Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
கடலூர் மாவட்டம் ஆண்டிப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர், தன் பேத்தி ரமணிதேவியை, கழுத்தை அறுத்துக் கொலைசெய்திருக்கிறார். காரணம்? வேறு ஒரு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக. தன் சந்ததி தழைத்து, செழித்து வாழ்வதைப் பார்த்து மகிழ்ந்திருப்பதே மூத்த தலைமுறையின் குணம். பேரன், பேத்திகள் விரும்பும் ஒன்றை, அவர்களின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பெற்றுத்தருவதுதான் தாத்தா, பாட்டியின் பண்பு. ஆனால், நெகிழ்ச்சி மிகுந்த அந்த உறவும் பாசமும் சாதிவெறியின் முன் செல்லாக்காசாகிவிட்டது. ‘நான் ஊர் நாட்டாமை. ஊருக்கே முன்மாதிரியாக இருக்கவேண்டிய என் குடும்பத்தில் இப்படி நடந்தால், என் கௌரவம் என்னாவது?’ என்கிறார் வீராச்சாமி. குடும்ப கௌரவம் என்பது இங்கு சாதி கௌரவம்தான். சாதியைக் கௌரவமாகக் கருதும் இழிவான மனப்போக்குத்தான் இத்தகைய இரக்கமற்ற கொலைகளைச் செய்யவைக்கிறது. கோகுல்ராஜ் தொடங்கி எத்தனையோ உதாரணங்கள் சொல்ல முடியும். இந்தப் படுபாதகக் கொலைகள் எதற்கும் அழுத்தமான எதிர்க்குரல்கள் எழவில்லை. இந்த மௌனம்தான் பேரச்சம் தருவதாக…
ஒரு குறிப்பு : நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரம் அழிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2001ல், பழங்கால கலைச் செல்வம் எனஅழைக்கப்பட்ட பாமியன் புத்தர் சிலை, அழிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இசுலாமிய மதக்கொள்கைக்கு எதிரான இந்து மதக்கொள்கை என்பதால் புத்தர் சிலை அழிக்கப்பட்டதென ஆப்கனின் தாலிபான்களால் விளக்கம் சொல்லப்பட்டது. ஒரு பழங்கதை : உண்மையில் இதுவொரு பழங்கதை தான் என்பதில் ஐயம் இல்லை. ஆப்கானிஸ்தானின் புதிய நில உரிமையாளர்களான தாலிபான்கள் கலாச்சார நினைவுச் சின்னங்களை, குறிப்பாக மத சம்பந்தப்பட்ட அனைத்துச் சின்னங்களையும் அழித் தொழிப்பதில் தீவிர ஈடுபாடு காட்டி வரு கின்றனர். அது மட்டுமின்றி, பழைய கலாச்சாரச் சின்னங்களை அழித்துவிட்டு, அதன் சுவடே தெரியாமல், அதன் மீது புதியவைகளை கட்டமைக்க முனைந்துள்ளனர். பழைய செயல்பாடுகள் குறைந்து வருகின்றன அல்லது தீண்டத்தகாத செயல்பாடுகள் எனக் கூறிவருகின்றனர். குறிப்பாக விவாக சடங்குகள், உணவுப் பழக்கங்கள் முதலிய செயல்பாடுகளில் தாலிபான்களின் கவனம் அதிகரித்து வந்துள்ளது.…
ஐப்பசி மாதம் தொடங்கியதும் அடை மழையும் தொடங்கிவிட்டது.வானில், நீல நிறம் மறைந்து, நிழல் குவிந்து கிடப்பதைப்போல் மேகங்கள் குவிந்துகிடந்தன. இடைவிடாமல், ‘பிசு பிசு’வென்று தூறிக்கொண்டேயிருந்தது. மரங்கள் எல்லாம் நனைந்து குளிரால் மரத்துப் போய் நின்றிருந்தன. பறவைகள் தம் சிறகுகளை இறுக்கி அணைத்து, இமைகளை மூடிக்கொண்டு கூடுகளில் ஒடுங்கிக்கிடந்தன. அன்று மாலை மழையின் வேகம் சற்றுத்தணிந்தது. ஆனால் அடிக்கொரு தடவை வீசிய ‘சில்’லென்ற குளிர்காற்று, உடலைப் பிடித்து உலுக்கிவிட்டுச் சென்றது. எங்கு பார்த்தாலும் தரை சில்லிட்டுக்கிடந்தது தெருவில் நடந்துபோக முடியாமல் ஜனங்கள் திணறினார்கள். ஓரணாக் கொடுத்து வண்டியேற அஞ்சி, ஒன்றரை மைல் நடப்பவர்கள் கூட, அன்று பல்லைக் கடித்துக்கொண்டு வண்டியேறினர். ‘சுளீர், சுளீர்’ என்று தாக்கும் குளிர் காற்று அவர்கள் பிடரியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டுபோய், வண்டியினுள் நுழைத்து முடிச்சை அவிழ்க்க வைத்தது. தெருவின் ஓரத்திலே ஒதுங்கி நின்ற பிச்சைக்காரர்கள் தங்க இடமின்றித்தவித்தனர். அவர்களின் கந்தல் உடையால் குளிரைத் தடுக்க முடியவில்லை. வேழத்தின் வாய்ப்பட்ட…
சாதிமல்லி அக்ரகாரச் சாக்கடையில் – நீ ஆகாயத் தாமரைப்பூ வக்ரகாரக் காடுகளில் வளர்ந்ததொரு குறிஞ்சிப்பூ ஆரியச் சந்தையினில் அவளோர் அரளிப்பூ ஆதித்தமிழன் நான் அவள்தான்என் முல்லைப்பூ மனமெல்லாம் மரிக்கொழுந்து மயிலே! நீ மல்லிகைப்பூ மல்லுகட்டும் சிறுக்கி நீ மறுநொடியில் மருதப்பூ சிலநேரம் வேண்டுமென்றே செய்திடுவாய் தப்பு சென்றுநான் வரும்வரை நீ சிலையான நெய்தல்பூ ஆரியத்தின் உதடுகளில் சேரியின் உதடுகள் செய்கின்ற காரியத்தில் சிலிர்த்திடும்உன் பூரிப்பு துக்கத்திலும் தூக்கத்திலும் துளிர்ந்துஎழும் உன்நௌப்பு கக்கத்தில் என் காதல்ஏறி முத்தம்தரும் தித்திப்பு உள்ளத்தில் எனைக்கிடத்தி ஒளித்துவைத்த மாராப்பு சொல்லவாய் திறக்க அய்யோ சிவந்தமுகம் மத்தாப்பூ எள்ளளவும் குறையாது எனைப்பற்றி யோசிப்பு எப்படிநாம் சேர்வது; உன் எண்ணமெங்கும் படபடப்பு அத்திப்பூ ஆசைப்பூ அழகுவனச் சோலைப்பூ எப்பொழுதும் நம்வாழ்வில் இல்லையடி பாலைப்பூ – கவிஞர் வெண்ணிலவன்
புத்தரையும், காரல் மார்க்சையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், இது குறித்து வியப்படைய ஏதுமில்லை. புத்தருக்கும் மார்க்சுக்கும் 2381 ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. புத்தர் கி.மு. 563 இல் பிறந்தவர். காரல் மார்க்ஸ் கி.பி. 1818 இல் பிறந்தவர். மார்க்ஸ் புதிய தத்துவமான அரசியல், அரசியல் சார்ந்த பொருளாதார அணுகுமுறையை அமைத்துத் தந்தவர். மாறாக, புத்தர் ஒரு மதத்தைத் தோற்றுவித்ததைவிட அதிகம் செய்ததாகச் சொல்லப்பட்டாலும் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் துளியும் தொடர்பில்லாதவராக இருந்தார் என்று நம்பப்படுகிறது.இந்தக் கட்டுரையின் தலைப்பு, “புத்தரா காரல் மார்க்சா’. இது, இவ்விருவரிடையே உள்ள ஒற்றுமையையும் முரண்பாடுகளையும் வெளிக்கொணர்கிறது. இவ்விருவரும் பல நூற்றாண்டு கால இடைவெளியால் பிரிக்கப்பட்டவர்கள்; மாறுபட்ட துறையைச் சார்ந்தவர்கள்; வெவ்வேறு சிந்தனையைக் கொண்டவர்கள். எனவே, இவ்விருவரையும் ஒப்பிடுவது விந்தையாகக் கூட தோன்றலாம். புத்தரையும் மார்க்சையும் ஒப்பிடுவது கண்டு மார்க்சியவாதிகள், எள்ளி நகையாடலாம். மார்க்ஸ் நவீன சிந்தனையாளர் எனவும், புத்தர் தொன்மையானவர் என்றும் கூட…
“தீண்டாமைப் பிரச்னை பற்றி அறிவுஜீவுகள் பேசுவது இல்லை!” விருது விழாவில் விளாசிய அருந்ததி ராய் “ஜனநாயகமும் நவீன பொருளாதாரச் சந்தையும் சாதியை நவீனமாக்கி அதன் பிடியை மேலும் இறுக்கி இருக்கின்றன. இந்தியாவின் மிகச் சிறந்த அறிவுஜீவிகள், வரலாற்று ஆசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், எழுத்தாளர்கள் தொடர்ந்து சாதியப் பிரச்னைகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள் அல்லது குறைந்த அளவில் பதிவு செய்கிறார்கள். இதைத்தாண்டி அவர்கள் சாதியப் பிரச்னைகளைப் பேசுவது தேர்தல் காலங்களில் மட்டும்தான். பொருளாதார ஊழல்கள் குறித்துப் பேசுவதும் அதைப் பிரச்னையாக்குவதும் இப்போது மிக நாகரிகமான விஷயமாக உள்ளது. ஆனால், தீண்டாமை என்கிற ஊழல் பற்றி மிகச் சிறந்த அறிவுஜீவிகளும் வரலாற்று ஆசிரியர்களும் கேள்வி எழுப்புவதில்லை” என்று குற்றம்சாட்டினார் எழுத்தாளர் அருந்ததி ராய். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. சமூகம், அரசியல், பண்பாட்டுத் தளங்களில் சிறப்பாகப் பணியாற்றும் ஆறு பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 3-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற…
உலகத் தொழிலாளர்களின் வரலாற்றில் அவர்களின் உரிமைகளுக்காக முதன்முதலில் 1856-ல் ஆஸ்திரேலியாவில் போராட்டம் தொடங்கப்பட்டது. கால ஓட்டத்தில் முப்பது ஆண்டுகள் கடந்த பின்னர் 1886-ல் ‘ஹேமார்கெட் நிகழ்ச்சி (Haymarket affair) ஒன்று, அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் இல்லினாஸ் மாகாணத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் எல்லாவிதமானத் தொழில் புரியும் தொழிலாளர்கள் சுமார் 2,00,000 பேர் கலந்துக் கொண்டார்கள். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மூன்று நாட்கள் பொதுவேலை நிறுத்தப் போராட்டமாகத் தொடர்ந்து நடத்தப் பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே காவல் துறையினர் தடியடி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் அதையும் எதிர்கொண்டு கட்டுக்கோப்பாக தொடர்ந்து போராடவே காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நான்குபேர் உயிரிழந்தார்கள். இவ்வாறு போராட்டம் தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கும்போது யாரெனக் கண்டறிய முடியாத ஒருவனால் வெடிகுண்டு வீசப்பட்டு பன்னிரெண்டு பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஏழுபேர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு உயிர்த் தியாகம் செய்து போராட வேண்டியக் காரணம் என்ன?…
கனவான்களே! இதிலிருந்து நாம் தொடங்கியுள்ள போராட்டத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சத்தியாகிரகக் குழு உங்களை மகத்துக்கு அழைத்தது, வெறுமனே மகத்தில் உள்ள சவுதார் குளத்தின் நீரை அருந்துவதற்கு மட்டும்தான் என்று தவறாக அனுமானித்து விடாதீர்கள். சவுதார் குளத்தின் நீரை அருந்துவது, நம்மை சாவற்றவர்களாக ஆக்கிவிடும் என்பதல்ல. அதை குடிக்காமலேயே நாம் இத்தனைக் காலமும் நன்றாகவே வாழ்ந்திருக்கிறோம். நாம் சவுதார் குளத்திற்குச் செல்வது, வெறுமனே அதன் நீரை குடிப்பதற்காக மட்டுமல்ல. அந்தக் குளத்திற்கு நாம் செல்வது, நாமும் பிறரைப் போல மனிதர்கள் தான் என்பதை அறிவிப்பதற்கு. சமத்துவத்தின் சட்டத்தை நிலைநிறுத்தவே இந்த கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக இருக்க வேண்டும். இந்தக் கூட்டத்தினை இந்த நோக்கில் அணுகுகின்றவர்கள் எவரும், இதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை என்பதை சந்தேகமின்றி உணர்வார்கள். இந்திய வரலாற்றில் இதற்கு இணையான ஒன்றைக்காண முடியாது என்று நினைக்கிறேன். வரலாற்றில் இதற்கு இணையான ஒன்றை நாம் தேடுவோமானால், அய்ரோப்பிய கண்டத்தில் உள்ள…
பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு’ என்றார் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 202 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வெற்றி ஈட்டப்பட்ட நாள் சனவரி 1. மிகுந்த வியப்புக்குரிய இந்நாள் குறித்த வரலாற்றுத் தகவல்களை பர்தீப் சிங் ஆட்ரி பதிவு செய்திருக்கிறார் : “1.1.1818 அன்று 500 பேர் மட்டுமே கொண்ட தீண்டத்தகாத போர்வீரர்கள் (மகர் ரெஜிமன்ட்) எண்ணிக்கையில் பலம் பொருந்திய 30 ஆயிரம் போர்வீரர்கள் அடங்கிய பேஷ்வா ராணுவத்தினரை முறியடித்தனர். மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பூனாவில் பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் மிகக் கொடூரமான ஆட்சியை நடத்தி வந்தனர். இதை எதிர்த்து பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த மகர் ரெஜிமன்ட் வீரர்கள், ஒரே நாளில் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போருக்கு இணையான ஒன்றை வரலாற்றில் குறிப்பிட முடியாது. தீண்டத்தகாத போர்வீரர்களால் நடத்தப்பட்ட இப்போர், சுயமரியாதைக்கும் மனித மாண்புக்குமானது; மநுஸ்மிருதியின் மேலாதிக்கத்திற்கு எதிரானது! பார்ப்பன ஆட்சியின் கீழிருந்த மகாராட்டிராவில் சாதி அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் கடுமையாக இருந்தன. இவர்களின் ஆட்சியில்தான் தீண்டத்தகாத…
பாண்டியனின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்று சேர்ந்தபோது நடுப் பகலைக் கடந்துவிட்டது. காட்டுமன்னார்குடிக்கு அருகில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ரெட்டியூர் என்ற அந்தக் கிராமம் (சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் இருக்கலாம்) பாண்டியன் அந்த ஊரைச் சேர்ந்தவர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றவர். சமூக அக்கறையும் எல்லோருக்கும் உதவும் பண்பும் கொண்டவர். 1985ஆம் ஆண்டு “சுதந்திர தின”த்தன்று போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டவர். போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர் ஒரு பயங்கரவாதியோ, கொள்ளைக்காரரோ அல்ல. பறையடிக்கும் இழிதொழிலைச் செய்யமாட்டோம் எனத் தன்மானத்தோடு போராடிய ஆயிரக்கணக்கான தலித்துகளில் ஒருவர். அதற்காகத்தான் அவர் கொல்லப்பட்டார். 15-02-2004 அன்று நான் பாண்டியனின் ஊருக்குச் சென்றேன். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தைப் போய்ப் பார்த்தேன். அவரது நினைவாக அங்கொரு கொடிக்கம்பம் உள்ளது. பாண்டியனின் மார்பளவு சிலை காட்டுமன்னார்குடி பேருந்து நிலைய முகப்பில் நிறுவப்பட்டுள்ளது. அவர் கொல்லப்பட்ட அதே தேதி. ஆனால் இது பிப்ரவரி…