Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
பாலிவுட்டின் கவன ஈர்ப்புக்குரிய இளம் இயக்குநர். முதல் படமான ‘மஸான்’ மூலம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது, 2 கேன்ஸ் விருதுகள் என பாலிவுட்டில் பலரின் புருவங்களை உயர வைத்தவர். இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பாசறையைச் சேர்ந்தவர். ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். நெட்ஃபிளிக்ஸில் ஹிட்டடித்த ‘சேக்ரெட் கேம்ஸ்’ வெப் சீரிஸின் சிக்கலான 8 அத்தியாயங்களை இயக்கி அசத்தியவர். ‘சோர்’, ‘எபிபோனி’, ‘ஜூஸ்’ என்ற 3 குறும்படங்கள் மூலம் சர்வதேச அங்கீகாரங்களை வென்றவர். சமீபத்திய நெட்ஃபிளிக்ஸ் டாப் சார்ட் ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ ஆந்தாலஜி படத்தில் இவர் இயக்கிய ‘கீலி புச்சி’ பலத்த வரவேற்பைக் குவித்திருக்கிறது. “தலித் இயக்குநராக உங்களைப் பொதுவெளியில் அடையாளப்படுத்திக் கொள்வதன் நோக்கம் என்ன? பாலிவுட்டில் அதற்கு எதிர்வினைகள் இருக்குமே?’’ “என் முதல் படம் ‘மஸான்’ ஒரு தலித் இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான கதை. பிணங்களை எரியூட்டும் குலத்தொழில்…
The difference between the Aryans and the non-Aryans was cultural and not racial. The cultural difference centred round two points. CHENNAI: The difference between the Aryans and the non-Aryans was cultural and not racial. The cultural difference centred round two points. The Aryans believed in Chaturvarna. The non-Aryans were opposed to it. The Aryans believed in the performance of Yajna as the essence of their religion. The non-Aryans were opposed to Yajna. Dr. Ambedkar, Riddles in Hinduism, page: 163 It has been systematically planned and propagated for a long time that caste in India has survived in this country to this…
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ஜான் சாலமன், தமிழ் மற்றும் சீன (ஹொக்கியன்) இனக்கலப்புள்ள மூதாதையரைக் குடும்பப் பின்னணியாகக்கொண்டவர். புலம்பெயர்தல், காலனியாதிக்கத்தின் பண்பாட்டுத் தாக்கம், இனம் என்கிற கருத்தாக்கம் ஆகியவற்றின்மீது ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். தேசிய, இன அடையாளங்கள் குறிப்பாக அவை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்பதிலும் அவற்றின் வரலாற்றுப் பின்புலங்களின்மீதும் ஆய்வுக்கவனம் குவிக்கும் ஜான் சாலமனிடம் சிங்கப்பூரில் சாதி குறித்த வெளிப்படையான நேர்காணல். தங்கள் கல்வி, பணி, ஆராய்ச்சி, குடும்பம் ஆகியவற்றைப் பற்றி… நான் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசியராக 2016ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றுகிறேன். சிங்கப்பூர் வரலாறு, வெகுஜனக் கலாச்சாரம், பிரிட்டிஷ் பேரரசு, ஆசிய வரலாறு ஆகியவற்றைக் குறித்து அங்கு வகுப்புகள் நடத்துகிறேன். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு முன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் என்னுடைய கல்வியும் வேலையும் அமைந்திருந்தன. என் இளநிலைக் கல்லூரிப் படிப்பையும் முனைவர் பட்டத்தையும் நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பெற்றேன்.…
Dalit History Month: A Kannada novel decodes Dalit lives Aravind Malagatti’s novel ‘Karya’ is a searing portrait of Dalit lives in rural Karnataka The feeding of crows on the third day of the last rites is a key trope in ‘Karya’. (Getty Images) Running for barely 90 pages in a newly published English translation this month, Karya, a novella by Kannada writer Aravind Malagatti, packs in an entire universe. Set in a Dalit community in north Karnataka, the plot revolves around the third-day rituals involved in the last rites of a local woman. Bangaravva was virtuous in life, admired by neighbours of…
அண்ணல் அம்பேத்கரின் சட்ட அறிவு, சமூக அறிவு, அவரால் சமூகம் பெற்ற உரிமைகள், சமயம் குறித்த அவரின் பார்வை ஆகியவை குறித்த பல்வேறு ஆளுமைகளின் ஆடியோ, வீடியோ கருத்துகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு இது. சிறு வயதில் நாம் பார்க்கும் சம்பவங்களால் நம் மனதில் ஏற்படும் தாக்கமும், ஏன் எதற்கு என்று மனதில் எழும் சில கேள்விகளும்தான் நமது வாழ்கையைத் தீர்மானிக்கும். அந்தக் கேள்விகளுக்கான தேடலே சிலருக்கு வாழ்க்கையின் லட்சியமாக அமையும். அப்படி ஒரு சிறுவனின் கேள்விதான் பிற்காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக விதையிட்டது. அந்தச் சிறுவனின் பெயர் Dr.பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். சற்று வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிக் கூடத்தில் சக மாணவர்களுடன் ஒன்றாக உட்கார முடியாது. தரையில் பாய் விரித்து, தனியாகத்தான் உட்கார வேண்டும், பொதுத் தண்ணீர்க் குழாயில் தானாகப் போய்த் தண்ணீர் குடிக்கக் கூடாது. அந்தப் பள்ளியின் ஊழியர் ஒருவர்தான்…
நீர் எம் தலைவர் நீர் எம் மீட்பர்நீர் எம் நாயகர் நீர் எம் தோழர்நீர் எம் பாதை நீர் எம் வழித்துணைநீர் எம் கனவு நீர் எம் குரல்நீர் எம் எழுத்து நீர் எம் வாழ்வுநீர் எம் களிப்பு நீர் எம் கொண்டாட்டம். -அழகிய பெரியவன்
பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய இந்தியக் கிறிஸ்தவம் குறித்த ஆய்வுகளில் தென்னிந்தியா பற்றிய குறிப்புகள்
பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய இந்தியக்கிறிஸ்தவம் குறித்த ஆய்வுகளில் தென்னிந்தியா பற்றிய குறிப்புகள். இந்திய வரலாற்றில், இந்திய சமுதாய அரசியல் மறுமலர்ச்சியில் ஆர்வமுடைய எவரும் அண்ணல் அம்பேத்கரின் அனைத்து நூல்களையும் வாசிக்கவேண்டும் என்று பெருவிருப்பு கொள்வார் இதில் சந்தேகமில்லை. அதிலும் குறிப்பாக இந்து மதம், தீண்டாமை, சாதியம் குறித்து அவர் எழுதியுள்ள ஆய்வுகள் ஈடுஇணையற்றவை. ஆங்கில நூல் தொகுப்புகளில் 4,5 தொகுப்புகளாக இருந்த நூலாக்கம் பெறாத நூல்களாக (Unpublished writings) இருந்து வசந்த் மூன் அவர்களின் பேருழைப்பால் நூலாக்கம் பெற்ற நூல்தொகுப்புகள் தமிழில் ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து தொகுதிகளாக டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் மற்றும் இந்திய சமூக நீதித்துறை உழைப்பில் அழகாக மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இவற்றை பத்தாவது தொகுதியில் பகுதி4 சமயம் ஆகும். இதில் 4 இயல்கள் உள்ளன. அவை முறையே 27, 28, 29, 30 ஆகும். இவ்வியல்களில் 29, 30 பகுதிகளில் மிக விரிவாக டாக்டர்…
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் உலகின் பல பகுதிகளுக்கும் சமூக விடுதலையை நோக்கமாகக் கொண்டு பயணம் செய்து கொண்டே இருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஹைதராபாத் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகம் மற்றும் நிஜாம் பேரரசர் மாளிகை என பல இடங்களுக்கு 1932 ,1938,1944, 1950 ,1953 களில் என்று பல தடவை ஆந்திர மண்ணில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பயணம் செய்துள்ளார். இது பற்றிய பதிவுகள் ஆங்கிலத்தில் சிலவும் தெலுங்கில் சிலவும் வந்துள்ளன. இதுதொடர்பாக செய்திகள் கிடைத்தால் நண்பர்கள் பகிர வேண்டுகிறேன். 19381938 டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் அவுரங்காபாத்தில் அவுரங்காபாத் மாவட்ட ஒடுக்கப்பட்டோர் வகுப்பு மாநாட்டிற்கு அம்பேத்கர் தலைமை ஏற்றார் .ஐதராபாத் சமஸ்தானத்தில் நடைபெற்ற தீண்டப்படாத வகுப்பாரின் முதலாவது மாநாடு இதுவேயாகும். வரவேற்புக் குழுவின் தலைவர் தீண்டப்படாத வகுப்பாரின் இன்னல்களை நிரல் படுத்திக் கூறினார்….ஹைதராபாத் தீண்டப்படாத மக்களிடம் சுயமரியாதை இயக்கத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் உரையாற்றினார்.(பக்கம் 464- 465: டாக்டர்…
அயோத்திதாசபண்டிதரை நிறுவனராக கொண்ட தென்னிந்திய சாக்கிய பெளத்த சங்கத்தின் கட்டிடத்திற்கு வாடகை அளித்த வந்த ஆல்காட் மறைவிற்குப்பிறகு, #தென்னிந்தியசாக்கியபெளத்தசங்க(South Indian Sakkya Buddhist Society) கட்டடத்தை சொந்தமாகவே உருவாக்கும் பொருட்டு #அண்ணிபெசன்ட் அம்மையாரிடம் உதவிவேண்டி அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி.
“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும் மதத்தையே நான் விரும்புகிறேன்…” என்று சூளுரைத்த டாக்டர் அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளையொட்டி அவரைப்பற்றிய பெருமாள் முருகனின் கவிதையை பாடி நேற்று அரங்கேற்றம் செய்தார் வித்வான் டி.எம்.கிருஷ்ணா. கர்நாடக இசை எனும் பெரிய குடைக்குள் அம்பேத்கரை கரம்பிடித்து அழைத்துவந்துவிட்டார் அவர். “இனி எல்லா கச்சேரிகளிலும் பாபாசாகேப் பாடப்படுவார்” என்றார் பெருமிதத்துடன். “கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் என்றே கருத்தை நெஞ்சில் விதைத்த வீரர் போர்க்களத்தில் நின்று விளைத்த சூரர் அற்பச் சாதியை அழித்திட வந்தே அறிவை ஊட்டிய அரிய தீரர் – எம் அகத்தில் வாழ்கின்ற சிங்காரர் மாற்ற ஊற்று மதியில் நெருப்பு மநுவைக் கொல்ல வந்த மழுவாம் – அவர் மண்ணைப் பிளந்து தந்த கொழுவாம் ஆற்றல் வேகம் அருளும் மேகம் அனலின் சொற்கள் பிடித்து எழுவோம் –அவர் அடியில் விழுந்து வணங்கித் தொழுவோம் ஏற்றி வைத்து எம்மைக் காத்த ஏந்தல் நாங்கள் பெற்ற சீராம்…