Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 1 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 2 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 3 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 4 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 5 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 6 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 7 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 8 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 9 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 10 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 11 [PDF] Dr.…
வள்ளுவன் புரண்ட வயிற்று மேடு அவதானிகளின் ஆட்சி பீடம் ஆறறிவுகளின் அரியாசனம் அடடே… அதிசய போதிவனம் தமிழைத் தரித்த தொப்பூழ்க்கொடி முதலாம் இரண்டாம் மூன்றாம் சங்கம் உலகை சோடித்த ஒற்றை விளக்கு ஒளிரும் சிந்தனை தாங்கிய மாடம் மமதை இல்லா மாளிகை புரம் மனித உரிமைக் காவல் நிலையம் சத்திய தர்மப் பாடசாலை மானுடநேய சிகிச்சைப் பிரிவு விசுவாசங்களின் சுவாச மண்டலம் பிரளய உடலின் மூளைப்பகுதி ஐந்திணைக் கைகளின் ஆயுள் ரேகை ஆதிக்கம் அடித்து தூற்றும் களம் அழுக்கு மூட்டைகள் வெளுக்கும் படித்துறை ஆதித் தமிழ்நில அறிவியல் வகுப்பறை வெண்ணிலவன்
வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை மதுரை வீரன் திரைப்படம் சில குறிப்புகள் – குமரன்தாஸ் எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை, அவர்களது கருத்தின் மீது செல்வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை, அவர்கள் தமது சொந்த முடிவிற்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு, அவர்களிடம் நான் கூற விரும்புவது எல்லாம் இதுதான், எல்லாச் சுற்றுச் சூழல்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக இருப்பது தான் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆய்வின் இலக்கணம் ஆகும். பி.ஆர். அம்பேத்கர் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி சமூகத்தை நகர்த்திச் செல்லும் என்பதை நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக ஆங்கிலேயரின் வருகைக்கு முன் தமிழகத்தில் உரைநடை இலக்கியம் என்பது அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. உரைநடைக் கட்டுரை மட்டுமல்லாது புதினம், சிறுகதை, புதுக்கவிதை போன்ற இலக்கிய வடிவங்கள் அனைத்துமே ஆங்கிலேயரால் நமக்கு வழங்கப் பட்டவையே ஆகும். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீகன் பால்கு என்பவர் 1709-இல் தமிழகம்…
[quotes quotes_style=”bquotes” quotes_pos=”left”] பரந்து விரிந்த என் தேசத்திற்குக் கூட இல்லை புள்ளியாய் இருக்கும் ஒரு ஊருக்கு நான் தலைவனானால் சூத்தெரிகிறது உன் சாமிக்கும் – ரகசியன் [/quotes]
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக, தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத் தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். இத்தகையதொரு கட்சி, தொழிற்சங்கங்களையும் தனது அமைப்புக்குள் கொண்டிருக்கும் என்பதில் அய்யமில்லை. ஆனால், இத்தகைய கட்சி தொழிற்சங்க இயக்கத்தின் குறுகிய கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால், பொதுவாக தொழிற்சங்கங்கள் இறுதி நலன்களை விட, உடனடி நலன்களையும், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குள்ள உரிமையையும் வலியுறுத்துபவையாகவுமே இருக்கும். மேலும், தொழிலாளர்களின் இந்தக் கட்சி,…
அமைதியின் பேருருவத்தை உருவாக்கி முடிக்கும் அத்தருணம் உன்னதமானது சுரண்டல்களற்ற பொழுதொன்று வரும் வானம் எல்லாருக்குமானது போரின்றி கைகள் தழுவும் அந்த நொடி மனிதம் முளைக்கவுமானது அடிமைகள் என்று யாருமில்லா சமூகம் அப்பட்டமானது யாரும் கேட்க முடியாத அதிகாரத்தின் குரல் வீணானது புறக்கணிப்பின் வலியறியா மக்கள் சூழ்ந்த வாழ்வு சகோதரத்துவமானது மேடுகள் சமனுறும் செதுக்கல்கள் சமத்துவமானது பிணைகளற்று வீசி நடக்கும் கைகளும் கால்களும் சுதந்திரமானது ஆயினும் இவற்றை அடைய எளியோர் வெல்லும் போரே தேவையானது.
ஒரு போராட்டத்தைத் தொடங்க உறுதியான உள்ளம் போதும். அது நம்மை வழிநடத்தும். அப்படி ஒரு மிக நீண்ட போராட்டத்தை நடத்தியவர் சமூக ஆர்வலர் பெஜவாடா வில்சன். மலம் அள்ளுகிற மனிதர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சமூகப் போராளி. மூன்று லட்சத்துக்கும் அதிகமான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றிய திசைகாட்டி. 32 ஆண்டுகளுக்கு முன்னர் தனிமனிதராக தன் போராட்டத்தைத் தொடங்கினார் வில்சன். இன்று 6,000 தொண்டர்களோடு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டி ருக்கிறார். வில்சனின் தொடர் போராட்டங்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான `மகசேசே விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. `ஆசியாவின் நோபல்’ எனக் கருதப்படுகிற உயரிய விருது இது. பெஜவாடா வில்சனுக்கு கோலார்தான் சொந்த ஊர். தங்கச் சுரங்கத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு என ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் அங்கே உண்டு. இந்த வீடுகளில் இருந்த கழிப்பறை எல்லாமே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தண்ணீர் வசதி இல்லாத எடுப்புக் கழிப்பறைகள். இவற்றில் மலையாகக் குவிந்துகிடக்கிற மனித மலத்தை, சக மனிதர்களே…