் அவர் பெற்றிருந்த அனுபவமும் அவருக்கு இன்னும் நல்லிணக்கமான சூழ்நிலை வாய்க்கப் பெற்றிருப்பின் எழுத்துலுகிற்கு மேலும் ஒப்பரிய பங்களிப்பை ஆகியிருப்பார். “ நியூயார்க் டைம்ஸ்” தீண்டப்படாத வகுப்பு மக்களின் விடுதலைக்காகப் போராடும் தலைவர் என்ற முறையில்தான் அம்பேட்கரை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்; மதிக்கிறார்கள், ஆனால் இந்தியாவிற்கான பெரும்பகுதிச் சட்டங்களின் உருவாக்கத்தில் அவர் மாபெரும் பங்களிப்பை அளித்திருக்கிறார் என்பது இன்னும்…

Read More

எனது அன்னை திருமதி,த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மறைந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எனது நினைவலைகளில் அம்மாவின் முகம் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, என் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கே ஒரு தாயைப் போல் சேவை செய்ததால் தான் அவர்களை எல்லாருமே “அன்னை மீனாம்பாள்” என்று அன்போடு அழைக்கிறார்கள். என்னைப்பெற்ற அன்னை இந்த சமுதாயத்தாயாக உயர்ந்ததில் என் உள்ளமெல்லாம் மகிழ்கிறது. ஏனெனில் எனக்கு நினைவு தெரிந்த சின்ன வயசிலிருந்தே என் அம்மா சமூகப் பிச்சனை சம்பந்தமாகவே பேசிக் கொண்டிருப்பார்கள். அதற்கான விடிவு தேடியே பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். ஒரு சின்னச் சம்பவம் என் நினைவில் சுழல்கிறது. அதாவது வெள்ளையர் ஆட்சி காலத்தில், ஒரு ஷெட்யூல்டு சமூகத் தொழிலாளி கைகடிகாரம் கட்டியிருந்ததாலேயே, பெரியமேடு போலீஸ்காரர்க ளால் கைது செய்யப்பட்டுவிட்டார். ஏனெனில் அந்த காலத்தில் கடிகாரம் கட்டுபவர்கள் கனவான்களாகவும், பெரிய பணக்காரர் களாகவும், அரசாங்க அதிகாரிகளாகவும் தான் இருப்பார்கள். அதனால் ஒரு தாழ்த்தப்பட் தொழிலாளிக்கு…

Read More