Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 5 பொருளடக்கம் பக்கம் வட்டமேசை  மாநாடுகளில் டாக்டர் அம்பேத்கர் 1.    மாநாட்டின் முதன்மைக் கூட்டத்தில் ஐந்தாம் அமர்வு                                               …        20.11.1930 2 2.    வட்டமேசை மாநாடு துணைக்குழு – I -இல் இடைக்கால அறிக்கை மீது கருத்துக்கள்                             … 13 3.    துணைக்குழு – II இல் (மாநில அரசமைப்பு) முதல் அமர்வு                                                 …          4.12.1930 மூன்றாவது அமர்வு                                         …         8.12.1930 நான்காவது  அமர்வு                                       …         9.12.1930 நான்காவது அமர்வு                                        …         15.12.1930 இரண்டாவது துணைக்குழுவின் (மாநில அரசியலமைப்பு) அறிக்கையின் மீதான கருத்துரைகள்                                                …           9.12.1930 17 23 23 35 39 4.    துணைக்குழு III-இல் (சிறுபான்மையோர்) இரண்டாம்  அமர்வு                                        …         31.12.1930 ஐந்தாம்  அமர்வு                                              …         14.1.1930 ஆறாவது  அமர்வு                                           …         16.1.1931 பின்னிணைப்பு 1                                           …          ….. பின்னிணைப்பு 2                                           …         …

Read More

புரட்சியாளர் அம்பேத்கரின் சாதிஒழிப்பு ஒலி நூல் அறிமுக நிகழ்வு மற்றும் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம். மணிகூண்டு திடல்,உளுந்தூர்பேட்டை,  தேதி: 13.10.2012

Read More

ஒரு படைப்பாளியின் மெல்லிய உணர்வுகள் சுற்றிலும் நடைபெறும் அநீதிகளின் வன்முறையால் எல்லா திசைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றன. நியாயமற்ற சமூகத்தினால் குத்திக் கிழிக்கப்பட்ட அந்த “ஆன்மா’ தன் வலியை இந்த உலகத்திற்கு உணர்த்த படைப்பை நாடுகிறது. தான் அடைந்த வன்மத்தின் வேதனையை அடுத்தவருக்குக் கடத்திச் செல்லும் படைப்பை எல்லோராலும் உருவாக்கிவிட முடியாது. “தகுதி’யும், “திறமை’யும் மட்டுமே கொண்டு – வலியை உணர்ந்தே இராத பல படைப்பாளிகளால் – தலை சிலுப்பி ஆட்டமிடும் சமூகத்தின் ஒரு மயிர்க் காலைக்கூட அசைத்துப் பார்க்க இயலாது. பசியை உணர்ந்தறியாத எந்தக் கரங்களாலும் இங்கே தண்ணீரைத் திராட்சை ரசமாக்கும் அதிசயத்தை நிகழ்த்த முடியாது. இந்த மண்ணிலிருந்து கடத்தப்படவேண்டிய கதைகள் ஏராளம் உண்டு. இதுவரை சொல்லப்படாத, சொன்னால் கூட உலகம் நம்ப மறுக்கும் கதைகள் உள்ளன. “பீ’ (shit) என்ற சொல் இன்றளவும் அனைத்து நாடுகளிலும் மக்கள் மன்றங்களில் உச்சரிக்கப்படக் கூடாத (unparliamentary) சொல்லாகத்தான் வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஜாதியின் பெயரால் மலத்தைக்…

Read More

ஆதித்தமிழர் பேரவை திருநெல்வேலியில் நடத்திய மாவீரன் ஒண்டிவீரன் நினைவுநாள் விழாவில் எங்களின் “சாதி ஒழிப்பு ஒலிநூல்” அறிமுக விழா நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அய்யா அதியமான் ஒலிநூலை வெளியிட  சிபி(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ஆதித்தமிழர் பேரவை தோழர் நீலவேந்தன் அம்பேத்கர்.இன் குழுவினரின் இம்முயற்ச்சியை பாராட்டி பேசினார்.

Read More

[metaslider id=3036] ட்ரீ இந்தியா அறக்கட்டளை சார்பில் எமது அம்பேத்கர்.இன் வெளியீடான ‘புரட்சியாளரின் சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக விழா 05.08.2012 அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் ஜி.என்.ஜெ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரா.முனைவர்.அம்பேத்கர் பிரியன், அய்யா திருவள்ளுவர், தோழர் யாக்கன், ச.சு.ஜைனுதீன், பேரா.சு.சக்திவேல், முனைவர் ஜெ.மகாலட்சுமி, ஆசிரியர் பேபிகலா ஆகியோர் நிகழ்ச்சியில் சாதிஒழிப்பு நூல் குறித்து சிறப்புரையாற்றினர். அம்பேத்கர்.இன் சார்பில் சென்னையிலிருந்து சசிகுமார், லெமுரியன், கமல் மற்றும் நானும் விக்ரவாண்டியிலிருந்து தோழர் கருணாநிதியும் கலந்து கொண்டோம். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Read More

பாபா சாகேப் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு அண்ணல் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலைக் குரல் வடிவில் தரும் ஒலி வட்டு இது. 26  தலைப்புகளில் அமைந்த அம்பேத்கரின் உணர்வு மயமான கருத்துகளை தோழர் யாக்கன் எழுச்சி மயமான குரலில் தந்துள்ளார். 1936_ல் லாகூரில் இருந்த இந்து மத சீர்திருத்த அமைப்பு ஒன்றின் மாநாட்டின் தலைமை உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டார். ஆனால், அம்மாநாடு நடைபெறவில்லை. இம்மாநாட்டில் அம்பேத்கர் பேச இருந்த உரையில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்ற மாநாட்டுக் குழுவினரின் கோரிக்கையை அம்பேத்கர் நிராகரித்தார். உரையை எள்ளளவும் மாற்றமுடியாது என்று கூறிவிட்டார். இதனாலேயே மாநாடு நடைபெறவில்லை. ஆனாலும்,இவ்வுரையை அம்பேத்கர் ஒரு நூலாக ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூலைத் தமிழில் ஜாதியை ஒழிக்க வழி என்ற பெயரில் வெளியிட்டவர் தந்தை பெரியார். (இந்த வரலாற்றுக் குறிப்பை ஏனோ இந்த ஒலி நூலில் குறிப்பிடவில்லை) ஒன்பது மொழிகளில் வெளிவந்துள்ள இந்நூல் இன்றளவும் ஒடுக்கப்பட்ட…

Read More

www.ambedkar.in  releases ‘Annihilation of caste’ audio book on Babasaheb Ambedkar Jayanti, 2012 The Jat-Pat-Todak Mandal, a Hindu reformist organization, chooses the problem of caste system in India for its annual conference discussion in the year 1936. Mr. Sant Ram, the Secretary of the Jat-Pat-Todak Mandal, on behalf of the Mandal executive committee requests Dr. Ambedkar to be the President of the annual conference and address in detail “Why it is not possible to break Caste without annihilating the religious notions on which it, the Caste system, is founded?” Dr. Ambedkar did not like to be a part of the movement…

Read More

காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது. இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால்,கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக் கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக் கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்க வேண்டும் எனும் பெரிய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் india untouched என்கிற ஆவணப் படத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். நீர் நிலைகளில் ஆடுமாடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருசரார் கடுமையாகத்தடுத்து நிறுத்தப்பட்டார்கள். சமீப காலம் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையில் குற்றாலத்தில் குளிக்க,பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சேதி.உலகஅதிசயங் களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி மின்னணு வாக்கு கோரப்பட்ட…

Read More

இந்தியத் துணை கண்டத்தில், எ“நதவொரு சிந்தனையாளரிடமும் இயக்கத்திடமும் இருந்திராத பெண்ணியச் சிந்தனையும் செயல்பாடும் – பார்ப்பனிய எதிர்ப்பின் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக வரலாற்றில், சுயமரியாதை இயக்கத்திடம் மட்டுமே இருந்தது. “இந்த ஆண்களெல்லாம் சோசலிசம், முதலாளித்துவம், பகுத்தறிவு எல்லாம் பேசி யநேரம் போக மீதி நேரங்களில்தான் பெண் விடுதலை பேச முன்வருவார்கள்’ என்று பகடிசெய்யுமளவிற்கு, சுயமரியாதை இயக்க்டீததில் பெண் விடுதலை முன்னோடிகள் ஆளுமை பெற்றிருந்தனர். அக்காலத்தில் சுயமரியாதை இயக்கப் பெண்கள், இயக்கம் எந்தெந்தத் தளங்களில் செயல்பட்டதோ – அத்தனைத் தளங்களிலும் தங்களை இணைத்துக் கொண்டு செயலாற்றினார்கள். பெண்கள், அந்த அளவிற்குத் தங்களைத்தாங்களே அறிந்து கொள்வதற்கும், பெண்ணியச் சிந்தனையாளராக மேம்படுத்திக் கொள்வதற்கும், பெண் விடுதலைப் போராளிகளாக நடைபோடுவதற்கும் தலைவர் பெரியாரின் சுமரியாதை இயக்கமே உறுதுணையாக நின்றது. பொதுவுரிமை இயக்கத்தினர், பொதுவுடமை இயக்கம் புரிந்து கொள்வது போல் சோசலிசத்தைப் புரிந்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில், பொதுவுடைமை இயக்கம் பார்க்கத் தவறிய ஆணாதிக்கம், சாதியம், இந்து…

Read More

இன்னும் விடியவில்லை. இருளின் பிடியில் இருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது. கிணற்றின் சுவர் ஓரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால், கயிறு அசைந்து ராட்டினத்தில் இருந்து ஒலி எழும்பிக்கொண்டு இருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை அமிர்தத்துக்கு. லேசான வெளிச்சக் கோடுகள் வந்தால்கூடப் பரவாயில்லை என்று தோன்றியது. மடியில் தூங்கிக்கொண்டு இருந்த தன் குழந்தையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அது தைரியம் கொடுப்பதாக உணர்ந்தாள். அமிர்தத்துக்கு இது புதிது. பிறந்த ஊரில் ஒரு பட்டாம்பூச்சியாகப் பாடித் திரிந்தவள் அமிர்தம். ஆம்பூருக்கு வந்து வாழ்க்கைப்பட்டு இப்படித் துன்பப்படுவாள் என்று கனவில்கூட நினைத்திருக்கவில்லை. நேற்று இரவு மாமியா ருடன் போட்ட சண்டையில் வீட்டுக்கு வெளியே துரத்தப்பட்டவள், இரவெல்லாம் இப்படிக் கிணற்றின் அருகிலேயே உட்கார்ந்து இருக்கிறாள். தன்னுடைய முந்தானையை எடுத்துத் தலையில் இருந்து கால் வரை இழுத்துப் போர்த்தி, ஒரு கூடாரத்தைப் போலாக்கி, கால்களை மடக்கித் தொட்டிலாக்கி, அதில் குழந்தையைப்…

Read More