Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » ஆசை தான் துன்பத்துக்கு காரணமா?
    பௌத்தம்

    ஆசை தான் துன்பத்துக்கு காரணமா?

    VendhanBy VendhanJanuary 23, 2022No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஆசை தான் துன்பத்திற்கு காரணமா?

    புத்தரின் பல கோட்பாடுகள் சமூகத்தில் பல குழப்பட்டும் தவறாக கருதப்பட்டும் உள்ளன. அதில் ஒன்று தான் புத்தரின் * ஆசையே துன்பத்திற்கு காரணம் / அவா அறுத்தல்*.

    ஆசை / அவா இந்த சொற்களுக்கான உண்மையான பொருள் தெரியாததால், இந்த கோட்பாடே தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு பொதுசமூகத்தில் பல எதிர் கேள்விகளை கேட்கவைக்கிறது.

     ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் புத்தர். ஆசையில்லாமல் மனிதர்கள் எப்படி வாழ முடியும்.

    இந்தியா விடுதலையடைய வேண்டும் என்கிற ஆசை இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா விடுதலை பெற்றிருக்குமா?

    தீண்டாமையற்ற சாதியற்ற சுரண்டலற்ற சமூகம் அமைய தலைவர்கள் ஆசைபடாமல் இருந்திருந்தால் போராட முடியுமா?

    * தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி சுகாதாரம் கொடுக்க பெற்றோர் ஆசைப்படுதலே தவறா?

    குழந்தையில்லாத தம்பதிகள் தனக்கு குழந்தை வேண்டும் என ஆசைப்படுதலே தவறா?

    எல்லா கேள்விகளையும் மிஞ்சும் வகையில் உள்ள கேள்வி இதுதான். புத்தரே தன் தம்மம் பரவ வேண்டும் என்று தானே ஆசைபட்டார்?

    பதில் : இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தியதை எதிர்த்து போராடியதற்கு காரணம் ஆசையன்று; அதன் பெயர் உரிமை. ஒரு நாடு தன் நாட்டை அடிமைப்படுத்துவதை எதிர்த்து போராடியது தன் உரிமைக்கான போராட்டம் தானே தவிர ஆசைக்கான போராட்டமன்று.

    இதையே சாதி, தீண்டாமைக்கு எதிரான செயலுக்கும் போராட்டத்துக்கும் பொறுத்திப் பார்க்கலாம். (Rights)

    அந்த உரிமைக்காக போராடத்தூண்டியது நாட்டின் மீது, மக்களின் மீதான நேசம் என சொல்லலாமே தவிர ஆசையென சொல்லமுடியாது. நேசம் – ஆசை இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. (Love)

    தன் குழந்தைக்கான கல்வியை, சுகாதாரத்தை பெற்றோர் கொடுக்க நினைப்பது ஆசையன்று. அது கடமை (Duty).

    தனக்கு குழந்தை வேண்டுமென நினைப்பது தம்பதிகளின் ஆசையன்று. அது நியாயமான விருப்பம் (Wish)

    புத்தர் கொண்டிருந்தது எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவேண்டும் என தம்மத்தை பரப்பியதன் காரணம் ஆசையன்று. அது பரந்த நேயம். (Compassion / Maithri / Metta)

    Rights, Duty, Desire, Love, Compassion, Wish, Will, Greed என சொற்களுக்குள் உள்ள நுட்ப வேறுபாட்டை புரிந்து கொண்டால் ஆசை / அவா எனும் சொற்களின் பொருளையும் நுட்பமாக புரிந்து கொள்ளலாம்.

    ஆசை / அவா – Greed.

    * ஆசை என்னும் சொல்லின் பொருள்

    மனம் எப்போதும் ஏதேனும் ஒன்றை நோக்கி அலைந்து கொண்டே (அசைந்து) செல்லும். அந்த நிகழ்வுக்கு பெயர் தான் ஆசை. ஒன்றில் நிலைக்காமல் அசைந்து கொண்டே (Oscillate) இருக்கும் மனதின் சலனமே ஆசை. Oscillate – ஆசை சொற்களுக்கிடையில் கூட தொடர்பு இருக்கலாம்.

    * அவா அறுத்தல்

    சலனத்தோடு இயங்கிக்கொண்டு கண்டத்தை கேட்டதை என எல்லாவற்றையும் அடைய நினைக்கும் அந்த ஆசையை / அவாவை அறுத்தெறி என்றார் புத்தர். ஆசையை தமிழ்மரபு எவ்விதம் கையாண்டது என்பதை நாம் விளங்கிக்கொள்ள நமக்கு உதவுபவர் வள்ளுவப்பெருந்தகையாம் திருவள்ளுவர். அவா அறுத்தல் என தனி அதிகாரமே கொடுத்துள்ளார்.

    திருவள்ளுவர் கூட ஆசையே / அவாவே துன்பத்திற்கு காரணம் என ‘அவா’வின் தீங்கு பற்றி இவ்வாறு சொல்கிறார்.

    அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

    ஏற்கெனவே கைபேசி வைத்திருந்தாலும், மச்சி.. New model நிறைய Features ஓட புது mobile வந்திருக்கு.. வாங்கலாமா..? என்று கேட்பது தான் ‘நவீன காலத்து அவா’..

    – வேந்தன். இல

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    அவா ஆசை பௌத்தம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleமூன்று நச்சுகள் (Three Poisons)
    Next Article நாளை நடப்பது தைப்பூசம் திருவிழா அல்ல!
    Vendhan

      Related Posts

      தமிழ் பௌத்தம் – தாள் சேர்தல்

      June 7, 2024

      புத்தர் – கருடன் – விஷ்ணு

      June 7, 2024

      நான் கருத்து எதுவும் சொல்லாத ஒன்றில் இதுவும் ஒன்று

      April 28, 2024

      Comments are closed.

      Newsletter

      Recent Posts
      • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
      • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
      • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
      • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
      • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
      Random Posts

      Govt’s plan for PSUs to procure from Dalit SMEs fails to take off

      July 23, 2018

      கச்சநத்தம் மேலும் ஒருவர் பலி

      May 31, 2018

      பௌத்த திருப்பதிகள்

      May 8, 2017

      விடுதலை சூரியனை திசை மாற்றியவர்

      September 15, 2009
      Archives
      About Us
      About Us

      ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

      இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

      இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

      www.ambedkar.in
      Email Us: ambedkar.in@gmail.com
      Contact: +91 9841544115

      Facebook X (Twitter) YouTube WhatsApp
      அண்மைய பதிவுகள்

      அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

      May 4, 2026

      Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

      April 17, 2026

      பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

      April 15, 2026

      கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

      March 15, 2026
      நன்கொடையளிக்க விரும்பினால்
      Demo
      Facebook X (Twitter) Instagram Pinterest
      © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

      Type above and press Enter to search. Press Esc to cancel.

      %d