Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
www.ambedkar.in நடத்திய பௌத்த நெறியேற்பு விழா பௌத்த நூல்கள் வழங்கும் விழா புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற வரலாற்று சிறப்பு மிக்க அக்டோபர் 14 ஆம் தேதியில் www.ambedkar.in ஏற்பாடு செய்திருந்த விழாவில் சுமார் 100 க்கும்மேற்பட்டோர் தம்மை பௌத்ததில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், அவர்கள் கலந்து கொண்டு பெளத்த நூல்களை வெளியிட்டு தம்ம உரை ஆற்றினார் . பௌத்தம் தழுவியவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.. அவர் தனது தம்ம உரையில் “புரட்சியாளர் அம்பேத்கர் ,அசோகருக்கு பின்னர் பௌத்தத்தில் மிக பெரும் புரட்சியை ஏற்படுத்தினர்.., இந்து மதத்தை பின்பற்றாத எவரும் பௌத்தர்களே… இயேசு கடவுளால் உருவாக்கப்பட்ட குழந்தை என்று தன்னை சொல்லிக்கொண்டார், முகமது நபிகள் தன்னை கடவுளால் அனுப்பப்பட்ட கடைசி தூதர் என்று சொன்னார்,கிருஷ்ணன் தான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று சொன்னார். இவற்றை பௌத்ததோடு ஒப்பிடுகையில் கவுதம புத்தர் கடவுள் என்ற கருத்துக்குள் நுழையவே இல்லை. கடவுள் என்ற கருத்தையே அவர் பேசவில்லை தன்னை கடவுள் என்றும் சொல்லவில்லை …உலகின் முதல் பகுத்தறிவு தந்தை கவுதம புத்தர் , உலகின் முதல் விஞ்ஞான பூர்வமான ஞானி கவுதம புத்தர் , மனிதனின்…
புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற நாளில், அக்டோபர் 14,2010 சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் www.ambedkar.in நடத்திய பௌத்தநெறியேற்பு விழா – பௌத்த நூல்கள் வழங்கும் விழாவில் எழுத்தாளர், ஆய்வாளர் திரு.கவுதம சன்னா அவர்களின் உரை
பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 1 சாதி ஒழிப்பு ஓர் இந்து யாரைத் தலைவனாக ஏற்றுக் கொள்வான்? நான் இந்துக்களிடமிருந்து விலகியே இருக்கிறேன்! சமூக சீர்திருத்தமா? அரசியல் சீர்திருத்தமா? தீண்டத்தகாதவர்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்? தீண்டத்தகாத பெண்கள் மீது தாக்குதல் நெய் – இந்துக்களின் கவுரவப் பிரச்சினை! இந்துக்களுக்கு அருகதை உண்டா? எது சீர்திருத்தம்? அரசியல் சீர்திருத்தம் முன்னோடி அல்ல அரசியல் புரட்சிகளுக்கு முன்னோடி எது? ஆதிக்கத்தை ஏற்க மாட்டோம் சமூகப் பிரச்சனையை அலட்சியப்படுத்த முடியாது அரசியல் புரட்சிகளுக்கு முன்னோடி எது? பொருளாதார பலம் மட்டுமே போதாது சாமியார்களுக்கும் ‘பக்கிரி’களுக்கும் அடி பணிவது ஏன்? இந்திய வரலாற்றில் மதத்திற்கே அதிகாரம் அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் அடிப்படை எது? பொதுவுடைமை எல்லா பிரச்சினைகளையும் தீர்க்குமா? பாட்டாளிகள் சாதி பார்ப்பது இல்லையா? எத்திசையிலும் சாதிக் கொடூரன் வழிமறிப்பான்! எந்த நாட்டிலும் இல்லாத தொழில் பிரிவினை வேலையில்லா திண்டாட்டத்துக்கு சாதி அமைப்பே காரணம் செய்யும்…
இனப் படுகொலைக்கு இணையான மதுரை – மேலவளவுப் படுகொலை நாட்டையே உலுக்கிய நிகழ் வாகும். சமூக நடைமுறைகளைச் சாதாரணமாகக் கவனித்து வரும் எவரும், மேலவளவுப் படுகொலை யின் பின்னணியைப் புரிந்து கொண்டிருப்பர். நீண்ட காலமாகத் தாங்கள் அனுபவித்து வந்த மேலவளவுப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், சாதி வெறியுணர்வடைந்த மேலவளவு கள்ளர்கள், 30.6.1997 அன்று பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகளை சென்னகரம்பட்டிப் படுகொலை ‘பாணி’யிலேயே பயணம் செய்த பேருந்தை வழிமறித்து, வெட்டிப் படுகொலை செய்தனர். முருகேசனை பேருந்திற் குள்ளேயே வைத்து தலை வேறு உடல் வேறாக வெட்டிப் படுகொலை செய்தனர். தலையை எடுத்துக் கொண்டு போய் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து இரண்டு ‘பர்லாங்’ தொலைவிலிருந்த கிணற்றில் வீசினார்கள். கள்ளர் சாதி படுகொலை யாளர்கள். நாட்டில் உள்ள அனைத்து சமூக நலச் சிந்தனையாளர்கள் பேரதிர்ச்சியில் உறைந்தனர். மேலவளவு கிராமத்தில் வசித்த வந்த அத்தனை தலித் மக்கள் கொலை…
மென்மையான உள்ளம். உலர்ந்துவிடாத புன்னகை. எப்போதும் அன்பு கசியும் கண்கள். இவை டி.எல். சிவகுமாரின் அடையாளங்கள். 1989 ஆம் ஆண்டு கையெழுத்து இதழாகத் தொடங்கப்பட்ட “பூங்குயில்’ இலக்கிய இதழை, பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் நடத்தி வரும் அவருடைய ஆர்வம் பாராட்டுக்குரியது. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு, “முகத்துக்கு தெரியாத முதுகெலும்புகள்.’ இரண்டாவது தொகுப்பு “குட்டி ஆலீசும் கோடி நட்சத்திரங்களும்.’ இது மட்டுமின்றி, பல்வேறு இலக்கிய ஆளுமைகளை உருவாக்கிய பல தளங்களும் மேடைகளும் அவருடைய அரிய உழைப்பால் விளைந்தவை. “பூங்குயில்’ சிவகுமார் என்று இலக்கிய ஆர்வலர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் வந்தவாசியில் வசிக்கிறார். தேசூரில் தன்னுடைய பள்ளிப் படிப்பையும், சென்னையில் தொழிலாளர் சட்டப் படிப்பையும் படித்த சிவகுமார், எட்டாம் வகுப்பு படிக்கும்போதே எழுதத் தொடங்கி விட்டார். துணுக்குகள், நகைச்சுவை என்று எழுதி, அதன் தொடர்ச்சியான அனுபவத்தாலும், தனக்குள்ளே பொதிந்து கிடக்கும் கவிதை ஊற்றாலும் கவிதை எழுத வந்தவர். அவருடைய நெடிய வாசிப்பனுபவம் பற்றி…
தலித் வரலாற்றை எழுதுவது, ஒரு வகைமை. புனைவுகளைக் கடந்து இயக்க ரீதியான அணிதிரள்வுகளுக்கும், மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் – தலித் வரலாற்றாளர்கள் தருகின்ற ஆதாரங்களும், தரவுகளும் – தலித்துகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்குமான நியாயங்களை உணர வைக்கின்றன. பொதுப்பண்பாட்டிற்கு எதிராக ஓர் எதிர்ப்பண்பாட்டை உருவாக்கவும் தலித் வரலாறு தேவைப்படுகிறது. வரலாற்றாய்வாளர் ஈ.எச்.கார் என்பவர், வரலாற்றில் தவிர்க்க முடியாதது, தப்ப முடியாதது என எதுவும் இல்லை என்கிறார். ஆனால் இந்திய வரலாற்றைப் பொருத்த வரையில், தலித் வரலாறு திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வரலாறு மறைக்கப்பட்ட தொல்குடி மக்களின் வரலாறாகத்தான் இருக்கிறது. ஆனால், இன்றைய நவீன எழுத்துச் சூழலில் எதையெல்லாம் வரலாற்றில் தவிர்த்தார்களோ, அதையெல்லாம் தோண்டித் துருவி தரவுகளைத் திரட்டி, அவற்றை ஆவணமாக்கும் பணிகளை தலித் வரலாற்றைக் கட்டமைப்பவர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். அதில் முக்கியமான இடம் பூவிழியனுக்கு உண்டு. அவர் வாழும் சீர்காழி அதைச் சுற்றியுள்ள தஞ்சை, கடலூர் பகுதிகளில் நிகழ்ந்த தலித்…
சாதி இருள் நீக்க வந்த அருந்ததி எல்.சி. குருசாமி – ஏபி.வள்ளிநாயகம் மானுடத்தில் தங்களைப் பற்றியும், தங்களுக்குள் இயல்பாகப் பதிந்தவை – பாதித்தவை பற்றியும், தங்களை உருவாக்கியவை பற்றியும் தலித் மக்கள் தங்களின் “மானுட அழகியல் வரலாற்றை’ எழுத வேண்டியிருக்கிறது. பார்ப்பனிய சமூக அமைப்புக்குப் பிறகு, தலித்துகளின் சுயநிர்ணயத்துக்கான உரிமையையும், சுயமரியாதையையும் அங்கீகரித்தது. அவற்றை நடைமுறைப்படுத்த உண்மையான அக்கறை நீண்ட காலமாகவே எடுக்கப்படவில்லை. வரலாற்றில் பார்ப்பன – பார்ப்பனிய பயங்கரவாதிகளை மீண்டும் மீண்டும் துல்லியமாக எதிர்த்து வருபவர்கள் தலித் மக்கள் தான். ஆனால், தலித் மக்கள் நடத்திய, நடத்தும் கலகங்களைப் பற்றியோ, உரிமைப்போராட்டங்களைப் பற்றியோ, இவைகளுக்கு வித்திட்ட தலைவர்களைப் பற்றியோ – தலித் அமைப்புகளிடம் கூட முறையான,முழுமையான தகவல்கள், பதிவுகள் இல்லை. தலித் மக்களின் வரலாறு என்பது, இம்மண்ணின் மைந்தர்களின் வரலாறு. எத்தனையோ கெடுபிடிகளுக்கும் அவர்கள் தொடர்ந்து தாக்குப்பிடித்து வந்திருப்பது என்பதே, வரலாற்றில் அவர்கள் என்றும் அடிமைகளாக இருந்ததில்லை என்பதைப் பறைசாற்றும்.…
தலித் க. சுப்பையா மதுரை மாவட்டம் முனியாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தினசரி விவசாயக் கூலி குடும்பத்தின் சொந்தக்காரர். தமிழக தலித் கலை இலக்கியப் போராட்டங்களில் முன்னோடியாகத் திகழ்பவர். குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளாக, தலித் பாடல்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உதடுகளில் காந்த அதிர்வுகளை உருவாக்கியவர். போராட்டக்களங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் தலித் இயக்க மேடைகளிலும், தலித் கலைவிழா மேடைகளிலும் தனது விடுதலைக் குரல் மூலம் இசைப்போர் நிகழ்த்தி வருபவர். சாதி ஒழிப்பை ஓங்கி ஒலிக்கும் தீவிர அம்பேத்கர் சிந்தனையாளர். பெரியார் இயக்கப் பாசறையில் வளர்ந்தவர். மார்க்சிய சிந்தனைகளில் தன்னைப் பாடமாக்கியவர். ஒரு கலை இலக்கியப் போராளியாக இருந்து சமகால தலித் இயக்கங்களினூடாக நிழலாக இயங்கி வருபவர். “கலைத் தளத்தில் மனநோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது’ என நெஞ்சு நிமிர்த்தி விமர்சிக்கும் தோழர் சுப்பையா அவர்களிடம் எதிர்கால தலித் கலை இலக்கிய அரசியலைப் பற்றிய ஒரு நேர்காணல். – அன்பு செல்வம் தங்களின்…
“உலகம் முழுக்க எத்தனையோ உரிமைப் போராட்டங்கள் நடக்கின்றன. அவை அனைத்தும் பெரும்பான்மை மக்களிடம் இருந்து பிரிந்துபோவதற்கான போராட்டங்களே. பாலஸ்தீனம் தொடங்கி ஈழம் வரைக்கும் எல்லாமே அப்படித்தான். ஆனால், இந்த நாட்டின் 20 சதவிகித தலித் மக்கள், பெரும்பான்மை மக்களோடு சேர்ந்து வாழ்வதற்காக மூவாயிரம் ஆண்டுகளாகப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த வித்தியாசத்தைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். யாரும் ‘தலித் நாடு’ அமைக்கப் போராட வில்லை. ‘எங்களைச் சேரிக்குள் ஒதுக்கித் தனிமைப்படுத்த வேண்டாம். சேர்ந்து வாழ்வோம், அன்பாக இருப்போம்’ என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்!” உணவு, உடை, பேச்சு, இலக்கியம், அரசியல், சினிமா, திருமணம், சாவு, கலாசாரம் எனச் சகல இடங்களிலும் நிறைந்திருக்கும் அசூசையான சாதிக்கு எதிராகத் தொடர்ந்து ஒலிக்கிறது எழுத் தாளர் அழகிய பெரியவனின் குரல். ‘குறடு’ என்ற இவரது சிறுகதை பொன்.சுதாவின் இயக்கத்தில் ‘நடந்த கதை’ என்ற பெயரில் குறும்படமாக வெளியானது. அது இப்போது உலகக் குறும்பட விழாவில் சிறந்த இந்தியக் குறும்படமாகத்…
எதுவுமே தேவையில்லை அது அத்தனை சுலபமானது கல்லுடைத்துக் கை நசுங்கி குருதி கொட்ட வேண்டாம் சுள்ளிகள் சேர்த்து சுமையாக்கி வெப்பமிக்க ஒற்றையடிப் பாதைகளில் வெற்றுக்கால்கள் கொப்பளிக்க நடக்கவொன்றும் தேவையில்லை தலைமீது கல்சுமந்து கழுத்து நரம்புகள் புடைக்க வேண்டாம் சுடும் வெயிலில் நடைபாதைகளில் தலைகாயக் குந்தி காலணிகளைப் பளபளப்பாக்கி காசுக்கு கையேந்த வேண்டியதில்லை மேனிகருக்க நிறுத்தங்களில் கூடைபழங்களை கூவிவிற்க குரல் வற்ற அவசியமில்லை வியர்வை உடல்நனைக்க கட்டாந்தரையை பண்படுத்த வாழ்வை பலி கொடுக்க வேண்டியிராது மகள் படிக்க காசில்லாமல் மாற்றுத் துணியில்லாமல் ஆண்டையிடம் அவமானப்படத் தேவையில்லை ஆம் அது அத்தனை சுலபமானது காவிகட்டிக் கொண்டு கண்ணைமூடி சாமியாராகிவிடுவது கதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல சகலமும் வரும் அறிவாய் நீ மனமே.