Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » மோடியின் சொந்த ஊரில் தலித் வன்கொடுமை
    Atrocities

    மோடியின் சொந்த ஊரில் தலித் வன்கொடுமை

    Sridhar KannanBy Sridhar KannanFebruary 8, 2018No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மோடியின் சொந்த ஊரில் தலித் வன்கொடுமை: பள்ளி ஆசிரியர்களின் சித்ரவதையால் மதிய உணவு மேலாளர் தற்கொலை

    சித்தரிப்புப் படம்.

    குஜராத் மாநிலத்தில் பிரதமரின் சொந்த ஊரான வத்நாகருக்கு அருகிலுள்ள பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் மூவரால் வன்கொடுமைக்கு ஆளான தலித் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

    சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வத்நாகர் நகர தொடக்கப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றிவந்த தலித் மேலாளர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக மூன்று பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கண்டெடுக்கப்பட்ட கடிதம்

    சவுகான் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றிய கடிதத்தை அவரிடமிருந்து போலீஸார் கண்டெடுத்தனர். சவுகானின் மனைவி இலாபென், கணவரின் தற்கொலைக்குக் காரணம் ஷேக்பூர் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள்தான் எனவும் அவர்களை உடனடியாக கைது செய்யும்படியும் வத்நாகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து வாத்நகர் வட்டார காவல் ஆணையாளர் ஆர்.எல்.கராதி தெரிவிக்கையில், ”தற்கொலைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பள்ளி ஆசிரியர்கள் மோமின் ஹசன் அப்பாஸ்பாய், விநோத் பிரஜாபதி மற்றும் அமாஜி தாகூர் ஆகிய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மூவர் மீதும் (இபிகோ பிரிவு 306) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

    மோசமான பண நெருக்கடியிலும்….

    வத்நாகர் அருகே யுள்ள ஷேய்க்பூர் கிராம தொடக்கப் பள்ளியில் மத்திய உணவுத் திட்ட மேலாளராக பணியாற்றிவந்த சவுகான் கடந்த ஒரு வருடமாக ரூ.1,600 மாத ஊதியம் பெற்று பணியாற்றி வந்தவர். அதே பள்ளிக்கூடத்தில் சமையல்காரராக சவுகானின் மனைவி இலாபென் பணியாற்றி வந்தார்.

    இலாபென் தனது புகார் மனுவில், ”எனது குடும்பம் மோசமான பண நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த போதிலும், இந்த மூன்று ஆசிரியர்களும் ஸ்நாக்ஸ் எனப்படும் தின்பண்டங்களுக்காக என் கணவரை பணம் செலவழிக்க கட்டாயப்படுத்தினர். மேலும் ஆசிரியர்கள் கொடுத்து வந்த நெருக்கடிகளால் என் கணவர் மனமுடைந்த நிலைக்கு தள்ளப்பட்டார். தலித் சமூகத்தவர் என்பதால் அவர்களின் வன்கொடுமைகளுக்கு தன் கணவர் உட்படுத்தப்பட்டார். அதனாலேயே அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறியுள்ளார்.

    ”சவுகானின் தற்கொலையை அடுத்து பள்ளியில் பணியாற்றி வந்த அம் மூன்று ஆசிரியர்களும் விடுப்பில் சென்றுவிட்டனர். நாங்கள் அந்த ஆசிரியர்கள் மீது எப்ஐஆர் பதிந்துள்ளோம். மேலும் இந்த வழக்கை எஸ்சி/எஸ்டி பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று ஆர்.எல்.கராதி தெரிவித்தார்.

    குஜராத் அமைச்சர் உறுதி

    இதை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு, குஜராத் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் இஷ்வார் பார்மர் இந்த சம்பவத்தின்மீது விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    மேலும், அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    Courtesy : Tamil Hindu

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Article“இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல… நமது உரிமை!” – எழுத்தாளர் பாமா
    Next Article விரட்டும் சாதி வெறி…
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    அம்பேத்கர் – காந்தி இடையிலான சாதி குறித்த விவாதத்தைக் காண விருப்பம்!’ – ஜான்வி கபூர்

    June 2, 2024

    சாதி வெறியர் யார்? கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி எப்படி வேரூன்றியுள்ளது?

    April 27, 2024
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    Random Posts

    தலித் வரலாற்றியலில் உள்ளூர் ஆவணங்கள்

    August 9, 2025

    புதிய கல்விக் கொள்கை – 2016

    September 9, 2017

    அய்யா எல்.சி. குருசாமி

    May 27, 2010

    The power to disempower: The government of caste and the career of Dr Sathiavani Muthu in Tamil Nadu, circa 1960–1979

    October 14, 2025
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d