Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    January 9, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » விஜயதசமியும், விநாயகர் சதுர்த்தியும்
    குறிப்புகள்

    விஜயதசமியும், விநாயகர் சதுர்த்தியும்

    VendhanBy VendhanOctober 24, 2023No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    பண்டிகைகளில் விஜய தசமி எனும் மாமன்னர் அசோகரின் வரலாற்றில் அறவெற்றி நாளின் முக்கியத்துவத்தையும், விநாயக சதுர்த்தி போன்ற இந்துத்வாமயமான பண்டிகையையும் சேர்த்து இப்பண்டிகைகளை கொண்டாடலாமா என சில பௌத்தர்கள் குழப்பிக்கொள்கிறார்கள்.
    விஜயதசமி எனும் அறவெற்றி நாளுக்கு புத்தர், அசோகர், பிக்கு நியாகரோதர், பிக்கு மொகாலி புத்த, கலிங்கம், அசோக சக்கரம், சிங்க முத்திரை என நீண்ட வரலாறு‌ உள்ளது. அது ஒரு வரலாற்று நிகழ்வு. ஆனால் விநாயகர் சதுர்த்தி வெறும் பண்பாட்டு பண்டிகை. அசோகரின் வரலாற்றை இந்துத்வாவால் அபகரிக்க முடியாதது. ஆயுத பூஜை எனும் பெயரில் காளி கொண்டாட்டத்தை செய்யலாமே தவிர அசோகரின் அறவெற்றி நாளின் வரலாற்றை அழிக்க முடியாது. அசோகரின் விஜய தசமியை பௌத்தர்கள் கட்டாயம் கொண்டாடவேண்டும்‌. அதன் தேவை சமூகத்தில் இன்றும் உள்ளது‌. கொடிநாள் என்பது தியாகிகளை நினைவு கூருவது போன்று “போர் மறுப்பு நாள்” என போருக்கு எதிரான நாளாக அறவெற்றி நாளை (விஜய தசமியை) கொண்டாடவேண்டும். அந்த கொண்டாட்டம் என்பது படையல் போட்டு கற்பூரம் ஏற்றி அசோகருக்கோ, புத்தருக்கு தீப ஆராதனை செய்வதன்று. போருக்கு எதிரான கருத்துகளையும், ஏகாதிபத்துக்கு எதிரான ஆக்கிரமிப்புகளையும் பேசும் பண்டிகையாக கடைபிடிக்க வேண்டும். நம் வரலாற்றை பிரச்சாரம் செய்வது நம்‌ தேவை. மேலும் பௌத்தம் நடைமுறைக்கு உதவாது என சொல்பவர்களுக்கு எதிராக அசோகர் எனும் மாமன்னர் வரலாற்று ஆதாரமாக பௌத்தத்தை நடைமுறை படுத்தி காட்டியுள்ளார். எனவே, விநாயக சதுர்த்தி‌ போன்ற ஒரு‌ சடங்கு பண்டிகையாக விஜயதசமியையும் பார்க்க வேண்டிய பயம் தேவையற்றது. இக்கூற்றை துணிந்து சொல்லக் காரணம். நான் எப்போதும்‌ சொல்வது போல் பாபாசாகேப்‌ அவர்களே நம் வழிகாட்டி. அவர் விஜயதசமி அன்று தான் பௌத்த பண்பாட்டு புரட்சியை நடத்தினார். துணிந்து ‘இது அசோகரின் தம்ம விஜய் நாள்’ என முழங்கி அன்றைய நாளில் இலட்சக்கணக்கான மக்களை பௌத்தம் தழுவச்சொன்னார். [கவனிக்க அவர் என்றும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சொன்னது கிடையாது. தீபாவளியை கொண்டாட சொன்னது கிடையாது. நாமும் கொண்டாட சொல்லக்கூடாது. ஆனால் விஜயதசமியை பண்பாட்டு புரட்சிநாளாக நடத்தினார்]. அப்படித்தான் அந்த பண்டிகையை பிரச்சார நாளாக கொண்டாடினார்.‌ அதை தான் நாமும் செய்ய வேண்டும் என்கிறேன்.
    இந்துத்வா பௌத்த பண்டிகைகளை இந்து மத பண்டிகையாக மாற்றிவிட்டது என்று மீண்டும் அதே குழப்பம் வருமாயின் ஒரு கேள்வி எழுப்புகிறேன்‌. புத்தரை கூட இந்து மத சீர்த்திருத்தவாதி என விவேகானந்தர் சொன்னார். விஷ்ணுவின் 10வது அவதாரம் என கதை கட்டினார்கள். பாபாசாகேப் அவர்களை கூட இந்துத்துவா அம்பேத்கர், நவீன மனு என்றெல்லாம் அபகரிக்க முயல்கிறது பார்ப்பனீயம். அறிவு திருட்டை நடத்துவதே பார்ப்பனீயத்தின் கைவந்த கலை. அதற்காக “புத்தரையும் பாபாசாகேப்பையும் கூட நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என அவர்களிடத்தில் கொடுத்துவிடலாமா?”
    இங்கு எது சமூகத்துக்கு பயனளிக்க கூடியது, அன்பையும், அறிவையும், கருணையும் கொடுப்பது எது? என உள்ளது உள்ளபடி ஆராய்ந்து அவற்றை செயல்படுத்துவதே பகுத்தறிவு.
    விநாயகர் சதுர்த்தி போன்றவை பார்ப்பனீயத்தின் பண்பாட்டு பண்டிகை நாள்.
    அறவெற்றி நாள் (விஜயதசமி) என்பது வரலாற்றில் முக்கியத்துவமான நாள்.‌ போருக்கு எதிரான நாள்.
    அறத்தின் வருவதால் வருவதே வெற்றி. அனைவருக்கும் அறவெற்றி நாள் வாழ்த்துகள்.

    Share this:

    • Click to share on Twitter (Opens in new window)
    • Click to share on Facebook (Opens in new window)
    • Click to share on WhatsApp (Opens in new window)

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஇந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறுமா?
    Next Article உச்சநீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலை
    Vendhan

      Related Posts

      தமிழ் பௌத்தம் – தாள் சேர்தல்

      June 7, 2024

      புத்தர் – கருடன் – விஷ்ணு

      June 7, 2024

      நான் கருத்து எதுவும் சொல்லாத ஒன்றில் இதுவும் ஒன்று

      April 28, 2024

      Comments are closed.

      Newsletter

      Recent Posts
      • ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
      • அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2
      • எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!
      • அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1
      • யுனெஸ்கோ தலைமையகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மார்பளவு சிலை திறப்பு
      Random Posts

      பௌத்தமதம் மறைந்த வரலாறு

      May 6, 2017

      மாற்றுப்பாதை – சி. முத்துக்கந்தன்

      November 10, 2014

      ஒரேயொரு ஒருசொல்

      July 11, 2018

      அம்பேத்கர், பள்ளிக்கூடம் முதல் பாராளுமன்றம் வரை… அவமதிப்பு தொடர்வது ஏன், சாதி ஒழிப்பு சாத்தியமா?

      April 15, 2021
      Archives
      About Us
      About Us

      ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

      இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

      இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

      www.ambedkar.in
      Email Us: ambedkar.in@gmail.com
      Contact: +91 9841544115

      Facebook X (Twitter) YouTube WhatsApp
      அண்மைய பதிவுகள்

      ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

      January 9, 2026

      அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

      December 23, 2025

      எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

      December 6, 2025

      அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1

      December 2, 2025
      நன்கொடையளிக்க விரும்பினால்
      Demo
      Facebook X (Twitter) Instagram Pinterest
      © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

      Type above and press Enter to search. Press Esc to cancel.

       

      Loading Comments...
       

        %d